5 மாடி சொகுசு பங்களாவை பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடிய ஷாருகான்..! கொரோனா பீதியில் என்னவெல்லாம் பண்ணுறாங்க...
5 மாடி சொகுசு பங்களாவை பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடிய ஷாருகான்..! கொரோனா பீதியில் என்னவெல்லாம் பண்ணுறாங்க...
கொரோனா தொற்று நாளுக்கு நாள், இந்தியாவில் தீவிரமடைந்து கொண்டே செல்வதால், மக்கள் முதல் பிரபலங்கள் வரை, இந்த தொற்றுக்கு சீக்கிரம் விடிவு காலம் பிறக்காத என கடவுளிடம் பிராத்தனை செய்து வருகிறார்கள்.
அதிலும் இந்தியாவில் நேற்று மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது மக்களுக்கு புகிய அச்சத்தை ஏற்படுத்தியது. எனவே இந்திய அளவில் 11 லட்சத்தை கடந்துள்ளது கொரோனாவால் பாதிக்கபப்ட்டவர்கள் எண்ணிக்கை. மேலும் இதனால் உயிர்விடுபவர்கள் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று பிரபலங்களையும் விட்டுவைக்காமல் பதம் பார்த்து வருகிறது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவருடைய மகன் அபிஷேக், மற்றும் மகள் ஐஸ்வர்யா ராய் , மற்றும் அவருடைய மகள் ஆராத்யா ஆகியயோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மும்பையில் வேகமாக கொரோனா பரவி வருவதால், மற்ற பிரபலங்களும் சற்று விழிப்புடன் இருக்க துவங்கியுள்ளனர்.
அந்த வகையில், நடிகர் ஷாருக்கான் தன்னுடைய குடும்பத்தின் பாதுகாப்பிற்காக, 5 அடுக்கு சொகுசு வீடு மூடுவதும் பிளாஸ்டிக் பேப்பர் கொண்டு கவர் செய்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வீடு முழுவதும் பிளாஸ்டிக் கவர் சுற்றியுள்ள வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் ஷாருகான் வீடு முழுவதும் பிளாஸ்டிக் கவர் நீங்களே பாருங்கள்
வெளியில் செல்லாமல் இருப்பதையும் தண்டு, தன்னுடைய குடும்பத்தின் பாதுகாப்புக்கு இந்த செயலை செய்துள்ளார் ஷாருகான்