- Home
- Business
- SSY Withdrawal: மகளுக்காக சேமித்த பணம்.. 21 வயதுக்கு முன் எடுக்க முடியுமா? சுகன்யா சம்ரிதி யோஜனா ரூல்ஸ் இதோ
SSY Withdrawal: மகளுக்காக சேமித்த பணம்.. 21 வயதுக்கு முன் எடுக்க முடியுமா? சுகன்யா சம்ரிதி யோஜனா ரூல்ஸ் இதோ
SSY Withdrawal: சுகன்யா சம்ருத்தி யோஜனா கணக்கில் பணம் போட்ட பிறகு, தேவையான நேரத்தில் எடுக்க முடியுமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. 21 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா அல்லது இடைப்பட்ட காலத்தில் பணம் பெற வழி இருக்கிறதா? என்பதை காண்போம்.

சுகன்யா சம்ரிதி யோஜனா விதிகள்
மகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் பல பெற்றோர்கள் தேர்வு செய்யும் முதலீட்டு திட்டங்களில் முக்கியமானதாக சுகன்யா சம்ரிதி யோஜனா பார்க்கப்படுகிறது. அதிக வட்டி, நீண்டகால சேமிப்பு மற்றும் அரசு ஆதரவு போன்ற காரணங்களால் இந்த திட்டம் பல குடும்பங்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. ஆனால், இந்த திட்டம் குறித்து இன்று ஒரு பெரிய குழப்பம் நிலவுகிறது. அதாவது, கணக்கில் செலுத்திய பணத்தை 21 ஆண்டுகள் நிறைவதற்கு முன்பே எடுக்க முடியுமா என்ற கேள்விதான்.

21 ஆண்டு திட்டம்
பொதுவாக, சுகன்யா சம்ரிதி யோஜனா ஒரு நீண்டகால சேமிப்பு திட்டமாக உள்ளது. கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 21 ஆண்டுகள் முடிந்த பிறகே முழுத் தொகையும் முதிர்வடையும். இதனால், பலர் நினைப்பது போல இது சாதாரண வங்கி சேமிப்பு கணக்கு அல்ல. தேவையான நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் என்ற வசதி இதில் கிடையாது.
விதிவிலக்குகள் உண்டு
ஆனால் இதற்கு சில விதிவிலக்குகளும் உள்ளன. மகள் 18 வயதை கடந்த பிறகு, உயர்கல்வி செலவுகளுக்காக கணக்கில் இருக்கும் தொகையின் 50 சதவீதம் வரை பெற அனுமதி வழங்கப்படுகிறது. கல்லூரி சேர்க்கை கட்டணம், கல்விக் கட்டணம் மற்றும் தொடர்புடைய செலவுகளுக்காக இந்தத் தொகை பயன்படுத்தப்படலாம். இந்த சேர்க்கை சான்று அல்லது கட்டண விவரங்கள் போன்ற ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
பணம் எடுக்கும் முறைகள்
மற்றொரு முக்கிய அம்சம் கணக்கை முன்கூட்டியே முடிப்பது தொடர்பானது. பெண் குழந்தை 18 வயதுக்கு பிறகு திருமணம் செய்துகொண்டால், குறிப்பிட்ட நடைமுறைகளின் கீழ் கணக்கை மூட அனுமதி கிடைக்கும். மேலும், கணக்கு வைத்திருப்பவர் உயிரிழப்பு அல்லது கடுமையான நிதி நெருக்கடி போன்ற விசேஷ சூழல்களிலும் முன்கூட்டிய முடிப்பு சாத்தியமாக உள்ளது.
அரசு சேமிப்பு திட்டம்
பல பெற்றோர்கள் இந்த திட்டத்தை “பணம் போட்டு மறந்துவிடும் சேமிப்பு” என நினைத்தாலும், அதற்கான பல விதிமுறைகள் மறைந்துள்ளன. எனவே முதலீடு செய்வதற்கு முன்பும், இடைப்பட்ட காலத்தில் பணம் எடுக்க திட்டமிட்டாலும், திட்டத்தின் நிபந்தனைகளை முழுமையாக புரிந்துகொள்வது மிகவும் அவசியம். சரியான தகவலுடன் அணுகினால், சுகன்யா சம்ரிதி யோஜனா மகளின் எதிர்காலத்திற்கான வலுவான நிதி பாதுகாப்பாக மாறக்கூடும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

