ரயிலில் வெளிநாடு போகலாம்.! எந்த ரயில் நிலையங்கள் தெரியுமா?
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ரயிலில் செல்லலாம் என்பது பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல். அவை என்னென்ன ரயில் நிலையங்கள், எங்கிருந்து எங்கு செல்ல முடியும் என்பதை பார்க்கலாம்.

இந்தியாவில் இருந்து நேரடி வெளிநாட்டு ரயில் சேவை
இந்தியாவில் ரயில் பயணம் என்றாலே பலருக்கும் நினைவில் வரும் விஷயம் மாநிலங்களுக்கு இடையிலான இணைப்பு தான். ஆனால், சில முக்கிய ரயில் நிலையங்கள் வெளிநாடுகளுக்கே நேரடி இணைப்பை வழங்குகின்றன என்பது பலருக்கும் புதுசாக இருக்கலாம். அண்டை நாடுகளுடன் வர்த்தகம், கலாசாரம் மற்றும் மக்கள் பரிமாற்றத்தை மேம்படுத்த இந்தியா நீண்ட காலமாக ரயில் சேவைகளை வைத்திருக்கிறது. குறிப்பாக நேபாள், பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இந்த இணைப்பு இருந்தது.
இந்தியா நேபாளம் ரயில்
நேபாளுக்கு செல்லும் ரயில்கள் பீகாரில் உள்ள ஜெய்நகர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. இது இந்தியாவின் கடைசி எல்லை ரயில் நிலையங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இங்கிருந்து நேபாளத்தின் ஜனக்பூர் நகரத்துக்கு நேரடி ரயில் சேவை உள்ளது. இந்திய நிலையத்தின் எல்லைக்கு வெளியே நேபாளத்தின் ரயில் நிலையம் இருப்பது சிறப்பு. பயணிகள் சரிபார்ப்பு முடித்து, நேரடியாக நேபாள ரயிலில் ஏறலாம்.
சர்வதேச ரயில் சேவை
மேலும், ரக்ஸால் சந்திப்பு நேபாள பயணிகளுக்கான முக்கிய நுழைவாயிலாகக் கருதப்படுகிறது. பீகார்-நேபாள எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்த நிலையம், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வரும் பயணிகளை நேபாளத்துடன் இணைக்கிறது. அதனால் இது ஒரு பெரிய டிரான்சிட் பாய்ண்ட் ஆகவும் பயன்படுகிறது.
இந்தியா பங்களாதேஷ் ரயில்
பங்களாதேஷ் தொடர்பான ரயில் சேவைகளில் பெட்ராபோல் ரயில் நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கிருந்து குல்னா நகரத்துக்கு ‘பந்தன் எக்ஸ்பிரஸ்’ இயக்கப்படுகிறது. மேலும் ராதிகாபூர் ரயில் நிலையம் மற்றும் ஹல்திபாரி ரயில் நிலையம் போன்ற நிலையங்களும் இந்தியா-பங்களாதேஷ் இணைப்பில் முக்கியமானவை. இந்த பாதைகள் வர்த்தகத்துக்கும் பயணத்துக்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இங்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மற்றும் விசா கட்டாயம்.
ரயிலில் வெளிநாடு பயணம்
பங்களாதேஷ் தொடர்பான ரயில் சேவைகளில் பெட்ராபோல் ரயில் நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கிருந்து குல்னா நகரத்துக்கு ‘பந்தன் எக்ஸ்பிரஸ்’ இயக்கப்படுகிறது. மேலும் ராதிகாபூர் ரயில் நிலையம் மற்றும் ஹல்திபாரி ரயில் நிலையம் போன்ற நிலையங்களும் இந்தியா-பங்களாதேஷ் இணைப்பில் முக்கியமானவை. இந்த பாதைகள் வர்த்தகத்துக்கும் பயணத்துக்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இங்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மற்றும் விசா கட்டாயம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

