நானும் எவ்வளவு நாள் தான் கிராமத்து ஸ்டைலிலேயே நடிக்கிறது?... கோட் சூட்டில் பட்டையைக் கிளப்பும் சசிக்குமார்...!
செம்ம ஸ்டைலான கூலிங்கிளாஸ், சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் நெற்றி வரை சுருண்டு விழும் தலைமுடி என க்யூட்டாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார்.
கடந்த 2008ம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவில் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக பெயர் பெற்ற திரைப்படம் ‘சுப்ரமணியபுரம்’. இந்த படத்தின் மூலமாக இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் அறிமுகமானார் சசிக்குமார்.
அந்த படத்தை அடுத்து நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், தாரை தப்பட்டை, கிடாரி, குட்டிப்புலி, கென்னடி கிளப், நாடோடிகள் 2 ஆகிய படங்களில் கதையின் நாயகனாக அசத்தி வருகிறார்.
பெரும்பாலும் கிராமத்து கதைகளிலேயே நடித்து வரும் சசிக்குமாரை திரையிலும் சரி, வெளியிலும் சரி மிகவும் சாதாரணமான பேண்ட், சட்டையில் தான் அதிகம் பார்க்க முடியும்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ப்ரவுன், நேவி ப்ளூ கலர் உடையில் கண்ணில் செம்ம ஸ்டைலிஷாக கண்ணாடி அணிந்து கொண்டு சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் சசிக்குமார் நடத்திய போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலானது.
அந்த போட்டோ ஷூட்டிற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து கோட் சூட்டில் அசத்தலான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி முடித்துள்ளார் சசிக்குமார்.
சும்மா ஜம்முன்னு இருக்கும் சசிக்குமாரின் இந்த புகைப்படங்களை பார்த்து நிஜமா இது அவர் தானா என ஆச்சர்யப்படுகின்றனர்.
செம்ம ஸ்டைலான கூலிங்கிளாஸ், சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் நெற்றி வரை சுருண்டு விழும் தலைமுடி என க்யூட்டாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார்.
நானும் எவ்வளவு நாளைக்கு தான் கிராமத்து ஹீரோவாவே சுத்துறது... சிட்டி பாயாக நாங்களும் கலக்குவோம் என்பது உள்ளது சசிக்குமாரின் இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.