- Home
- Career
- TNPSC தேர்வர்களுக்கு 'ஸ்வீட்' நியூஸ்.. குரூப் 2 மறுதேர்வு தேதி இதுதான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
TNPSC தேர்வர்களுக்கு 'ஸ்வீட்' நியூஸ்.. குரூப் 2 மறுதேர்வு தேதி இதுதான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னையில் தேர்வு மையங்கள் அமைப்பதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், மறு தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

TNPSC தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. அந்தந்த பதவிகளை பொறுத்து குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் அரசு வேலையில் சேர்ந்து வருகின்றனர்.
கடைசி நேரத்தில் ரத்தான தேர்வு
இதற்கிடையே சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர் பதவிகள் அடங்கிய குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களை நிரப்ப முதல்நிலைத் தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகின.
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு நேற்று (பிப்ரவரி 8) நடைபெற இருந்தது. ஆனால் சென்னையில் தேர்வு மையங்கள் அமைப்பதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக தேர்வு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
குரூப் 2 மறுதேர்வு தேதி இதுதான்
இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு மார்ச் 15ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில் 'நேற்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுக்கான (தொகுதி-II (ம) IIA பணிகள்) முதன்மைத் தேர்வின் இரண்டு தாள்களான -தாள்-I. தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் தாள்-II பொது அறிவு, பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு ஆகிய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மறுதேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என செய்தி வெளியிடப்பட்டது. அதன்படி, மார்ச் 15ம் தேதி காலை பொது அறிவு தாள் தேர்வு, பிற்பகலில் தமிழ் தகுதி, விரிவாக விடை அளிக்கும் தேர்வு நடைபெறும்.
TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மேற்கண்ட தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) 28.022028-க்குள் தொடர்புடைய அனைத்து தேர்வர்களுக்கும் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வர்கள் வழக்கமான முறையில் OTR எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்த தகவல்கள் அனைத்து தேர்வர்களுக்கும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி (E-Mail) /குறுஞ்செய்தி (SMS) மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.
ஹால் டிக்கெட் எப்போது வெளியிடப்படும்?
எதிர்வரும் 22.02.2026 மு.ப. அன்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-IIக்கான முதன்மை தேர்வு வழக்கம்போல் அதே தேதியில் நடைபெறும். இதற்கான தகவல்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு 11.02.2026 அன்று வெளியிடப்படும். இது குறித்த அனைத்து தேர்வர்களுக்கும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி (E-Mail) / குறுஞ்செய்தி (SMS) மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.

