பெட்ரோல் விலை கண்டிப்பா குறையும்.! அந்த மாயாஜாலம் எப்போ நடக்கும் தெரியுமா?
ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றத்தால், கச்சா எண்ணெய் விலை ஏறியுள்ளது. இதனால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பிரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹2.09 முதல் ₹2.35 வரை உயர்த்தியுள்ளன. அடுத்து சாதாரண பெட்ரோல் விலையும் ஏறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நகரங்களில் இதுதான் விலை
கூட்டி கழித்து பாருங்க
நல்ல செய்தி என்னவென்றால்
இது ஒரு எச்சரிக்கை மணி
எப்போ குறையும் தெரியுமா?
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ₹94.72 ஆக உள்ளது. அதே சமயம், மும்பையில் ₹103.44, கொல்கத்தாவில் ₹103.94, மற்றும் சென்னையில் ₹100.75-க்கு பெட்ரோல் விற்கப்படுகிறது.
பெட்ரோல் விலை எப்போது குறையும் என்பது ஒவ்வொரு சாமானிய மனிதனின் அன்றாடக் கேள்வியாக உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்ப் பொதிகளின் விலை மாற்றம் மற்றும் உலக நாடுகளுக்கு இடையிலான அரசியல் சூழல்கள் பெட்ரோல் விலையைத் தீர்மானிக்கின்றன."நிச்சயமாக குறையும்" என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஒரு மாயஜாலம்போலவே பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் எப்போது நடக்கும்? பொதுவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும் போதோ அல்லது அரசாங்கம் வரிகளைக் குறைக்கும் போதோ இந்த 'மாயஜாலம்' நிகழ்கிறது. ஓபெக் நாடுகள் தங்கள் நாட்டு கச்சா எண்ணெய்யை விற்க முடியாமல் தவிக்கும் நிலையில், ரஷ்யா எண்ணெய் அதிக அளவில் புழக்கத்திற்கு வந்துள்ளது. அமெரிக்கா போரை நிறுத்தினால் கச்சா எண்ணெய் விலை முற்றிலும் குறைந்து அதனால் பெட்ரோல் விலையும் குறையும் என பொருளாதார வல்லுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

