MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • காசோலையில் ஏன் இப்படி கையொப்பம் போடவேண்டும்? செக் மூலம் பணம் பெற இதைத் தெரிந்துகொள்வது அவசியம்!

காசோலையில் ஏன் இப்படி கையொப்பம் போடவேண்டும்? செக் மூலம் பணம் பெற இதைத் தெரிந்துகொள்வது அவசியம்!

சில சமயங்களில் காசோலையை வங்கிக்குக் கொண்டுபோனால் பணம் பெறுவதற்கு முன் காசோலைக்குப் பின்னால் கையொப்பம் போடச் சொல்வார்கள். அது ஏன் தெரியுமா?​​​​​​

2 Min read
SG Balan
Published : Aug 24 2023, 10:56 PM IST| Updated : Aug 24 2023, 11:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
காசோலைகள்

காசோலைகள்

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு நிறைய பேர் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் செய்யப் பழகிவிட்டனர். இன்டர்நெட் பேங்கிங், UPI  போன்ற பேமெண்ட் வாய்ப்புகள் உள்ளபோது காசோலையை பயன்படுத்துவது குறைந்துவிட்டது. ஆனால் சில சந்தர்ப்பங்களில் செக் புக் பயன்படுத்த நேரிடலாம். வங்கியில் சென்று காசோலையைப் பணமாக மாற்ற வேண்டிய தேவை ஏற்படலாம்.

27
காசோலைக்குப் பின் கையொப்பம்

காசோலைக்குப் பின் கையொப்பம்

காசோலையைக் கொடுத்து பணம் செலுத்த வங்கிக்குப் போனால், காசோலைக்குப் பின்னால் கையொப்பம் போடச் சொல்வார்கள். செக்கில் முன்பக்கம் கொடுப்பவரின் கையொப்பம் இருக்கும்போது ஏன் இப்படி பின்னால் கையெழுத்து போடுங்கள் என்று சொல்கிறார்கள் என்ற சிலர் யோசித்திருக்கலாம். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது என நிறைய பேருக்குத் தெரிந்திருக்காது.

37
ஏன் கையொப்பம் தேவை?

ஏன் கையொப்பம் தேவை?

வங்கி அதிகாரிகள் எல்லா செக்கிலும் இப்படி கையெழுத்து போடச் சொல்லி கேட்க மாட்டார்கள். சில காசோலைகளுக்கு மட்டும்தான் பின்புறத்தில் கையொப்பமிடுவது தேவை. எந்த காசோலையில் பின்புறம் கையொப்பம் போட வேண்டும்? எந்த காசோலையில் அது தேவையில்லை என்று தெரிந்துகொள்வது நல்லது.

47
இரண்டு வகை காசோலைகள்

இரண்டு வகை காசோலைகள்

பியரர் செக் (Bearer Cheque), ஆர்டர் செக் (Order Cheque) என்று இரண்டு வகையான காசோலைகள் உள்ளன. இதில், முதல் வகையான பியரர் காசோலையில் தான் பின்புறம் கையொப்பம் வேண்டும் என்று சொல்வார்கள். மற்றொரு வகையான ஆர்டர் காசோலைக்கு பின்புறத்தில் கையெழுத்து போடுவது கட்டாயம் இல்லை.

57
பியரர் காசோலை, ஆர்டர் காசோலை

பியரர் காசோலை, ஆர்டர் காசோலை

பியரர் காசோலையை யார் வேண்டுமானாலும் வங்கியில் கொடுத்து பணத்தை வாங்கிக்கொள்ளலாம். ஆர்டர் காசோலையில், முன்பக்கத்தில் யாருடைய பெயர் எழுதப்பட்டிருக்கிறதோ அந்த நபர் மட்டுமே பணத்தைப் பெறமுடியும். அந்த நபர் காசோலையுடன் வங்கிக்கு வந்து, அதில் குறிப்பிட்டுள்ள நபர் தான் தான் என்று நிரூபிக்க வேண்டும். இதனால்தான், ஆர்டர் காசோலைக்குக் கையெழுத்து தேவையில்லை.

67
வங்கி பொறுப்பல்ல

வங்கி பொறுப்பல்ல

பியரர் காசோலை மூலம் மோசடியாக யாராவது பணத்தைப் பெற்றுவிட்டால், வங்கி மீது குற்றச்சாட்டு வந்துவிடும். இதைத் தவிர்க்கவே, பியரர் காசோலையைச் செலுத்துபவரிடம் பின்பக்கத்தில் கையெழுத்து பெற்றுக்கொள்கிறார்கள். இதனால், தவறான நபருக்கு பணம் கொடுக்கப்பட்டாலும் வங்கியின் பொறுப்பு ஆகாது.

77
சொந்தக் கணக்கில் காசோலை பயன்பாடு

சொந்தக் கணக்கில் காசோலை பயன்பாடு

ஆர்டர் காசோலையைப் போல, ஒரு நபர் தன் சொந்தக் கணக்கில் இருந்தே காசோலை மூலம் பணம் எடுப்பதற்கும் காசோலையின் பின்புறத்தில் கையொப்பம் போட வேண்டாம். அதே நேரத்தில் செக் மூலம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்கவேண்டும் என்றால் கண்டிப்பாக வங்கியில் முகவரிச் சான்று ஒன்றைக் கொடுக்கச் சொல்வார்கள் என்றும் நினைவில் கொள்ளவேண்டும்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
தமிழ் செய்திகள்
வங்கி விதிகள்
காசோலை
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved