MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இனி மின்தடையே இருக்காது! மின் உற்பத்தியை அதிகரிக்க அதிரடி முடிவு! என்எல்சிக்கு ரூ.7000 கோடியா?

இனி மின்தடையே இருக்காது! மின் உற்பத்தியை அதிகரிக்க அதிரடி முடிவு! என்எல்சிக்கு ரூ.7000 கோடியா?

மின் உற்பத்தியை அதிகரிக்க என்.எல்.சி. நிறுவனத்திற்கு ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிதி, மின்தடை இல்லாத இந்தியா என்ற இலக்கை அடையவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் வளர்ச்சியை அடையவும் பயன்படுத்தப்படும்.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Jul 17 2025, 09:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
உருவாகிறது மின் தடை இல்லாத இந்தியா!
Image Credit : our own

உருவாகிறது மின் தடை இல்லாத இந்தியா!

கடந்த காலங்களில் பல மாநிலங்களில் மின்தடை பிரச்சினையே ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாக இருந்து வந்துள்ளது. மின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மரபுசாரா எரிசக்திதுறையின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு மானிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான என்எல்சிக்கு மிகப்பெரிய தொகையை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழக மக்களுக்கும் தொழில்துறைக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

24
 ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு
Image Credit : our own

ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையில் இலக்குகளை அடையும் முயற்சியில், மத்திய அரசு பெரிய படியாக ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அரசு பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்திற்கு ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இந்த நிதி ஒதுக்கீடு, மின்தடை இல்லாத இந்தியா என்ற நோக்கில் ஒரு முக்கிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. எப்போதும் ஒளி தரும், தடையில்லா மின் வழங்கும் இந்தியா என்ற கனவை நிறைவேற்றும் பாதையில் இது ஒரு மைல்கல் என் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Related image1
புதிய மின் கழிவுக் கொள்கையால் செலவுகள் 3 மடங்கு அதிகரிக்க கூடும், ஏன் தெரியுமா?
Related image2
இதை செய்து பாருங்கள்!!! மின் கட்டணம் பாதியாக குறையும்!!!
34
"மின் உற்பத்தியில் இலக்கை அடைவோம்"
Image Credit : our own

"மின் உற்பத்தியில் இலக்கை அடைவோம்"

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் மிக பெரியவை என்றும் அதனை அடைவதற்காகத்தான் இவ்விதமான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தெரிவித்தார்.இது முழுக்க முழுக்க நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செய்யப்பட்ட முடிவாகும் எனவும் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.

மின் உற்பத்தியில் அசத்தி வரும் என்.எல்.சி. இந்தியா

என்.எல்.சி. இந்தியா லிமிடெட் (NLC India Ltd) என்பது பொதுத்துறை நிறுவனமாகும். இது நெய்வேலியில் நிலக்கரி (லிக்னைட்) மேம்பாட்டு திட்டங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாக இந்தியாவின் மின்சார தேவை ஒரு முக்கிய பகுதியாக பூர்த்தி செய்து வருகிறது. தற்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஒரு சாதாரண விஷயமாகவே உள்ளது. ஆனால் இது விவசாயம், தொழில்துறை, மருத்துவம் போன்ற பல துறைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை முற்றிலுமாக நீக்குவதற்காக, தேசிய மின் வலையமைப்பை (National Grid) வலுப்படுத்தும் திட்டங்களில் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

44
மின்தடை இனி இருக்காது!
Image Credit : our own

மின்தடை இனி இருக்காது!

சூரிய ஒளி, காற்றாலை, நீர் மின் உற்பத்தி  உள்ளிட்ட மாற்று எரிசக்தி வளங்களை முழுமையாக பயன்படுத்தி, நாடு முழுக்க ஸ்திரமான மின் உற்பத்தியை உறுதி செய்யும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.சுருக்கமாகச் சொல்வதானால், என்.எல்.சி.-க்கு ஒதுக்கப்பட்ட ரூ.7,000 கோடி நிதி, இந்தியா எதிர்கொள்ளும் மின்தடைகளை முற்றிலும் அகற்ற, புதிய முயற்சிகளுக்கு திடமான அடித்தளமாக அமையும். இது இந்தியாவின் எதிர்கால எரிசக்தி தன்னிறைவை நோக்கி வைக்கும் மிக முக்கியமான நகர்வாகும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
மின் தடை
முதலீடு
மத்திய அரசு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved