MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரயில் டிக்கெட் வாங்க இனி இது கட்டாயம்.. இந்தியன் ரயில்வே புது ரூல்ஸ்.. மக்களே நோட் பண்ணுங்க

ரயில் டிக்கெட் வாங்க இனி இது கட்டாயம்.. இந்தியன் ரயில்வே புது ரூல்ஸ்.. மக்களே நோட் பண்ணுங்க

இந்திய ரயில்வே தட்கல் டிக்கெட் விதிகளில் மாற்றம் செய்துள்ளது. எப்படி டிக்கெட் பெறுவது என்பதற்கான மூன்று தீர்வுகளையும், ஆன்லைன் முன்பதிவுக்கான ஆதார் இணைப்பு விதியையும் ரயில்வே அறிவித்துள்ளது.

1 Min read
Raghupati R
Published : Dec 05 2025, 08:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரயில்வே புதிய விதி
Image Credit : Google

ரயில்வே புதிய விதி

இந்திய ரயில்வே தற்காலிக (தட்கல்) டிக்கெட் விதிமுறைகளை கடுமையாக வருகிறது. இனி டிக்கெட் கவுண்டரில் தட்கல் டிக்கெட் வாங்கினாலும் ஓடிபி கட்டாயம். விண்ணப்பப் படிவத்தில் உங்கள் மொபைல் எண் எழுத வேண்டும், அதை கிளார்க் சிஸ்டத்தில் சேர்ப்பார். அதன் பிறகு வரும் ஓடிபி-ஐ சரிபார்த்தால்தான் டிக்கெட் கொடுக்கப்படும். ஆனால், “மொபைல் இல்லாதவர்கள் எப்படி தட்கல் டிக்கெட் வாங்குவது?” என்ற கேள்விக்கு ரயில்வே மூன்று தீர்வுகளை தெரிவித்துள்ளது.

25
எப்படி பயன்படும் இந்த ஓடிபி விதி?
Image Credit : our own

எப்படி பயன்படும் இந்த ஓடிபி விதி?

ரயில் டிக்கெட் தவறாக பயன்படுத்தப்படும் நிலைகளை தடுக்கவும், டிக்கெட் புரோக்கர்களை கட்டுப்படுத்தவும் ஓடிபி முறையை ரயில்வே கொண்டு வருகிறது வருகிறது. ஆன்லைனில் ஏற்கனவே இந்த நடைமுறைகள் உள்ளன. இப்போது கவுண்டரிலும் இதே விதி பின்பற்றப்படும். 2025 ஜூலை மாதத்திலேயே அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், ஆன்லைன் தட்கல் டிக்கெட் பெற ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டது.

Related Articles

Related image1
ஒரு பயணியையும் அனுமதிக்காதீர்கள்.. சென்னை விமான நிலைய CISFக்கு இண்டிகோ கொடுத்த அதிர்ச்சி கடிதம்
Related image2
ரயில் டிக்கெட்டில் 75% தள்ளுபடி.. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்
35
மொபைல் இல்லாவிட்டால் என்ன செய்யலாம்?
Image Credit : Google

மொபைல் இல்லாவிட்டால் என்ன செய்யலாம்?

ரயில்வே அமைச்சகத்தின் தகவல் மற்றும் ஒளிபரப்பு இயக்குநர் திலீப் குமார் கூறியதாவது, உங்கள் குடும்ப உறுப்பினரின் மொபைல் எண் பயன்படுத்தலாம். உங்களுக்கு தெரிந்த நபரின் மொபைல் எண்ணை டிக்கெட்டில் கொடுத்து, ஓடிபி கேட்டுக்கொள்ளலாம். வரிசையில் உள்ள வேறு பயணி (ஆன்லைன் அவசரம் இல்லாதவர்) மொபைல் எண்ணை பயன்படுத்தலாம். இப்படி மூன்று வழிகளில் மொபைல் இல்லாதவர்களுக்கும் தட்கல் டிக்கெட் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அவர் தெரிவித்துள்ளார்.

45
ஆன்லைன் தட்கல் முன்பதிவு
Image Credit : our own

ஆன்லைன் தட்கல் முன்பதிவு

ஐஆர்சிடிசி அறிவிப்பின்படி, 2025 ஜூலை 1 முதல் ஆதார் லிங்க் இல்லாமல் Tatkal டிக்கெட் ஆன்லைனில் புக் செய்ய முடியாது. ஐஆர்சிடிசி ப்ரொஃபைலில் ஆதார் சேர்க்கும் வசதி உள்ளது, எனவே பயணிகள் அதைச் செய்துவிட வேண்டும்.

55
ஆன்லைனுக்கும் ஓடிபி கட்டாயம்
Image Credit : Social Media

ஆன்லைனுக்கும் ஓடிபி கட்டாயம்

ஜூலை 15, 2025 முதல் ஆன்லைன் தட்கல் முன்பதிவுக்கு Aadhaar ஓடிபி சரிபார்ப்பு தேவை. ஆதார்-க்கு இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும், அதை உள்ளிடாமல் முன்பதிவு செல்லாது. டிக்கெட் மோசடிகளை தடுக்கவும் உண்மையான பயணிகளுக்கே டிக்கெட் கிடைக்கவும் ரயில்வே இந்த நடவடிக்கையை எடுத்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய இரயில்வே
தொடர்வண்டிப் போக்குவரத்து
ரயில்
தொடர்வண்டி பயணச்சீட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Business: முத்தான மூன்றே விஷயங்கள் போதும்.! நீங்களும் ஆகலாம் அம்பானி.!
Recommended image2
Investment: முதியோர் பணத்தை ஏப்பம் விடும் குட்டி குட்டி தவறுகள்.! 7 விஷயங்களை தவிர்த்தால் சேமிப்பு கரையாது.!
Recommended image3
Business: வருங்காலத்துல இந்தியாவில் பவர்கட்டே இருக்காதாம்.! ஏன் தெரியுமா.?
Related Stories
Recommended image1
ஒரு பயணியையும் அனுமதிக்காதீர்கள்.. சென்னை விமான நிலைய CISFக்கு இண்டிகோ கொடுத்த அதிர்ச்சி கடிதம்
Recommended image2
ரயில் டிக்கெட்டில் 75% தள்ளுபடி.. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved