MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர்வு..! அடேங்கப்பா! இவ்வளவா? வாகன ஓட்டிகள் ஷாக்..!

சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர்வு..! அடேங்கப்பா! இவ்வளவா? வாகன ஓட்டிகள் ஷாக்..!

தமிழ்நாட்டின் 38 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்ப்போம். 

2 Min read
Rayar r
Published : Aug 31 2025, 02:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Toll Plaza Rates Increased in Tamil Nadu from Midnight
Image Credit : Gemini

Toll Plaza Rates Increased in Tamil Nadu from Midnight

இந்தியா முழுவதும் தேசிய நெஞ்சாலைகளில் டோல் கேட் எனப்படும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நெஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 1,44,634 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 892 சுங்க சாவடிகள் செயல்பட்டு வருகிறது. 

இந்த டோல் கேட்டில் வாகனங்கள் நீண்ட நேரம் அணிகுவத்து நிற்பதை தவிர்க்க ஆன்லைன் வாயிலாக சுங்ககட்டணம் கட்டும் பாஸ்ட் டேக் (FASTag) சேவையை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்நிலையில், சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளன.

25
சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது
Image Credit : our own

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது

தமிழ்நாட்டை பொறுத்தவரை தருமபுரி, கிருஷ்ணகிரி, விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 38 சுங்கச் சாவடிகளின் சுங்கக் கட்டணம் நாளை (அதாவது இன்று நள்ளிரவு) முதல் உயர உள்ளது. ரூ.5 முதல் ரூ.20 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கெனவே நாட்டில் விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவு உள்ளது.

Related Articles

Related image1
FASTag Annual Pass: இனி சுங்கச்சாவடி கட்டணம் வெறும் ரூ.15 தான்! இன்று அமலுக்கு வந்த புதிய விதி
Related image2
Toll Tax : சுங்கச்சாவடி கட்டணங்களில் 50% குறைப்பு.. யார் யாருக்கு கிடைக்கும்?
35
மக்கள் பெரும் பாதிப்பு
Image Credit : Google

மக்கள் பெரும் பாதிப்பு

பெட்ரோல், டீசல் விலையும் இறக்கை கட்டி பறக்கிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு மக்கள் மீது பெரும் சுமையை வைத்துள்ளது. சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 இதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாசும், சுங்கக்கட்டண வசூல், கட்டண உயர்வு ஆகியவற்றில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை. சாலை அமைப்பதற்காக செய்யப்பட்ட செலவு எவ்வளவு? அதில் எடுக்கப்பட்ட முதலீடு எவ்வளவு? என்பது குறித்த எந்த விவரமும் வெளியிடப்படாமல் காலவரையின்றி சுங்கக்கட்டணம் செலுத்த மக்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கட்டாயப்படுத்துவது நியாயமல்ல என்று தெரிவித்துள்ளார்.

45
அன்புமணி வெளிப்படையான கேள்வி
Image Credit : Facebook / Anbumani

அன்புமணி வெளிப்படையான கேள்வி

தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணத்தில் 60% மட்டும் தான் அதற்காக செய்யப்பட்ட முதலீட்டை ஈடு செய்வதற்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. மீதமுள்ள 40% தொகை பராமரிப்புக்காக செலவிடப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான சாலைகள் பராமரிக்கப்படுவதே இல்லை. நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிக்கத் தவறும் நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு சுங்கக்கட்டணத்தை உயர்த்துவதற்கு தார்மீக ரீதியில் எந்த உரிமையும் கிடையாது என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

55
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்
Image Credit : Google

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்

தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டும் தான் இருக்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி பார்த்தால் தமிழகத்தில் அதிகபட்சமாக 20 சுங்கச்சாவடிகள் மட்டும் தான் இருக்க வேண்டும். ஆனால், இப்போது 82 சுங்கச்சாவடிகள் உள்ளன. சுங்கக் கட்டண உயர்வு ஊர்தி வைத்திருப்பவர்களை மட்டுமே பாதிப்பதில்லை. சுங்கக்கட்டண உயர்வைத் தொடர்ந்து தனியார் வாகனங்களின் வாடகை உயர்த்தப்படும்.

 சரக்குந்துகளின் வாடகை உயர்த்தப்படும் என்பதால் அதற்கு இணையாக அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரக்கூடும். ஆகவே கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என அன்புமணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சுங்கச்சாவடி கட்டணங்கள்
வணிகம்
இந்தியா
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved