MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • முதலீட்டாளர்கள் கவனிக்கவும்! பங்குச் சந்தை வீழ்ச்சியை சந்திக்கும் - எச்சரிக்கும் ராபர்ட் கியோசாகி

முதலீட்டாளர்கள் கவனிக்கவும்! பங்குச் சந்தை வீழ்ச்சியை சந்திக்கும் - எச்சரிக்கும் ராபர்ட் கியோசாகி

‘பணக்கார தந்தை, ஏழை தந்தை’ புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி, பங்குச் சந்தையில் ஒரு பெரிய வீழ்ச்சி வரக்கூடும் என்று எச்சரித்துள்ளார். இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் தெரியும் என்றும் எச்சரித்துள்ளார்.

1 Min read
Raghupati R
Published : Nov 03 2025, 04:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ராபர்ட் கியோசாகி அறிவுரை
Image Credit : Google

ராபர்ட் கியோசாகி அறிவுரை

நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவராக இருந்தால், இது தவறாமல் படிக்க வேண்டிய செய்தி. பிரபலமான ‘பணக்கார தந்தை, ஏழை தந்தை’ புத்தகத்தின் எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி, மீண்டும் ஒரு எச்சரிக்கை வெளியிட்டுள்ளார். வரும் மாதங்களில் பங்குச் சந்தையில் பெரிய வீழ்ச்சி ஏற்படக்கூடும் என்றும், குறிப்பாக அமெரிக்க சந்தை மிகப்பெரிய சரிவை நோக்கி நகர்கிறது என்றும் அவர் கூறினார் தெரிவித்துள்ளார். இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் தெரியும் என்பதால், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டு திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

24
பங்குச் சந்தை வீழ்ச்சி
Image Credit : X-@theRealKiyosaki

பங்குச் சந்தை வீழ்ச்சி

தவறான முடிவுகள் பெரிய இழப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கிறார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வால் ஸ்ட்ரீட் விரைவில் மிகப்பெரிய சரிவைச் சந்திக்கும். மில்லியன் கணக்கான டாலர்கள் மூழ்கக்கூடும். உங்களைப் பாதுகாத்துக் கொள்ள இப்போதே நடவடிக்கை எடுக்கவும்.” என அவர் எழுதியுள்ளார். இழப்புகளைத் தவிர்க்க முதலீட்டாளர்கள் புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Related image1
கிரிப்டோவில் முதலீடு செய்தவர்கள் இனி நிம்மதியா இருக்கலாம்.. உயர் நீதிமன்றம் சொன்ன குட் நியூஸ்
Related image2
ரூ.15 பங்கு இப்போது ரூ.19,877 - லாபத்தை அள்ளிக்கொடுத்த பங்கு எது தெரியுமா?
34
தங்கம் வெள்ளி கிரிப்டோ முதலீடு
Image Credit : Getty

தங்கம் வெள்ளி கிரிப்டோ முதலீடு

பாதுகாப்பான முதலீட்டுக்கான வழிகளைப் பற்றியும் ராபர்ட் கூறியுள்ளார். “தங்கம், வெள்ளி மற்றும் கிரிப்டோகரன்சிகள் (பிட்காயின், எத்தேரியம்) ஆகியவை தற்போதைய சூழலில் சிறந்த விருப்பங்கள்,” என அவர் பரிந்துரைத்துள்ளார். பணவீக்கம் அல்லது பொருளாதார நெருக்கடி காலங்களில் தங்கம் மற்றும் வெள்ளி எப்போதும் பாதுகாப்பான முதலீடுகள் எனவும், டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது நவீனமான மற்றும் பாதுகாப்பான வழி எனவும் கூறியுள்ளார்.

44
முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியவை
Image Credit : Getty

முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியவை

முன்பு இதேபோன்ற எச்சரிக்கைகளை வெளியிட்டிருந்த ராபர்ட், இப்போது 2025-இல் மீண்டும் அதே நிலைமை திரும்பக்கூடும் எனக் கூறுகிறார். முதலீட்டாளர்களுக்கு அவர் மூன்று முக்கிய ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அவை (1) பேராசையை விட புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளுங்கள், (2) பங்குகள் மேலும் உங்கள் முதலீட்டை பல திசைகளில் பரப்புங்கள், (3) தங்கம், வெள்ளி மற்றும் கிரிப்டோ போன்ற மதிப்புமிக்க சொத்துகளில் ஒரு பகுதியை வைத்திருங்கள் ஆகும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பங்குச் சந்தை
முதலீடு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved