- Home
- Business
- Gold Rate Today : வரலாறு காணாத விலையை தொட்ட தங்கம்…சவரன் 44 ஆயிரத்தை கடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
Gold Rate Today : வரலாறு காணாத விலையை தொட்ட தங்கம்…சவரன் 44 ஆயிரத்தை கடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்கத்தின் விலை புது உச்சத்தை தொட்டுள்ளது.

2023ம் ஆண்டின் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த வாரத்தில் சவரனுக்கு 43 ஆயிரத்தை கடந்து மீண்டும் உச்சத்தை தொட்டது தங்கம். இந்த அதிர்ச்சி முடிவதற்குள் மற்றொரு அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.
நேற்றைய விலைப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,450-க்கு விற்பனையானது. அதேபோல, சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.43,600-க்கு விற்பனையானது.
இன்றைய (மார்ச் 18) நிலவரப்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 உயர்ந்து, 44,48-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் 5,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியை பொறுத்தவரை கிராம் 74.40க்கும், ஒரு கிலோ 74,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை அதிகரிப்பு பொதுமக்களிடையே பெரும் கவலையை உண்டாக்கி உள்ளது.
இதையும் படிங்க..இரண்டாக பிரியும் ஆப்பிரிக்க கண்டம்.. புதிதாக உருவாகும் கடல் - யாரும் பார்த்திராத அதிசய நிகழ்வு
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.