MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரயில் பயணிகளுக்கு நல்ல செய்தி சொன்ன ஐஆர்சிடிசி.. இனி அதிக டிக்கெட் கிடைக்கும்.!

ரயில் பயணிகளுக்கு நல்ல செய்தி சொன்ன ஐஆர்சிடிசி.. இனி அதிக டிக்கெட் கிடைக்கும்.!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வரம்பை அதிகரித்துள்ளது. இந்த புதிய விதிமுறை அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு பெரும் நன்மையாக அமைகிறது.

1 Min read
Raghupati R
Published : Sep 24 2025, 09:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஐஆர்சிடிசி டிக்கெட் பதிவு
Image Credit : our own

ஐஆர்சிடிசி டிக்கெட் பதிவு

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) ஆன்லைன் டிக்கெட் புக்கிங் பயனாளர்களுக்கு ஒரு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடையாள அட்டை (ஆதார்) இணைக்கப்படாத பயனர் ஐடி வைத்தவர்கள் இப்போது மாதத்திற்கு 12 டிக்கெட் வரை புக் செய்யலாம். ஆதார்-க்கு இணைக்கப்பட்ட பயனர் ஐடிகளுக்கு மேலும் கூடுதல் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

24
ஆன்லைன் ரயில் டிக்கெட் புக்கிங்
Image Credit : Instagram

ஆன்லைன் ரயில் டிக்கெட் புக்கிங்

அவர்கள் மாதத்திற்கு அதிகபட்சம் 24 டிக்கெட் வரை ஆன்லைனில் பதிவு செய்ய முடியும். இதற்கு முன்பு ஆதார்-க்கு இணைக்கப்படாத பயனர் ஐடிகள் மாதத்திற்கு 6 டிக்கெட் மட்டுமே பதிவு செய்ய முடிந்தது. ஆதார்-க்கு இணைக்கப்பட்டவர்களுக்கு 12 டிக்கெட் வரம்பு இருந்தது. ஆனால், புதிய விதிமுறைப்படி, ஆதார் இணைப்பு இல்லாதவர்களுக்கு டிக்கெட் எண்ணிக்கை இரட்டிப்பு செய்யப்பட்டு 12-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
சென்னையில் பஸ், ரயில், மெட்ரோ மூணுக்கும் ஒரே டிக்கெட்! செப் 21 முதல் ஆரம்பம்!
Related image2
ரயில் டிக்கெட் இனி கன்ஃபார்ம்.. ரயில் பயணிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்
34
மாதம் 24 டிக்கெட் வரம்பு
Image Credit : Asianet News

மாதம் 24 டிக்கெட் வரம்பு

அதே நேரத்தில் ஆதார் இணைக்கப்பட்டவர்களுக்கு இந்த சலுகை மேலும் இரட்டிப்பு செய்யப்படுகிறது 24-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே வாரியம் இதற்கான உத்தரவை மத்திய ரயில்வே தகவல் முறைமை மையம் (CRIS) மற்றும் அனைத்து மண்டலங்களின் வணிக மேலாளர்களுக்கு அனுப்பியுள்ளது. மேலும் IRCTC தனது பயனாளர்களுக்கு இந்த புதிய சலுகை பற்றி மின்னஞ்சல், SMS உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

44
ரயில்வே டிக்கெட் பதிவு
Image Credit : IRCTC

ரயில்வே டிக்கெட் பதிவு

ஆன்லைனில் அடிக்கடி டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு இந்த முடிவு பெரிய நன்மையாக இருக்கிறது. குறிப்பாக குடும்ப பயணிகள் மற்றும் அடிக்கடி ரெயிலில் செல்வோருக்கு ஆதார் இணைப்பு கிடைக்கும் இந்த மாதம் 24 டிக்கெட் சலுகை பயண வசதியை எளிமையாக்குகிறது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரயில்
தொடர்வண்டிப் போக்குவரத்து
தொடர்வண்டி பயணச்சீட்டு
ரயில் டிக்கெட் முன்பதிவு
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved