MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • PM-VBRY: இளைஞர்களுக்கு ஜாக்பாட்! ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கும் மத்திய அரசு! எப்படி பெறுவது?

PM-VBRY: இளைஞர்களுக்கு ஜாக்பாட்! ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கும் மத்திய அரசு! எப்படி பெறுவது?

மத்திய அரசு PM-VBRY என்ற திட்டத்தின் கீழ் படித்த இளைஞர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்குகிறது. இதை எப்படி பெறுவது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Jun 14 2026, 03:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இளைஞர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை
Image Credit : AI

இளைஞர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை

இந்தியாவில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வேலையின்மை பிரச்சனையும் தலைவிரித்தாடுகிறது. நமது நாட்டில் இளைஞர்களுக்கு படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. இவ்வளவு ஏன் படித்த இளைஞர்கள் எந்த வேலை செய்ய தயாராக இருந்தாலும் வேலை கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசின் திட்டம்

அந்த வகையில் இந்தியாவில் முறைசார்ந்த வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கவும், இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தவும் மத்திய அரசு ஒரு புதிய அதிரடித் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. 'பிரதம மந்திரியின் விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா' (PM-VBRY) என்ற பெயரிலான இத்திட்டத்தின் கீழ், முதல் முறையாகப் பணியில் சேரும் இளைஞர்களுக்கு ரூ.15,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டம் வேலைவாய்ப்பு சார்ந்த ஊக்குவிப்புத் திட்டம்' (ELI Scheme) என்றும் அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கிய விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
PM-VBRY திட்டத்தின் காலம் மற்றும் தகுதிகள்
Image Credit : Getty

PM-VBRY திட்டத்தின் காலம் மற்றும் தகுதிகள்

இந்தத் திட்டம் 1 ஆகஸ்ட் 2025 முதல் 31 ஜூலை 2027 வரையிலான காலகட்டத்தில் உருவாக்கப்படும் புதிய வேலைவாய்ப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். முதல் முறையாக வேலைக்குச் சேரும் இளைஞர்கள், தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தில் (EPFO) பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், அவர்களின் மாதாந்திர மொத்தச் சம்பளம் ரூ.1,00,000-க்குள் இருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.

Related Articles

Related image1
Job Vacancy: இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! ரூ.1.4 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை.! விண்ணப்பிப்பது எப்படி?
Related image2
Job Alert: இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! உங்க ஊரிலேயே அரசு வேலை.! மாதம் ரூ.40,000 வரை சம்பளம்.!
34
ஊக்கத்தொகை எவ்வாறு வழங்கப்படும்?
Image Credit : Asianet News

ஊக்கத்தொகை எவ்வாறு வழங்கப்படும்?

தகுதியுள்ள ஊழியர்களுக்கு அவர்களின் ஒரு மாதச் சம்பளத்திற்கு இணையான தொகை (அதிகபட்சமாக ₹15,000 வரை) இரண்டு தவணைகளாக நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் (DBT மூலம்) செலுத்தப்படும்.

முதல் தவணை: புதிய பணியாளர் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து 6 மாதங்கள் பணியை நிறைவு செய்த பிறகு முதல் தவணைத் தொகை வழங்கப்படும்.

இரண்டாம் தவணை: பணியில் சேர்ந்து 12 மாதங்கள் நிறைவடைந்த பிறகு, ஊழியர்கள் EPFO அமைப்பால் நடத்தப்படும் 'நிதிசார் கல்வி வகுப்பு' (Financial Literacy Course) என்ற குறுகிய காலப் படிப்பை முடிக்க வேண்டும். இதை முடித்தவுடன் இரண்டாம் தவணைத் தொகை எதிர்காலச் சேமிப்பாக அவர்களின் கணக்கில் செலுத்தப்படும்.

44
விண்ணப்பிக்கும் முறை
Image Credit : X

விண்ணப்பிக்கும் முறை

இந்த ஊக்கத்தொகையைப் பெற ஊழியர்கள் தங்களுடைய யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) பெற்றிருக்க வேண்டும். மேலும், UMANG செயலி மூலம் முக அங்கீகாரம் (Face Authentication) செய்து, தங்களுடைய ஆதார் எண், வங்கி கணக்கு மற்றும் PF கணக்கு ஆகியவற்றைச் சரியாக இணைத்திருக்க வேண்டும்.

நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், அவர்களைச் சேமிப்புப் பழக்கத்தை நோக்கி ஊக்குவிக்கவும் இந்த மெகா திட்டம் பெரும் துணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மத்திய அரசு
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
40 வயதிற்குள் கோடீஸ்வரர் ஆவது எப்படி? பொருளாதார வல்லுனர்கள் சொல்லும் அட்டகாசமான டிப்ஸ்
Recommended image2
Property Law: தந்தை உயில் எழுதவில்லை என்றால் சொத்து யாருக்குப் போகும்? மகள்களின் சட்டப்பூர்வ உரிமை என்ன?
Recommended image3
Number 13: விமானங்களில் 13-ம் நம்பர் சீட் ஏன் இல்லை? அந்த எண் அவ்வளவு துரதிர்ஷ்டமானதா?
Related Stories
Recommended image1
Job Vacancy: இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! ரூ.1.4 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை.! விண்ணப்பிப்பது எப்படி?
Recommended image2
Job Alert: இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! உங்க ஊரிலேயே அரசு வேலை.! மாதம் ரூ.40,000 வரை சம்பளம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved