MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • விவசாயிகளுக்கு ரூ.10 கோடி வரை கடன்! எப்படி விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா ?

விவசாயிகளுக்கு ரூ.10 கோடி வரை கடன்! எப்படி விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா ?

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு (FPO) ரூ.10 கோடி வரை கடனுதவி வழங்குகிறது. குறைந்த வட்டியில் கிடைக்கும் இந்தக் கடன், குளிர்சாதனக் கிடங்குகள், தானியச் சுத்திகரிப்பு மையங்கள் போன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்த உதவும்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jul 17 2025, 01:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
விவசாயம் என உயர்த்தொழில்
Image Credit : Asianet News

விவசாயம் என உயர்த்தொழில்

வேளாண் உற்பத்தியில் தன்னிறைவை பெற்றுள்ள இந்தியா, சர்வதேச நாடுகளுக்கு காய்கறிகள் மற்றும் பழங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிலையில், பொதுத்துறை வங்கிகளும் தனியார் வங்கிகளும் விவசாயிகளுக்கு கடன் உதவி அளித்து வருகின்றன. விவசாயிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி குறைந்த அளவில் இருப்பதால் கிராமப்புற சிறுகுறு விவசாயிகள் பலன் அடைந்து வருகின்றனர்.

26
விவசாயிகளுக்கு உதவும் வங்கிகள்
Image Credit : Asianet News

விவசாயிகளுக்கு உதவும் வங்கிகள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB), நாட்டின் விவசாய வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட்டு வருகிறது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு (FPO – Farmer Producer Organisations) தேவையான நிதி உதவிகளை வழங்கும் வகையில், வங்கி முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் விவசாயிகள் பலரும் விவசாய பொருட்களை உற்பத்தி செய்வதுடன் அதனை மிதப்புக்கூட்டும் பொருட்களாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர்.

Related Articles

Related image1
இப்படிப்பட்ட பூச்சிகளை ஒழித்தாலே கத்திரிக்காயில் அதிக மகசூல் பார்க்கலாம்...
Related image2
சீத்தாபழ சாகுபடி - கட்டாந்தரையிலும் அள்ளிக்கொடுக்கும் மகசூல்!
36
எஃப்.பி.ஓ நிதி உதவி திட்டம் என்ன?
Image Credit : Asianet News

எஃப்.பி.ஓ நிதி உதவி திட்டம் என்ன?

எஃப்.பி.ஓ நிதி உதவி திட்டம் நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட Agriculture Infrastructure Fund திட்டத்தின் கீழ் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்படி உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPO), விவசாய கூட்டுறவுகள், சுயஉதவி குழுக்கள் (SHGs) மற்றும் வேளாண் சார்ந்த நிறுவனங்கள், பின்வரும் நடவடிக்கைகளுக்காக கடனுதவியை பெறலாம்.

  • குளிர்சாதனக் கிடங்குகள் (Cold Storage)
  • தானியச் சுத்திகரிப்பு மையங்கள்
  • தரநிலையாக்கம் மற்றும் பேக்கிங் அமைப்புகள்
  • சந்தைப்படுத்தல் வசதிகள்
  • வேளாண் உற்பத்திக்கு தேவையான இயந்திரங்கள் வாங்குதல்
46
கடனுதவியின் அளவு
Image Credit : Asianet News

கடனுதவியின் அளவு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தற்போது அறிவித்திருப்பதாவது, ஒரு எஃப்.பி.ஓக்கு ரூ.10 கோடி வரை கடனுதவி வழங்கப்படும். இதில் முக்கியமான அம்சம் என்னவெனில், அரசாங்கத்தால் வட்டி இழப்புத் தொகை மானியமாக (Interest Subvention) வழங்கப்படுகிறது.

வட்டிவிதிப்பு மற்றும் காலக்கெடு

  • வட்டியில் மானியம்: ஆண்டு 3% வரை மானியம் வழங்கப்படும்.கடன்தொகையின் திருப்பிச் செலுத்தல் காலம் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் ஆகும்.
  • அதேபோல் தடுப்புக் காலம் (Moratorium Period): 1 முதல் 2 ஆண்டுகள் வரை

யார் விண்ணப்பிக்கலாம்?

  • பதிவு செய்யப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPOs)
  • பெரும்பான்மையாக விவசாயிகளால் நிர்வகிக்கப்படும் கூட்டுறவுகள்
  • குழும முறை அமைப்புகள்
56
விண்ணப்பிக்கும் முறை
Image Credit : Asianet News

விண்ணப்பிக்கும் முறை

  1. FPOவின் பதிவு நகல், செயல்பாட்டு அறிக்கைகள், பங்குதாரர்களின் விவரங்கள் தயாரிக்க வேண்டும்
  2. வங்கி கிளையில் நேரில் சந்தித்து விவசாயம் சார்ந்த திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்
  3. வங்கி அதிகாரிகள் அவதானித்த பிறகு, கடனுக்கான ஒப்புதல் வழங்கப்படும்

இந்த திட்டம், விவசாயத்தை தொழில்மயமாக மாற்றும் ஒரு முக்கிய முயற்சி என்றும் FPOக்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி, நவீன வேளாண் உற்பத்தி முறைகளையும், சந்தைப்படுத்தல் அமைப்புகளையும் மேம்படுத்துவதுடன் இது ஊரக வருவாயை பெருக்கும் எனவும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவர் மற்றும் முகமை இயக்குநர் அஜய் குமார் ஸ்ரீவாஸ்தவ் தெரிவித்துள்ளார்.

66
மக்களுக்கு ஏற்படும் நன்மைகள்
Image Credit : Asianet News

மக்களுக்கு ஏற்படும் நன்மைகள்

  • விவசாய வருமானம் அதிகரிக்கும்
  • இடைநிலைவர்த்தகர்களை தவிர்த்து நேரடி சந்தையில் உற்பத்திகளை விற்பனை செய்ய இயலும்
  • கிராமப்புற வேலைவாய்ப்பு வாய்ப்புகள் உருவாகும்
  • உற்பத்தி வீணாகாமல் பாதுகாக்க முடியும்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இந்த ஏற்றுக்கொள்ளத்தக்க நிதி திட்டம், இந்தியாவின் விவசாயத் துறையின் வலிமையை அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, தங்கள் சமூகத்தையும், உறுப்பினர்களையும் முன்னேற்றியிட வேண்டும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
கடன்
வங்கி
விவசாயம்
விவசாயக் கடன்
வணிகம்
முதலீடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.20 கட்டினால் ரூ.2 லட்சம் காப்பீடு.. ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு திட்டம்
Recommended image2
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி டிக்கெட் புக் செய்தால் கேஷ்பேக்.. சூப்பர் ஆஃபர்!
Recommended image3
இந்த 5 விஷயங்கள் நடந்தால்.. உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.. உடனே செக் பண்ணுங்க
Related Stories
Recommended image1
இப்படிப்பட்ட பூச்சிகளை ஒழித்தாலே கத்திரிக்காயில் அதிக மகசூல் பார்க்கலாம்...
Recommended image2
சீத்தாபழ சாகுபடி - கட்டாந்தரையிலும் அள்ளிக்கொடுக்கும் மகசூல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved