MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • PM KISAN: விவசாயிகளுக்கு ஜாக்பாட்! 2031 வரை ரூ.6,000 கன்பார்ம்! மத்திய அரசின் அறிவிப்பு!

PM KISAN: விவசாயிகளுக்கு ஜாக்பாட்! 2031 வரை ரூ.6,000 கன்பார்ம்! மத்திய அரசின் அறிவிப்பு!

PM KISAN: பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தை 2030-31 வரை நீட்டித்து மத்திய நரேந்திர மோடி அரசு அறிவித்துள்ளது. இதற்காக 3.15 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : Rayar A
Published : Aug 01 2026, 08:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
PM KISAN திட்டம் 2031 வரை நீட்டிப்பு
Image Credit : AI

PM-KISAN திட்டம் 2031 வரை நீட்டிப்பு

மத்திய அரசு நாட்டில் இருக்கின்ற கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லியிருக்கிறது. விவசாயிகளின் பெரிய நம்பிக்கையாக இருக்கின்ற 'பிரதமர் கிசான் சம்மான் நிதி' (PM-KISAN) திட்டத்தை அடுத்த 5 வருடங்களுக்கு, அதாவது 2030-31 வரைக்கும் நீட்டித்து ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிஎம் கிசான் சம்மான் நிதி திட்டத்தை 2030-31 நிதியாண்டு வரைக்கும் தொடர ஒப்புதல் கொடுத்திருக்கிறார்கள். இந்த மெகா திட்டத்திற்காக மத்திய அரசு 3.15 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த முடிவுகளை அதிகாரப்பூர்வமாக ஊடகங்களுக்குச் சொன்னார். இதோடு 'பிரதமர் சூர்யா சரோவர் யோஜனா' (PM-SSY) திட்டத்திற்கும் ஒப்புதல் கொடுத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: LPG Price Cut: அதிகாலையிலேயே குட்நியூஸ்.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை.. எவ்ளோ தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
24வது தவணைப்பணம் எப்போது வரும்?
Image Credit : Asianet News

24வது தவணைப்பணம் எப்போது வரும்?

பிஎம் கிசான் திட்டத்தின் பயனாளிகளான விவசாயிகள், இப்போது 24-வது தவணைப் பணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில், மத்திய அரசு திட்டத்தை 5 வருடத்திற்கு நீட்டித்தது விவசாயிகளின் பெரிய கவலையைத் தீர்த்திருக்கிறது. தகவல்களின்படி, 24-வது தவணைப் பணம் வருகின்ற அக்டோபர் மாதம் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் புள்ளிவிவரப்படி, இந்தத் திட்டம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரைக்கும் மொத்தம் 23 தவணைகளில் 4.47 லட்சம் கோடி ரூபாயை நேரடிப் பணப் பரிமாற்றம் (DBT) மூலமாக விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பியிருக்கிறார்கள். கடைசியாக வந்த 23-வது தவணையில், நாட்டில் 9.49 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கம்மி விலைக்கு தங்கம் கிடைக்கும் டாப் 10 நகரங்கள்.. தமிழ்நாட்டின் 2 இடங்கள் லிஸ்ட்டில்!

Related Articles

Related image1
PM Kisan: விவசாயிகளே வங்கி கணக்கிற்கு ரூ.2,000 வரணுமா? அப்போ இந்த ஒரு அப்டேட்டை உடனே செய்யுங்க!
Related image2
PM Kisan: இந்த 4 தப்ப செஞ்சா உங்களுக்கு ₹2,000 வராது! உடனே சரிபாருங்க
34
விவசாயிகள் அதிக பலன்
Image Credit : AI

விவசாயிகள் அதிக பலன்

பிஎம் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் பயனடைபவர்களில் பெண் விவசாயிகளின் எண்ணிக்கையும் மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்தத் திட்டத்தில் பயனடைகின்ற ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவர் பெண் விவசாயி. இதனால், நாட்டில் கிராமப்புற பெண் விவசாயிகளுக்கு (women empowerment) இந்தத் திட்டம் பெரிய அளவில் உதவுகிறது.

மத்திய அரசு இந்தத் திட்டத்தை 2030-31 வரைக்கும் நீட்டித்து, 3.15 லட்சம் கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கியிருப்பதால், அடுத்த ஐந்து வருடத்திற்கு விவசாயிகளின் கணக்குகளுக்குச் சரியான நேரத்தில் உதவித்தொகை வந்துவிடும். மத்திய அரசின் இந்த நீண்ட கால நிதி ஆதரவு, கஷ்டத்தில் இருந்த விவசாயிகளுக்கு ஒரு பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.

44
PM-KISAN திட்டம் குறித்து விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டியவை
Image Credit : Asianet News

PM-KISAN திட்டம் குறித்து விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டியவை

PM-KISAN திட்டத்தின் கீழ் தகுதியுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. இத்தொகை 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் 3 தவணைகளாக நேரடியாக வங்கிக் கணக்கில்  செலுத்தப்படுகிறது. தவணைப் பணத்தைப் பெற விவசாயிகள் e-KYC நடைமுறையை முடித்திருக்க வேண்டும். மேலும், வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது மற்றும் நில விபரங்களைச் சரிபார்ப்பது கட்டாயமாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி
பிரதம மந்திரி கிசான் மாந்தன் யோஜனா
Latest Videos
Recommended Stories
Recommended image1
திடீரென உயரும் மின்சாரக் கட்டணம்..! உங்க EB பில்லில் இந்த தப்பு நடக்குதா? கண்டிப்பா செக் பண்ணுங்க!
Recommended image2
ITR ரீஃபண்ட் வேண்டுமா? PAN-ல் உள்ள இந்த தவறுகளை உடனே சரிசெய்யுங்கள்.!
Recommended image3
LPG Price Cut: அதிகாலையிலேயே குட்நியூஸ்.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை.. எவ்ளோ தெரியுமா?
Related Stories
Recommended image1
PM Kisan: விவசாயிகளே வங்கி கணக்கிற்கு ரூ.2,000 வரணுமா? அப்போ இந்த ஒரு அப்டேட்டை உடனே செய்யுங்க!
Recommended image2
PM Kisan: இந்த 4 தப்ப செஞ்சா உங்களுக்கு ₹2,000 வராது! உடனே சரிபாருங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved