மாதாந்தோறும் பணம் பெற இதை செய்ய வேண்டும்.. ரிசர்வ் வங்கி புதிய விதி
ஓய்வூதிய விநியோகத்தில் ரிசர்வ் வங்கி மாற்றங்களைச் செய்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையெனில் பணம் கிடைக்காது.

New Pension Rules
ரிசர்வ் வங்கி ஓய்வூதிய விநியோகத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. இது ஓய்வூதியதாரர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
ஓய்வூதியம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள்
சமீபத்தில் ஓய்வூதியம் வழங்குவதில் தாமதம், கூடுதல் பணம் வரவு அல்லது ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது போன்ற விஷயங்களில் ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு & ஓய்வூதியம்
அகவிலைப்படி உயர்ந்தால், வங்கிகள் விரைவாக புதிய விகிதத்தில் ஓய்வூதியத்தை கணக்கிட்டு வழங்க வேண்டும். இப்போது ஓய்வூதியதாரர்கள் 'ஜீவன் பிரமான்' தளம் மூலம் வீட்டிலிருந்தே ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.
ஓய்வூதியதாரர் இறப்பு & ஓய்வூதியம்
ஓய்வூதியதாரர் இறந்த பிறகு அவரது வாழ்க்கைத் துணைக்கு ஓய்வூதியம் பெற புதிய கணக்கு தேவையில்லை. ஓய்வூதியம் அல்லது நிலுவைத் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், வங்கிகள் வருடத்திற்கு 8% வட்டி செலுத்த வேண்டும்.
கூடுதல் ஓய்வூதியம் & பணத்தை திரும்பப் பெறுதல்
தவறுதலாக கூடுதல் ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டால், அந்தப் பணத்தைத் திரும்பப் பெறுவது குறித்து வங்கிகளுக்கு அறிவுறுத்த ரிசர்வ் வங்கி ஓய்வூதிய அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டுள்ளது.