MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • அடி தூள்! தேர்வே இல்லாமல் 1,130 பேருக்கு வேலை! 'லேட்டரல் என்ட்ரி' முறையில் எடுக்கப் போறாங்க!

அடி தூள்! தேர்வே இல்லாமல் 1,130 பேருக்கு வேலை! 'லேட்டரல் என்ட்ரி' முறையில் எடுக்கப் போறாங்க!

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 1,130 பதவிகளுக்கு 'லேட்டரல் என்ட்ரி' முறையில் நிபுணர்களை நியமிக்க UPSC திட்டமிட்டுள்ளது. இந்த முறை மூலம், தனியார் துறை அல்லது பிற துறைகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் நேரடியாக நியமிக்கப்படுவார்கள்.

2 Min read
SG Balan
Published : Aug 06 2025, 07:42 PM IST| Updated : Aug 06 2025, 08:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
போட்டித்தேர்வு இல்லாமல் அரசு வேலை!
Image Credit : Getty

போட்டித்தேர்வு இல்லாமல் அரசு வேலை!

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1,130 பதவிகளுக்கு, 'லேட்டரல் என்ட்ரி' எனப்படும் நேரடி ஆள்சேர்ப்பு முறையில் நிபுணர்களை நியமிக்க மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) திட்டமிட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

25
'லேட்டரல் என்ட்ரி' முறை என்றால் என்ன?
Image Credit : social media

'லேட்டரல் என்ட்ரி' முறை என்றால் என்ன?

'லேட்டரல் என்ட்ரி' என்பது அனுபவத்தின் அடிப்படையில் பணி வாய்ப்பை வழங்கும் முறை ஆகும். இது அரசுப் பணியில் இல்லாத, தனியார் அல்லது பிற துறைகளில் பணிபுரிந்த நிபுணர்களை, மத்திய அரசில் மூத்த பதவிகளுக்கு நேரடியாக நியமிக்கும் ஒரு முறையாகும். இது வழக்கமான யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு (UPSC Civil Services Exam) மூலம் அல்லாமல், குறிப்பிட்ட துறைகளில் திறமை மற்றும் அனுபவம் கொண்டவர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு செயல்முறையாகும்.

Related Articles

Related image1
வீட்டிலிருந்தே மாதம் 7,000 சம்பளம்.. 10ம் வகுப்பு படித்த பெண்களுக்கு வேலை தரும் எல்ஐசி
Related image2
மாதம் 1.25 லட்சம் வரை சம்பளம்.! தேர்வே இல்லை TN Rights திட்டத்தில் வேலை வாய்ப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ
35
1130 பணியிடங்கள்
Image Credit : Twitter

1130 பணியிடங்கள்

இந்த முறை மூலம், 1 முதல் 13 ஆண்டுகள் வரையிலான அனுபவம் கொண்ட நிபுணர்களை, பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் உள்ள சுமார் 1,130 பணியிடங்களுக்கு நியமிக்க யூபிஎஸ்சி திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், அரசு நிர்வாகத்தில் புதிய திறமைகளையும், துறை சார்ந்த நிபுணத்துவத்தையும் கொண்டு வருவதாகும். பொருளாதாரம், நிதி, தொழில்நுட்பம், மேலாண்மை போன்ற துறைகளில் இருந்து நிபுணர்களை நியமிப்பதன் மூலம், கொள்கை வகுத்தல் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதை மேம்படுத்தலாம் என மத்திய அரசு கருதுகிறது.

45
அனுபவத்துக்கு முன்னுரிமை
Image Credit : Asianet News

அனுபவத்துக்கு முன்னுரிமை

கடந்த சில ஆண்டுகளாக, மத்திய அரசு பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களை நேரடியாக நியமித்து வருகிறது. 2024-ஆம் ஆண்டில், 45 பணியிடங்களுக்கான 'லேட்டரல் என்ட்ரி' அறிவிப்பை யூபிஎஸ்சி வெளியிட்டது. ஆனால், இடஒதுக்கீடு கொள்கை தொடர்பான சர்ச்சைகள் காரணமாக அந்த அறிவிப்பு பின்னர் திரும்பப் பெறப்பட்டது. இந்த முறை, அந்தச் சிக்கல்களைத் தீர்த்து, புதிய முறையில் ஆள்சேர்ப்பு நடத்துகிறது.

“இந்த வேலைவாய்ப்பு லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கும் தொடக்க நிலை பதவிகளைப் போல இல்லை. இந்த வாய்ப்பைப் பற்றி பலருக்கும் தெரியவில்லை. தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கிறார்கள். இது சில ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது.” என என யூபிஎஸ்சி தலைவர் அஜய் குமார் கூறியுள்ளார்.

“இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இந்தப் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு தற்போதைய விதிகளின்படி நடக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

55
நிர்வாகத்தை மேம்படுத்தும் நிபுணர்கள்
Image Credit : Twitter

நிர்வாகத்தை மேம்படுத்தும் நிபுணர்கள்

இந்த 'லேட்டரல் என்ட்ரி' முறை, நிர்வாகத்தில் திறமையை அதிகரிப்பதோடு, பொது மற்றும் தனியார் துறைக்கு இடையே ஒரு இணைப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது பாரம்பரிய அரசு பணியாளர்களுக்கு மத்தியில் போட்டித்தன்மையை அதிகரிக்கும் என்றும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
யுபிஎஸ்சி
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு
இந்தியா
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved