ரயில்வேயின் புதிய விதி.. பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரயில்வே.. இனி நோ டென்ஷன்
ரயில் பயணத்தில் பெரிய மாற்றம் ஒன்று அமைதியாக அமலுக்கு வந்துள்ளது. இந்த மாற்றம் எப்படி உங்களுக்கு உதவும்? முழு விவரம் உங்களை ஆச்சரியப்படுத்தும் என்றே கூறலாம்.

ரயில்வே புதிய விதி
அறிவித்துள்ளது. குறிப்பாக சார்ட் தயாரிக்கும் நேரத்தில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் முன்கூட்டியே தங்களின் டிக்கெட் நிலையை அறிந்து கொள்ளும் வசதி உள்ளது. இது பயண திட்டமிடலை எளிதாக்கும் ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
ரயில் டிக்கெட் சார்ட் நேரம் மாற்றம்
முன்னதாக, ரயில் புறப்படும் நேரத்திற்கு சுமார் 4 மணி நேரத்திற்கு முன்பே டிக்கெட் சார்ட் தயாரிக்கப்பட்டது. ஆனால் புதிய நடைமுறையின்படி, இப்போது 9 முதல் 18 மணி நேரத்திற்கு முன்பே சார்ட் தயாரிக்கப்படும். இதனால் பயணிகள் தங்கள் டிக்கெட் கான்ஃபர்மேஷன் நிலையை முன்கூட்டியே அறிந்து திட்டமிட முடியும்.
பயணிகளுக்கு சூப்பர் செய்தி
இந்த மாற்றம் மூலம் சட்டவிரோத டிக்கெட் முகவர்களும் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் நேரடியாக தங்களின் டிக்கெட் நிலையை தெரிந்து கொள்ளும் வசதி அதிகரிப்பதால், இடைநிலையர்களின் தேவையும் குறையும். இதனால் ரயில்வே சேவையில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்.
ரயில் பயணம் இனி எளிது
இந்த புதிய அறிவிப்பு உத்தரப்பிரதேச மாநிலத்தின் ரேபரேலி பகுதியில் வெளியிடப்பட்டது. அங்குள்ள ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாவது, இந்த மாற்றம் குறிப்பாக தூரப் பகுதிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகுந்த பயனளிக்கும். முன்கூட்டியே தகவல் கிடைப்பதால், அவர்கள் பயணத்தை திட்டமிடுவதில் எளிதாக இருக்கும்.
போர்டிங் ஸ்டேஷன் மாற்றம்
இதற்குப் பிறகு சில கூடுதல் சலுகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ரயில் புறப்படும் நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வரை பயணிகள் தங்கள் போர்டிங் ஸ்டேஷனை மாற்றிக் கொள்ளலாம். மேலும், காலியாக இருக்கையில் அதே நேர வரம்பிற்குள் பயண வகுப்பையும் மேம்படுத்திக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனுடன், ரிஃபண்ட் விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டதால் கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் பயணிகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

