- Home
- Career
- Training: தினமும் ரூ.2,000 வருமானம்.! அட்டகாசமான வருமானத்திற்கு அரசு வழங்கும் பயிற்சி.! எப்போ தெரியுமா?
Training: தினமும் ரூ.2,000 வருமானம்.! அட்டகாசமான வருமானத்திற்கு அரசு வழங்கும் பயிற்சி.! எப்போ தெரியுமா?
தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், மூலிகைப் பொருட்கள் தயாரிப்பு குறித்து 3 நாள் நேரடிப் பயிற்சி அளிக்கிறது. சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்று தினமும் ₹2000 வரை சம்பாதிக்கலாம்.

சம்பாதிப்பது ரொம் ஈசி.!
சொந்தமாக தொழில் தொடங்கி கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா? மாதம் முழுவதும் உழைத்து வாங்கும் சம்பளத்தை, ஒரு சில நாட்களில் ஈட்ட வழி கிடைத்தால் எப்படி இருக்கும்? ஆம்! தமிழக அரசின் ஒரு சிறப்பான திட்டம் இப்போது உங்கள் கதவைத் தட்டுகிறது.
இயற்கை மீது பெருகும் ஆர்வம் - கொட்டிக்கிடக்கும் வாய்ப்பு!
இன்று மக்கள் மத்தியில் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. ரசாயனம் கலந்த பொருட்களைத் தவிர்த்து, இயற்கை மற்றும் மூலிகைப் பொருட்களை (Herbal Products) தேடித்தேடி வாங்குகிறார்கள். இந்தத் தேவையை ஒரு தொழிலாக மாற்றினால், தினமும் 2,000 ரூபாய் முதல் அதற்கும் மேல் தாராளமாக லாபம் ஈட்ட முடியும்.
தமிழக அரசின் அசத்தல் பயிற்சி!
மக்களின் இந்த ஆர்வத்தைப் புரிந்து கொண்டு, தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), கரூரில் நேரடிப் பயிற்சியை வழங்குகிறது.
- பயிற்சி எது பற்றி?: மூலிகைப் பொருட்கள் தயாரிப்பு.
- எப்போது?: மார்ச் 12 முதல் 14 வரை (3 நாட்கள்).
- நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
- பயிற்சி கட்டணம்: வெறும் ₹5,000 மட்டுமே.
யாரெல்லாம் பங்கேற்கலாம்?
வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள், வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள அடிதட்டு மக்கள் என அனைவரும் இதில் பங்கேற்கலாம். தரம் வாய்ந்த சோப்பு, கூந்தல் தைலம், பொடிகள் ஆகியவற்றைத் தயாரிப்பது மட்டுமின்றி, அதை எப்படிச் சந்தைப்படுத்துவது என்பதையும் அரசு அதிகாரிகள் உங்களுக்குக் கற்றுத் தருவார்கள்.
மக்களே உடனே முந்துங்கள்!
இந்த 3 நாள் பயிற்சி உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஒரு தொடக்கமாக அமையலாம். கரூரில் நடக்கும் இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
9994322859 / 9080609809
தமிழக அரசின் MSME துறையின் இந்த வழிகாட்டுதலுடன், குறைந்த முதலீட்டில் உங்கள் தொழிலைத் தொடங்கி நீங்களும் ஒரு வெற்றிகரமான முதலாளியாக மாறுங்கள்!
நிர்வாக ரீதியான விசாரணைகளுக்கு!
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் (EDII-TN) சென்னை தலைமை அலுவலக முகவரி இதோ!
தலைமை அலுவலக முகவரி
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600032.
நீங்கள் கரூரில் நடைபெறும் பயிற்சி அல்லது பிற மாவட்ட அளவிலான செயல்பாடுகள் குறித்து கூடுதல் தகவல்கள் பெற விரும்பினால், அந்தந்த மாவட்டத் திட்ட மேலாளர்களை அல்லது இந்த சென்னை அலுவலகத்தை நேரடியாக அணுகலாம்.

