நடிகர் சிவகுமாருக்கு கொரோனாவா?ஒற்றை புகைப்படத்தால் வெளியான உண்மை..!
பழம்பெரும் நடிகர் சிவகுமார் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று காரணமாக தனிமையில் இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் சிவகுமார், காக்கும் கரங்கள் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். மேலும், குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தமிழ் சினிமாவில் இவரது மகன்கள், சூர்யா - கார்த்தி என இருவருமே முன்னணி கதாநாயகர்களாக உள்ளனர். நடிகர் சூர்யா சமீபத்தில் நடித்து ஓடிடி தளத்தில் வெளியான "சூரரை போற்று" திரைப்படம் தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், சூர்யாவின் தந்தையும் மூத்த நடிகருமான சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர் தி.நகரில் இருக்கும் லக்ஷ்மி இல்லத்தில் தனிமையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
தொடர்ந்து அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும், ஆரோக்கியமான உணவுகளை அவர் எடுத்து கொள்வதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சிவகுமார் செல்பி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
இதன் மூலம் தான் நல்ல உடல் நிலையோடு ஆரோக்கியமாக உள்ளதை, சிவகுமார் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.