MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • விநாயகர் சதுர்த்தி அன்று பங்குச் சந்தை திறந்திருக்குமா அல்லது மூடப்படுமா?

விநாயகர் சதுர்த்தி அன்று பங்குச் சந்தை திறந்திருக்குமா அல்லது மூடப்படுமா?

2025 ஆம் ஆண்டிற்கான NSE மற்றும் BSE பங்குச்சந்தை விடுமுறை நாட்காட்டியை இந்தக் கட்டுரை வழங்குகிறது. ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான முக்கிய விடுமுறை நாட்கள் பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Aug 26 2025, 10:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பங்குச்சந்தை விடுமுறைகள்
Image Credit : Google

பங்குச்சந்தை விடுமுறைகள்

தேசிய பங்குச்சந்தை (NSE) வெளியிட்ட அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்காட்டியின்படி, ஆகஸ்ட் 27, 2025 அன்று விநாயகர் சதுர்த்தி காரணமாக வர்த்தகம் நடைபெறாது. இது ஆகஸ்ட் மாத இரண்டாவது விடுமுறை நாள் ஆகும். முதல் விடுமுறை ஆகஸ்ட் 15 அன்று, இந்தியா தனது 79வது சுதந்திர தினத்தை கொண்டாடிய தினம். இதனுடன், ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய தேதிகள் சனி, ஞாயிறு என்பதால் சந்தை வழக்கம்போல் மூடப்படும்.

25
செப்டம்பர் மாத விடுமுறைகள்
Image Credit : Google

செப்டம்பர் மாத விடுமுறைகள்

செப்டம்பர் 2025 இல் சிறப்பு சந்தை விடுமுறை இல்லை. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் வர்த்தகம் நடைபெறாது. அதாவது, செப்டம்பர் 6-7, 13-14, 20-21 மற்றும் 27-28 தேதிகளில் NSE, BSE இரண்டும் மூடப்பட்டிருக்கும். எனவே, செப்டம்பரில் முதலீட்டாளர்களுக்கு வழக்கமான வார இறுதி நாட்களைத் தவிர வேறு இடையூறு இருக்காது.

Related Articles

Related image1
தொடர் விடுமுறை.! பொதுமக்களுக்கு குஷியான தகவலை சொன்ன போக்குவரத்து துறை
Related image2
100, 200 ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு
35
அக்டோபர் முதல் டிசம்பர் வரை
Image Credit : standret@freepik

அக்டோபர் முதல் டிசம்பர் வரை

அக்டோபர் மாத பல முக்கிய திருநாள்கள் உள்ளன. அக்டோபர் 2 அன்று காந்தி ஜெயந்தி, அக்டோபர் 21 அன்று தீபாவளி, அக்டோபர் 22 அன்று பலிபிரதிபதா ஆகிய காரணங்களால் சந்தை மூடப்படும். தீபாவளி நாளான அக்டோபர் 21 அன்று மட்டும் முஹூர்த்த வர்த்தகம் நடைபெறும். இது ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டாளர்கள் அவளுடன் எதிர்பார்க்கும் சிறப்பு அம்சமாகும்.

45
பங்கு சந்தை மூடப்படும் நாட்கள்
Image Credit : our own

பங்கு சந்தை மூடப்படும் நாட்கள்

நவம்பரில், நவம்பர் 5 அன்று பிரகாஷ் குருபூர்ப் (ஸ்ரீ குருநானக் தேவ் ஜி) காரணமாக சந்தை மூடப்படும். டிசம்பரில், டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் விடுமுறை காரணமாக NSE, BSE இரண்டும் மூடப்படும். இவை தவிர, அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வழக்கம்போல் சந்தை இயங்காது.

55
முதலீட்டாளர்களுக்கு அவசியமான திட்டமிடல்
Image Credit : freepik

முதலீட்டாளர்களுக்கு அவசியமான திட்டமிடல்

சந்தை விடுமுறை நாட்கள் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு மிகவும் முக்கியமானவை. திருவிழாக்காலத்தில் சந்தை நகர்வுகள் அதிகமாக மாறக்கூடும். எனவே, விடுமுறை நாட்காட்டியின்படி முதலீட்டு திட்டத்தை வகுப்பது மூலம் தேவையற்ற அபாயங்களைத் தவிர்க்கலாம். குறிப்பாக, முஹூர்த்த வர்த்தகம் போன்ற சிறப்பு தினங்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம். விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்துகொள்வது, நீண்டகால முதலீட்டு உத்தியை சீராகப் பின்பற்ற உதவும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பங்குச்சந்தை
மும்பை பங்குச் சந்தை
இந்திய தேசிய பங்குச் சந்தை
விடுமுறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.20 கட்டினால் ரூ.2 லட்சம் காப்பீடு.. ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு திட்டம்
Recommended image2
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி டிக்கெட் புக் செய்தால் கேஷ்பேக்.. சூப்பர் ஆஃபர்!
Recommended image3
இந்த 5 விஷயங்கள் நடந்தால்.. உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.. உடனே செக் பண்ணுங்க
Related Stories
Recommended image1
தொடர் விடுமுறை.! பொதுமக்களுக்கு குஷியான தகவலை சொன்ன போக்குவரத்து துறை
Recommended image2
100, 200 ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved