சம்பள ஊழியர்களுக்கு முக்கிய தகவல்.. ITR ஃபைலிங் ஆரம்பம்.. கடைசி தேதி எப்போது?
2025-2026 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-4 படிவங்களுக்கான எக்ஸல் யூட்டிலிட்டி வெளியிடப்பட்டுள்ளது. கடைசி தேதி, வரி தாக்கல் முறை என்பதை பார்க்கலாம்.

ஐடிஆர் ஃபைலிங் அதிகாரப்பூர்வமாக தொடக்கம்
ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் மக்களுக்கு முக்கியமான அறிவிப்பை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. 2025-2026 நிதியாண்டுக்கான, அதாவது நிதியாண்டு 2026-2027 வருமான வரி தாக்கல் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐ-ஃபைலிங் போர்ட்டலில் ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-4 படிவங்களுக்கான எக்ஸல் யூட்டிலிட்டியும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடைசி நேர அவசரத்தை தவிர்க்கவும், வரி செலுத்துபவர்கள் முன்கூட்டியே ரிட்டர்ன் தாக்கல் செய்ய உதவவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐடிஆர் படிவங்கள்
வரி செலுத்துபவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தேவையான ஐடிஆர் படிவங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ஆன்லைன் ஃபைலிங் வசதியுடன், ஆஃப்லைனில் எக்செல் வடிவில் தகவல்களை தயார் செய்து போர்ட்டலில் அப்லோட் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சம்பளம், முதலீடு, TDS மற்றும் வங்கி வட்டி போன்ற தகவல்களை அமைதியாக சரிபார்த்து தாக்கல் செய்ய முடியும். அவசரத் தவறுகள் நேர்வதை குறைக்கவும் இந்த முறை உதவியாக இருக்கும் என வரித்துறை தெரிவித்துள்ளது.
வருமான வரி தாக்கல் முறை
ஐடிஆர்-1 படிவம் குறிப்பிட்ட வரம்புக்குள் வருமானம் பெறும் தனிநபர்களுக்கானது. ஆண்டு வருமானம் ரூ.50 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், வீட்டு வாடகை வருமானம் மற்றும் வட்டி வருமானம் உள்ளவர்கள் இந்த படிவத்தை பயன்படுத்தலாம். மேலும், குறைந்த அளவிலான விவசாய வருமானம் உள்ளவர்களும், குறிப்பிட்ட வரம்பிற்குள் நீண்டகால மூலதன ஆதாயம் பெற்றவர்களும் இந்த ஐடிஆர்-1 படிவத்தின் கீழ் ரிட்டர்ன் தாக்கல் செய்ய தகுதியானவர்களாக கருதப்படுகின்றனர்.
ஐடிஆர்-4
ஐடிஆர்-4 படிவம் சிறு தொழில் மற்றும் தொழில்முறை வருமானம் பெறுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக HUF-க்கள் மற்றும் LLP அல்லாத நிறுவனங்கள், ஆண்டுக்கு ரூ.50 லட்சத்திற்குள் வருமானம் பெறுபவர்கள் இந்த படிவத்தைப் பயன்படுத்தலாம். செக்ஷன் 44AD, 44ADA மற்றும் 44AE-ன் கீழ் அனுமான வரிவிதிப்பு முறையை தேர்வு செய்தவர்கள் மட்டுமே ஐடிஆர்-4 தாக்கல் செய்ய முடியும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கு முன்
ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கு முன், வரி செலுத்துபவர்கள் தங்களுடைய படிவம் 16, வங்கி விவரங்கள், முதலீட்டு ஆதாரங்கள் மற்றும் TDS தகவல்களை சரிபார்க்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஜூலை 31, 2026 கடைசி தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டியிருந்தால், முன்கூட்டியே தாக்கல் செய்வது மனஅழுத்தமில்லா அனுபவமாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

