அண்ணன் சூர்யாவை எரிச்சலூட்ட ஒரே வழி இதுதான்..! அரிய புகைப்படத்தை வெளியிட்ட கார்த்தி!
பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன்களான சூர்யா - கார்த்தி இருவருமே தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.
இருவருக்குமே மாஸான ரசிகர்கள் கூட்டம் உள்ளதால், இவர்களை பற்றிய எந்த தகவல் வெளியானாலும், அது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி விடுகிறது.
வாரிசு நடிகர்கள் என்கிற அடையாளத்தோடு திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும், இருவருமே தமிழ் சினிமா ரசிகர்களில் நீங்காமல் இடம்பிடிக்க காரணம், இவர்களது கடின உழைப்பும்... நடிப்பில் மீது இவர்களுக்கு இருக்கும் ஈடுபாடும் தான்.
அந்த வகையில், சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான 'சூரரை போற்று' திரைப்படம், ஆஸ்கர் விருது பட்டியலில் 100 படங்களில் ஒன்றாக இடம்பிடித்ததே மிகப்பெரிய பெருமையாக பார்க்கப்பட்டது.
நடிப்பை தாண்டி, சூர்யா அகரம் என்கிற அமைப்பு மூலம் படிக்க துடிக்கும் மாணவ மாணவிகளை படிக்க வைத்து வருகிறார். அதே போல் நடிகர் கார்த்தி, விவசாயிகளை பாதுகாக்கும் அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் எப்போதும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் கார்த்தி, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறு வயதில் சூர்யா அண்ணனை எப்படி வெறுப்பேற்றுவேன் என்பது குறித்து பதிவு செய்து உள்ளார்.
சூர்யாவை வெறுப்பேற்ற எனக்கு கிடைத்த ஒரே வழி அவர் அணிந்திருக்கும் சட்டை போலவே நானும் அணிந்து கொள்வதுதான். இது போல் நீங்களும் உங்கள் அண்ணன் தம்பியுடன் ஒரே உடையை அணிந்து வெறுப்பேற்றி இருக்கிறீர்களா என்று கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு ஏராளமான ரசிகர்கள் தங்களுடைய சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.
இந்த புகைப்படத்தில் இருவருமே.. கொள்ளை அழகில் ஒரே உடையில் உள்ளனர். எத்தனை முறை பார்த்தாலும் சலித்து போகாத அந்த அரிய புகைப்படம் இதோ...