பிரபல ஹீரோவின் குட்டி மகனை தூக்கி கொஞ்சிய நயன்தாரா..! வைரலாகும் புகைப்படம்..!
நடிகை நயன்தாரா, பிரபல நடிகரின் மகனை கையில் தூக்கி வைத்து கொண்டு... அவரது குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காலங்களில் கூட, தனி விமானம் மூலம் கொச்சின் சென்று ஓணம் பண்டிகையை கொண்டாடினார் நயன்தாரா.
அதே போல் மீண்டும் தனி விமானம் மூலம் கோவா சென்று காதலர் விக்னேஷ் சிவன் பிறந்தநாள் மற்றும் தன்னுடைய அம்மாவின் பிறந்தநாளையும் விமர்சியாக கொண்டாடி மகிழ்ந்தார்.
தனி விமானம் மூலமே காதலர் விக்னேஷ் சிவனுடன் மீண்டும் சென்னைக்கே வந்தார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் மத்திய மாநில அரசுகள் கொடுத்த அனுமதியின் அடிப்படையில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.
நீண்ட ஓய்வுக்கு பின்னர், நயன் மலையாள படம் ஒன்றில் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.
12 வருடங்களுக்கு பின்னர் நயன்தாரா மீண்டும் மலையாள நடிகர் நடிகர் குஞ்சாக்கோ போபன் அவர்களுடன்இணைந்து நிழல் என்கிற படத்தில் நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்தது தான்.
இந்த படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது.
இதை தொடர்ந்து, நடிகர் குஞ்சாக்கோ போபன் குடும்பத்தினரை சந்தித்து, நயன்தாரா எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் அவரது மகனை நயன் கையில் தூக்கி வரித்துக்கொண்டுள்ளார். வைரலாக பரவி வரும் அந்த புகைப்படம் இதோ...