- Home
- Business
- உஷார்..! எஸ்பிஐ வங்கி கிளைகள் தொடர்ந்து 6 நாட்கள் மூடப்படும்.. வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட்
உஷார்..! எஸ்பிஐ வங்கி கிளைகள் தொடர்ந்து 6 நாட்கள் மூடப்படும்.. வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட்
SBI Employees Strike : புதிய நியமனங்கள், பாதுகாப்பு வசதிகள், சம்பள வேறுபாடு மற்றும் NPS உள்ளிட்ட 16 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து எஸ்பிஐ ஊழியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அடுத்த சில நாட்கள் சற்றே சவாலானதாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. காரணம், வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தம் மற்றும் தொடர் விடுமுறைகள். இதனால், பல லட்சம் வாடிக்கையாளர்கள் தங்களது அவசர வங்கிகளை முன்கூட்டியே முடிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. வரும் மே 23ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் இயங்காது. அதனைத் தொடர்ந்து மே 24 ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை. இதற்கிடையில், எஸ்பிஐ ஊழியர்கள் மே 25 மற்றும் 26ஆம் தேதிகளில் நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

16 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்
பின்னர், பல மாநிலங்களில் பக்ரீத் விடுமுறை காரணமாக மே 27 மற்றும் 28ஆம் தேதிகளில் வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் “தொடர்ந்து 6 நாட்கள் எஸ்பிஐ கிளைகள் மூடப்படுமா?” என்ற கேள்வி வாடிக்கையாளர்களிடையே ஏற்படுத்தியது. இந்த வேலைநிறுத்தத்தை அகில இந்திய பாரத ஸ்டேட் வங்கி பணியாளர் கூட்டமைப்பு (AIஎஸ்பிஐSF) முன்னெடுத்து வருகிறது. ஊழியர்களின் உரிமைகள், புதிய நியமனங்கள், பாதுகாப்பு வசதிகள், பதவி உயர்வு, ஓய்வூதிய திட்ட மாற்றங்கள் உள்ளிட்ட 16 முக்கிய கோரிக்கைகளை வங்கி நிர்வாகம் கவனிக்கவில்லை என்று சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
வங்கி கிளைகள் தொடர்ந்து 6 நாட்கள் மூடப்படும்
குறிப்பாக ஆயுத பாதுகாப்பு பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் சமீபத்திய கொள்ளை சம்பவங்கள் குறித்து ஊழியர்கள் கடும் அதிருப்தி பதிவு செய்தனர். மேலும், அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு சம்பள சலுகைகள் கீழ்மட்ட பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் சங்கம் கூறியுள்ளது. தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) தொடர்பாக பல்வேறு எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை
இதனால் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்லும் முன் சமூக ஊடக பிரச்சாரம், ஆர்ப்பாட்டம் மற்றும் மனு அளித்தல் போன்ற நடவடிக்கைகளும் நடைபெற உள்ளன. இதற்கிடையில், எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ATM, UPI, இணைய வங்கி மற்றும் மொபைல் வங்கி சேவைகளை முன்கூட்டியே பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக காசோலை, டிமாண்ட் டிராஃப்ட் மற்றும் கிளை சேவைகள் தேவைப்படுவோர் உடனடியாக தங்களது பணிகளை முடித்துக்கொள்ள வேண்டும் என வங்கி வட்டாரங்கள் கூறுகின்றன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

