- Home
- Business
- PM Kisan: விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்.! ரூ.2,000க்கு பதில் ரூ.4,000 கிடைக்குமா? டபுள் ஜாக்பாட் யாருக்கு?
PM Kisan: விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்.! ரூ.2,000க்கு பதில் ரூ.4,000 கிடைக்குமா? டபுள் ஜாக்பாட் யாருக்கு?
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், பிஎம்-கிசான் திட்டத்தின் 24-வது தவணைப் பணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தங்களுக்கு அடுத்த தவணை எப்போது கிடைக்கும், இந்த மாதமே பணம் வருமா அல்லது இன்னும் காத்திருக்க வேண்டுமா என யோசித்து வருகின்றனர்.
16

Image Credit : Asianet News
அடுத்த தவணை எப்போது?
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பிஎம்-கிசான் 24-வது தவணைக்காக காத்திருக்கின்றனர். நான்கு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் இந்த உதவித்தொகையின் 23-வது தவணை கடந்த ஜூன் மாதம் வழங்கப்பட்டது. எனவே, அடுத்த தவணை எப்போது வரும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
26
Image Credit : AI
. துர்கா பூஜை பண்டிகைக்கு முன்பே ஜாக்பாட்
நான்கு மாத இடைவெளி கணக்குப்படி, 24-வது தவணை அக்டோபர் மாதம் வர வேண்டும். துர்கா பூஜை பண்டிகைக்கு முன்பே விவசாயிகளின் கணக்கில் பணம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை சில விவசாயிகளுக்கு ₹2000-க்கு பதிலாக ₹4000 கிடைக்க வாய்ப்புள்ளது.
36
Image Credit : Getty
இரண்டு தவணைகளும் ஒரே நேரத்தில்?
e-KYC முழுமையாக முடிக்காதது, நில ஆவண சரிபார்ப்பு போன்ற காரணங்களால் 23-வது தவணைப் பணம் சிலருக்குக் கிடைக்கவில்லை. இந்தத் தவறுகளைச் சரிசெய்த விவசாயிகளுக்கு, நிலுவையில் உள்ள தொகையும் சேர்த்து, இரண்டு தவணைகளும் ஒரே நேரத்தில் வர வாய்ப்புள்ளது.
46
Image Credit : Asianet News
விவசாயிகளின் கணக்கில் மொத்தம் ரூ.4000
இப்படிப்பட்ட விவசாயிகளின் கணக்கில் மொத்தம் ₹4000 வரவு வைக்கப்படலாம். இதில் ₹2000 என்பது 24-வது தவணைக்கானது, மீதமுள்ள ₹2000 என்பது 23-வது தவணையின் நிலுவைத் தொகையாகும். மற்றபடி, நிலுவை இல்லாதவர்களுக்கு வழக்கம் போல் ₹2000 மட்டுமே கிடைக்கும்.
56
Image Credit : social media
e-KYC செயல்முறைகளை முடிப்பது அவசியம்
உங்களுக்கு ஏதாவது தவணைப் பணம் நிலுவையில் இருந்தால், உடனடியாக e-KYC மற்றும் நில ஆவண சரிபார்ப்பு செயல்முறைகளை முடிப்பது அவசியம். இதன் மூலம், அடுத்த தவணையுடன் நிலுவைத் தொகையையும் சேர்த்துப் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளலாம்.
66
Image Credit : Getty
ஆன்லைனில் உங்கள் தவணை நிலையை அறிந்துகொள்ள
1. பிஎம்-கிசான் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
2. முகப்புப் பக்கத்தில் 'Farmers Corner' பிரிவில் 'Know Your Status' ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
3. உங்கள் பதிவு எண் மற்றும் திரையில் தெரியும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
4. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டு சரிபார்க்கவும்.
5. இப்போது உங்கள் தவணை மற்றும் e-KYC-யின் தற்போதைய நிலையை திரையில் பார்க்கலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.
Latest Videos

