- Home
- Business
- SBI Alert: எஸ்பிஐ வெளியிட்ட அவசர அறிவிப்பு.! வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் முக்கிய வேண்டுகோள்.!
SBI Alert: எஸ்பிஐ வெளியிட்ட அவசர அறிவிப்பு.! வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் முக்கிய வேண்டுகோள்.!
SBI Alert: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளது. 2 நாட்கள் வேலை நிறுத்தம் உள்ள நிலையில் எஸ்பிஐ முக்கிய அறிவுரைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் முன்னணியில் இருக்கும் எஸ்பிஐ, வாடிக்கையாளர் சேவையை மையமாகக் கொண்டு செயல்படும் நிறுவனமாக அறியப்படுகிறது. இதனால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் குறித்த தகவல் வெளியானது, வங்கி உடனடியாக தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. வங்கி தொடர்பான பணிகள் உள்ளவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

வேலைநிறுத்தம்
எஸ்பிஐ வெளியிட்ட அறிவிப்பில், அகில இந்திய ஸ்டேட் பேங்க் ஊழியர் அமைப்பு அறிவித்திருந்த வேலைநிறுத்த சூழ்நிலையிலும் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கிளைகளில் ஏற்படக்கூடிய சிரமங்களைக் கருத்தில் கொண்டு, மாற்று வங்கி சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு வங்கி ஆலோசனை வழங்கியது.
பணம் எடுக்க வேண்டியவர்கள்
இதன் ஒரு மூன்று முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. அவசரமாக பணம் எடுக்க வேண்டியவர்கள் ஏடிஎம் மற்றும் ADWM வசதிகளை பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர் சேவை புள்ளி (CSP) மையங்களும் பயன்பாட்டுக்கு உள்ளன. அதோடு இணைய வங்கி சேவை, YONO செயலி, மொபைல் பேங்கிங், யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களை அதிகமாக பயன்படுத்துமாறு வங்கி கேட்டுக்கொண்டது. சேவையில் இடையூறு ஏற்பட்டதால் வருத்தம் தெரிவித்து எஸ்பிஐ பதிவு செய்தது.
வங்கி செயல்பாடுகள்
வேலைநிறுத்தம் தொடர்பான தகவல் முதலில் வெளியாகும்போது, வாடிக்கையாளர்களிடையே கிளை சேவைகள் பாதிக்கப்படுமா என்ற அச்சம் எழுந்தது. ஆனால் பின்னர் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கத்திற்கிடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி, மே 25 மற்றும் 26ஆம் தேதிகளுக்கு திட்டமிடப்பட்ட வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கிளை செயல்பாடுகள் வழக்கம்போல நடைபெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
டிஜிட்டல் பேங்கிங்
இருப்பினும், வங்கி பணிகளை கடைசி நேரத்தில் தள்ளாமல் முன்கூட்டியே முடித்துக்கொள்வது பாதுகாப்பான தேர்வாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக இன்று டிஜிட்டல் பேங்கிங் சேவைகள், வாடிக்கையாளர்களின் தினசரி நிதி பரிவர்த்தனைகளில் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

