MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025: தேர்வே இல்லை! உடனே விண்ணப்பிக்கவும்!

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025: தேர்வே இல்லை! உடனே விண்ணப்பிக்கவும்!

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025! செவிலியர், MLHP, மருந்தாளுநர் மற்றும் பல பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ₹23,000 வரை சம்பளம். தேர்வுகள் இல்லை, நேரடி நேர்காணல்!

3 Min read
Suresh Manthiram
Published : May 11 2025, 01:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

தென்காசி மாவட்ட நலவாழ்வு சங்கம், தென்காசி மாவட்டத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த வேலைவாய்ப்புக்கு எழுத்துத் தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. தகுதியான நபர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

210
காலியிடங்கள் மற்றும் சம்பளம்:

காலியிடங்கள் மற்றும் சம்பளம்:

மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் வழங்கப்படும் சம்பளம் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

1.  பணியின் பெயர்: செவிலியர் (Staff Nurse)
    சம்பளம்: மாதம் ₹18,000/-
    காலியிடங்கள்: 02
    கல்வி தகுதி: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் பொது செவிலியர் மற்றும் மகப்பேறு மருத்துவத்தில் டிப்ளமோ அல்லது                பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
 

Related Articles

Related image1
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் வேலை! உடனே விண்ணபிக்கவும்...
Related image2
IOB Recruitment 2025 : 400+ அதிகாரி பணியிடங்கள்! டிகிரி முடித்தால் போதும் ரூ.85,920 சம்பளம்
310

2.  பணியின் பெயர்: இடைநிலை சுகாதார பணியாளர் (MLHP)
    சம்பளம்: மாதம் ₹18,000/-
    காலியிடங்கள்: 05
    கல்வி தகுதி: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் பொது செவிலியர் மற்றும் மகப்பேறு மருத்துவத்தில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
 

410

3.  பணியின் பெயர்: துணை செவிலியர் (ANM)
    சம்பளம்: மாதம் ₹14,000/-
    காலியிடங்கள்: 01
    கல்வி தகுதி: சென்னை டிபிஎச் & பிஎம் வழங்கிய மல்டிபர்பஸ் ஹெல்த் ஒர்க்கர் (பெண்) பயிற்சி படிப்பை முடித்திருக்க வேண்டும் (15.11.2012க்கு முன் 18 மாதங்கள், 15.11.2012க்கு பின் 24 மாதங்கள்). தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
 

510

4.  பணியின் பெயர்: மருந்தாளுநர் (Pharmacist)
    சம்பளம்: மாதம் ₹15,000/-
    காலியிடங்கள்: 01
    கல்வி தகுதி: டி.பார்ம் அல்லது பி.பார்ம் முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
 

610

5.  பணியின் பெயர்: RMNCH Counsellor
    சம்பளம்: மாதம் ₹18,000/-
    காலியிடங்கள்: 01
 கல்வி தகுதி: சமூகப் பணி, பொது நிர்வாகம், உளவியல், சமூகவியல், வீட்டு அறிவியல், மருத்துவமனை மற்றும் சுகாதார மேலாண்மை ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் அல்லது இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சுகாதாரத் துறை அல்லது தொடர்புடைய துறையில் 1-2 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும். சிறந்த தகவல் தொடர்பு திறன், உள்ளூர் மொழி சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். நல்ல தரவு மேலாண்மை திறன் மற்றும் எம்எஸ் ஆபிஸ் தொடர்பான அடிப்படை கணினி திறன் பெற்றிருக்க வேண்டும். குழுவாக இணைந்து பணிபுரியும் திறன் அவசியம்.
 

710

6.  பணியின் பெயர்: Occupational Therapist
    சம்பளம்: மாதம் ₹23,000/-
    காலியிடங்கள்: 01
    கல்வி தகுதி: இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஆக்குபேஷனல் தெரபியில் இளங்கலைப் பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

810
Jobs In Bihar

Jobs In Bihar

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் இல்லை.

தேர்வு முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடி நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
 

910

முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.05.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.05.2025

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் [https://tenkasi.nic.in/](https://tenkasi.nic.in/) என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான கல்விச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
 

1010

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், தென்காசி மாவட்டம் – 627811.

பூர்த்தி செய்யப்படாத அல்லது கடைசி தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை முழுமையாக சரிபார்த்துக் கொள்ளவும். தென்காசி மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். உடனே விண்ணப்பிக்கவும்!

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்
வேலை வாய்ப்பு
வேலைவாய்ப்பு
ஆட்சேர்ப்பு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved