- Home
- Business
- KVP Scheme: ரூ.5 லட்சம் போட்டா ரூ.10 லட்சம் கிடைக்கும்.! மத்திய அரசின் சூப்பர் முதலீடு திட்டம்.!
KVP Scheme: ரூ.5 லட்சம் போட்டா ரூ.10 லட்சம் கிடைக்கும்.! மத்திய அரசின் சூப்பர் முதலீடு திட்டம்.!
Kisan Vikas Patra Scheme in Tamil : இப்போதைய பொருளாதார சூழலில், ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களை நிறைய பேர் தேடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சூப்பர் திட்டம்தான் தபால் அலுவலகம் வழங்கும் கிசான் விகாஸ் பத்திரம் (KVP).
15

Image Credit : Getty
போஸ்ட் ஆபீஸ் KVP திட்டம்
பங்குச் சந்தை ரிஸ்க் வேண்டாம், ஆனால் பணம் பாதுகாப்பாக வளர வேண்டும் என நினைப்பவர்களுக்கு போஸ்ட் ஆபீஸின் 'கிசான் விகாஸ் பத்திரம்' (KVP) ஒரு சரியான சாய்ஸ். இது மத்திய அரசு உத்தரவாதம் கொடுக்கும் திட்டம் என்பதால், உங்கள் பணத்துக்கு 100% பாதுகாப்பு. தற்போது இதற்கு ஆண்டுக்கு 7.5% வட்டி தருகிறார்கள்.
25
Image Credit : Gemini AI
பணம் எப்போது இரட்டிப்பாகும்?
இந்தத் திட்டத்தில் நீங்கள் போடும் பணம் 115 மாதங்களில், அதாவது சுமார் 9 ஆண்டுகள் 7 மாதங்களில் இரட்டிப்பாகிவிடும். சந்தை ஏற்ற இறக்கங்கள் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், சொன்ன காலத்தில் உங்கள் முதலீடு டபுள் ஆகிவிடும். உதாரணமாக, நீங்கள் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் உங்களுக்கு ரூ.10 லட்சம் கிடைக்கும்.
35
Image Credit : Getty
யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?
18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இந்தியக் குடிமகனும் இந்தத் திட்டத்தில் எளிதாக முதலீடு செய்யலாம். ஒருவர் தனியாகவோ அல்லது இருவர் சேர்ந்தோ ஜாயின்ட் அக்கவுன்ட் திறக்கலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பெயரிலும் இந்த சான்றிதழை வாங்கலாம். குறைந்தபட்சம் ரூ.1000-ல் இருந்து முதலீட்டைத் தொடங்கலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை என்பது இதன் பெரிய ப்ளஸ்.
45
Image Credit : Social Media
பணப் பாதுகாப்பு மற்றும் பிற வசதிகள்
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்துக்கு 100% அரசு உத்தரவாதம் இருப்பதால் பாதுகாப்பு பற்றி எந்த சந்தேகமும் வேண்டாம். முதலீட்டாளர்கள் நாமினியை நியமிக்கும் வசதி உள்ளது. இதனால், எதிர்காலத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு பணத்தை மாற்றுவது சுலபம். நாட்டின் எந்த தபால் நிலையத்திலும் இந்தத் திட்டத்தில் சேரலாம். தேவைப்பட்டால் ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொரு கிளைக்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு.
55
Image Credit : Getty
இடையில் பணம் எடுக்க முடியுமா?
இந்தத் திட்டத்தில் போட்ட பணத்தை உடனடியாக எடுக்க முடியாது. இதற்கு 2.5 ஆண்டுகள் லாக்-இன் காலம் உள்ளது. ஆனால், அந்தக் காலம் முடிந்த பிறகு தேவைப்பட்டால் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். அவசரத் தேவை ஏற்பட்டால், இந்த KVP சான்றிதழை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெறும் வாய்ப்பும் உள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.
Latest Videos

