MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இனி பெண்கள் பெயரில் சொத்து குவியும்! அரசின் சலுகையால் மனைவி பெயரில் சொத்து வாங்கும் ஆண்கள்!

இனி பெண்கள் பெயரில் சொத்து குவியும்! அரசின் சலுகையால் மனைவி பெயரில் சொத்து வாங்கும் ஆண்கள்!

தமிழக அரசு பெண்களுக்கு சொத்து பதிவு கட்டணத்தில் 1% தள்ளுபடி அறிவித்துள்ளது. ரூ.10 லட்சத்திற்குட்பட்ட வீடு, நிலம், பிளாட், அப்பார்ட்மென்ட் வாங்கும் பெண்களுக்கு இந்த சலுகை பொருந்தும். இது பெண்கள் சொத்து வாங்கும் எண்ணத்தை ஊக்குவிக்கும்.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Jul 10 2025, 11:30 AM IST| Updated : Jul 10 2025, 11:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
தள்ளுபடி சலுகை! பெண்கள் மகிழ்ச்சி
Image Credit : our own

தள்ளுபடி சலுகை! பெண்கள் மகிழ்ச்சி

நிலம், வீடு, பிளாட், அப்பார்ட்மென்ட் வாங்கும் போது செலவானது பத்திரப் பதிவு கட்டணம் மிகவும் முக்கியமானது. இந்த பதிவு கட்டணத்தை அரசு வசூலிக்கும். சமீபத்தில் தமிழக அரசு பெண்களுக்கு ஒரு நல்ல சலுகையை அறிவித்துள்ளது. அதாவது, பெண்கள் சொத்து வாங்கும்போது பத்திரப் பதிவுக் கட்டணத்தில் 1 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும்.

27
பெண்கள் பெயரில் சொத்து குவியும்
Image Credit : google

பெண்கள் பெயரில் சொத்து குவியும்

இந்த தள்ளுபடி ஒரு வரம்பிற்குள் மட்டுமே கிடைக்கும். குறிப்பாக, நீங்கள் வாங்கும் சொத்து மதிப்பு ரூ.10 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு வீடு ரூ.9,00,000 மதிப்புடையதாக இருந்தால், அதற்கு பதிவு கட்டணத்தில் 1% தள்ளுபடி கிடைக்கும். ஆனால் அந்த சொத்து ரூ.10 லட்சத்தைத் தாண்டினால் இந்த சலுகை கிடையாது. சாதாரணமாக, பதிவு கட்டணம் மற்றும் ஸ்டாம்ப் ட்யூட்டி சேர்த்து சொத்து மதிப்பின் சுமார் 7%–8% வரை செலவாகும். இதுவே குடும்பத்திற்கு பெரிய சுமையாக இருக்கிறது. தற்போது அறிவிக்கப்பட்ட 1% தள்ளுபடி கூட, குடும்ப செலவினத்தை குறைக்கும் சிறிய நன்மை தரும். இது பெண்கள் சொத்து வாங்கும் எண்ணத்தை ஊக்குவிக்கும்.

Related Articles

Related image1
FD vs SIP: கடந்த 10 ஆண்டுகளில் எந்த முதலீடு அதிக வருமானத்தை அளித்தது?
Related image2
ரூ.5 ஆயிரம் முதலீடு! ரூ.10 ஆயிரம் வருமானம்! அட்டகாசமான தொழில்கள்! அற்புதமான வாய்ப்பு!
37
இந்த சலுகை எந்த சொத்துகளுக்கு கிடைக்கும்?
Image Credit : Getty

இந்த சலுகை எந்த சொத்துகளுக்கு கிடைக்கும்?

குடியிருப்பு வீடு (Residential House)

நிலம் (Land)

பிளாட் (Plot)

அப்பார்ட்மென்ட் (Apartment)

இந்த திட்டம் மூலம் பெண்களுக்கு சொந்தமாய் சொத்து வாங்குவது சற்று எளிதாகும். பெண்கள் சொத்து வாங்கினால் குடும்பத்துக்கு அதிக பாதுகாப்பும் நம்பிக்கையும் கிடைக்கும். சில மாவட்டங்களில் பெண்கள் பெயரில் சொத்து இருந்தால் வரியிலும் சலுகைகள் கிடைக்க வாய்ப்புண்டு. இதனால் பெண்கள் பெயரில் சொத்து குவியும்.

47
நிபந்தனைகளை தெரிந்துகொள்ள வேண்டும்
Image Credit : our own

நிபந்தனைகளை தெரிந்துகொள்ள வேண்டும்

  • வாங்கும் சொத்து மதிப்பு ரூ.10 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்
  • பெண்களின் பெயரில் மட்டும் பத்திரம் பதிவு செய்யப்பட வேண்டும்
  • உரிய அடையாளம், முகவரி சான்று கொண்டு வர வேண்டும்
  • பத்திர பதிவு அலுவலகத்தில் அனைத்து கட்டணங்களும் நேர்மையாக செலுத்த வேண்டும்

மேலும், இதுபோன்ற சலுகைகள் பல மாநிலங்களில் நடப்பில் உள்ளன. உதாரணமாக, மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி போன்ற இடங்களில் ஸ்டாம்ப் ட்யூட்டியில் 2%–3% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு தற்போது 1% தள்ளுபடி அறிவித்துள்ளது என்பது நல்ல தொடக்கம்.

57
இந்தத் திட்டத்தின் பயன்
Image Credit : Getty

இந்தத் திட்டத்தின் பயன்

  • பெண்கள் சொத்து உரிமை பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்
  • பெண்களின் குடும்ப பாதுகாப்பு வலுப்படும்
  • பெண்களின் தனி சொத்து உரிமை உணர்வு உருவாகும்
67
 1% தள்ளுபடி கிடைக்கும்
Image Credit : GEMINI AI

1% தள்ளுபடி கிடைக்கும்

எல்லா பெண்களும் இதை பற்றி தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும். வங்கியில் கடன் பெற்று சொத்து வாங்கினாலும், இந்த 1% தள்ளுபடி கிடைக்கும். ஆனால் வாங்கும் சொத்து மதிப்பு ரூ.10 லட்சத்தை கடந்தால் தள்ளுபடி கிடையாது.

77
தள்ளுபடியை உறுதி செய்யவும்
Image Credit : AI IMAGE GENERATED WITH OPEN AI

தள்ளுபடியை உறுதி செய்யவும்

பெண்கள் சொத்து வாங்க திட்டமிட்டால், முதலில் மதிப்பீட்டுச் சான்று பெற்றுத் தள்ளுபடியை உறுதி செய்து கொள்ளவும். இவ்வாறு அரசு அறிவித்த இந்த உதவியுடன், பெண்கள் சொந்த வீடு, நிலம் வாங்கி, வாழ்க்கையை மேலும் நலமாக முன்னேற்றலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
சொத்து வரி
பெண்கள்
தமிழ்நாடு அரசு
வணிகம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved