MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • மாணவர்களே தயாரா? மத்திய அரசின் கல்வி உதவித்தொகை: ரூ. 25,000 வரை பெறலாம்! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

மாணவர்களே தயாரா? மத்திய அரசின் கல்வி உதவித்தொகை: ரூ. 25,000 வரை பெறலாம்! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

மத்திய அரசு பீடி, சுரங்க, சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ. 25,000 வரை கல்வி உதவித்தொகை வழங்குகிறது. 2025-26 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில். ஆதார் இணைப்பு மற்றும் வங்கி கணக்கு கட்டாயம்.

2 Min read
Suresh Manthiram
Published : Jun 09 2025, 09:30 PM IST| Updated : Jun 09 2025, 09:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கல்வி கனவுகளுக்கு ஒரு நிதி ஆதாரம்!
Image Credit : Getty

கல்வி கனவுகளுக்கு ஒரு நிதி ஆதாரம்!

இந்திய அரசின் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஒரு அரிய வாய்ப்பை அறிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் தொழில்முறைப் படிப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கு, 2025-26 ஆம் நிதி ஆண்டில், ரூபாய் 1000/- முதல் ரூபாய் 25,000/- வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இந்தக் கல்வி உதவித்தொகையைப் பெறுவதற்கு மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருநெல்வேலி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

25
விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய விதிகள்!
Image Credit : Getty

விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய விதிகள்!

மாணவர்கள் [https://scholarships.gov.in] என்ற தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில், ஒருமுறை பதிவு (OTR) மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். ஒவ்வொரு மாணவரும், தங்களுக்கென தனியாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மைய வங்கி அமைப்பு என்ற தொழில்நுட்பமுறையில், தங்கள் சேமிப்புக் கணக்கை தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளுடன் பெற்றிருக்க வேண்டும். முக்கியமாக, விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை தங்கள் சேமிப்பு வங்கிக் கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராகக் கருதப்படுவர்.மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் கல்வி நிதி பெறுவதற்கு, விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண்ணைப் பயன்படுத்துவதற்கு மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.

Related Articles

Related image1
பி.எச்.டி படிக்க மாதம் தோறும் ரூ.30 ஆயிரம் உதவித்தொகை : யாரெல்லாம் விண்ணபிக்கலாம்? முழு விவரம்...
Related image2
மாதம் ரூ.2ஆயிரம் உதவித்தொகை.! மாணவர்களுக்கு அசத்தலான அறிவிப்பு- உடனே விண்ணப்பிக்க அழைப்பு
35
கல்வி நிறுவனங்களின் பங்கு – முக்கியத்துவம்!
Image Credit : Getty

கல்வி நிறுவனங்களின் பங்கு – முக்கியத்துவம்!

இந்தக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். பதிவு செய்யப்படாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், [https://scholarships.gov.in] என்ற தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில் முதலில் பதிவு செய்தல் வேண்டும். அதன் பிறகு, மேற்குறிப்பிட்ட வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து, ஒப்புதல் வழங்கி, தங்களது கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள், மின்னணு விண்ணப்பங்களை தங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சரிபார்க்காமல், அடுத்தகட்ட சரிபார்க்கும் முறைக்குச் சமர்ப்பிக்கும் பட்சத்தில், அந்த விண்ணப்பங்களை மேற்கொண்டு உதவித்தொகை பெறுவதற்கு செயல்படுத்த இயலாது என மத்திய நல ஆணையர் தெரிவித்துள்ளார்.

45
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதிகள் மற்றும் தொடர்பு விவரங்கள்!
Image Credit : Getty

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதிகள் மற்றும் தொடர்பு விவரங்கள்!

ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 31, 2025 ஆகும். மற்ற அனைத்து உயர் கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 31, 2025 ஆகும். 

55
மேலும் விளக்கங்கள்
Image Credit : Google

மேலும் விளக்கங்கள்

மேலும் விளக்கங்கள் மற்றும் உதவி பெறுவதற்கு மத்திய நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு, தரைத்தளம், சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகம், திரு.வி.க.தொழில் பூங்கா கிண்டி, சென்னை 600032 என்ற முகவரியிலோ, அல்லது wclwo.chn-mole@gov.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, 044-29530169 என்ற தொலைபேசி எண்ணிலோ மத்திய நல ஆணையர் கே.ஏ.செபாஸ்டியன் (C.L.S.), தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி அவர்களை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved