- Home
- Business
- அய்யய்யோ! வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம்! கோவை, மதுரையில் நிலவரம் என்ன?
அய்யய்யோ! வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம்! கோவை, மதுரையில் நிலவரம் என்ன?
தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இன்றைய தங்கம் விலை என்ன என்பதை பார்ப்போம்.

தங்கம் விலை
தங்கம் ஆண்கள்,பெண்கள் என அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அந்த வகையில் உலக நாடுகள் பட்டியலில் இந்தியாவில் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இந்நிலையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களில் கிடு கிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் சர்வதேச சந்தையில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதன் விளைவாகவே இந்திய சந்தையில் தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
gold rate
தங்கம் விலை உயர்வுக்கு என்ன காரணம்?
மற்றொன்று உக்ரைன்-ரஷ்யா போர், காசா-இஸ்ரேல் போர் மற்றும் தங்கத்தை பலரும் பாதுகாப்பான முதலீடாக கருதி அதில் முதலீடு செய்தும் ஒரு காரணம். போதாக்குறைக்கு இப்போது டிரம்ப் ஈரானுக்கும் மிரட்டல் விடுக்கிறார். இப்படி உலகெங்கும் போர் சுழல் அதிகரித்துள்ளது.
gold rate
டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரி விதிப்பு
இது ஒரு பக்கம் இருக்க டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரி விதிப்பது காரணமாக தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டுமா அல்லது தங்கம் விலை குறையுமா என்பதை பார்க்க வேண்டும். கடந்த சில மாதங்களிலேயே சவரன் ஒன்றுக்கு 15ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
gold rate
நேற்றைய தங்கம் விலை
இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்தது. சவரன் ரூ.68,080-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராம் ரூ.8,510-க்கு விற்பனையானது.
gold rate
இன்றைய தங்கம் விலை
இன்றைய (ஏப்ரல் 03) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.68,480-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.8,560-க்கு விற்பனையாகிறது. அதேபோல் கோவை மற்றும் மதுரையிலும் சவரன் ரூ.68,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.