MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 3 நாளில் ஜிஎஸ்டி பதிவு: அரசின் புதிய திட்டம் யாருக்கு நன்மை அளிக்கும்?

3 நாளில் ஜிஎஸ்டி பதிவு: அரசின் புதிய திட்டம் யாருக்கு நன்மை அளிக்கும்?

சிறு, குறைந்த ஆபத்துள்ள தொழில்களுக்காக மத்திய அரசு புதிய, எளிமையான ஜிஎஸ்டி பதிவு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தகுதியுள்ள நிறுவனங்கள் மூன்று வேலை நாட்களில் பதிவு பெறலாம்.

1 Min read
Raghupati R
Published : Nov 02 2025, 06:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஜிஎஸ்டி பதிவு புதிய விதி
Image Credit : Google

ஜிஎஸ்டி பதிவு புதிய விதி

சிறு, குறைந்த ஆபத்து கொண்ட தொழில்களுக்கு மத்திய அரசு புதியது எளிமையான ஜிஎஸ்டி பதிவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்போது தொழில்கள் வெறும் மூன்று வேலை நாட்களுக்கு ஜிஎஸ்டி பதிவை பெற முடியும். மாதத்துக்கு ரூ.2.5 லட்சம் வரை வரி செலுத்தும் தொழில்களுக்கே இந்த திட்டத்தின் நன்மை கிடைக்கும். இதன் மூலம் புதிய தொழில்முனைவோருக்கு பதிவு செய்வதில் தாமதம் மற்றும் சிக்கல்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

24
இந்த புதிய திட்டத்தின் நன்மையை பெற யார் தகுதி பெற்றவர்கள்?
Image Credit : Google

இந்த புதிய திட்டத்தின் நன்மையை பெற யார் தகுதி பெற்றவர்கள்?

ஜிஎஸ்டி அமைப்பின் தரவுகளின் அடிப்படையில் “குறைந்த ஆபத்து” ​​என்று வகைப்படுத்தப்பட்ட தொழில்களும், தங்களது மாதந்திர வரி பொறுப்பு ரூ.2.5 லட்சத்திற்கு குறைவாகவே இருக்கும் என்று தாங்களே அறிவிக்கும் நிறுவனங்களும் இதில் சேரலாம். இந்த திட்டத்தில் சேரும் தொழில்கள் பின்னர் இதிலிருந்து விலகவும் முடியும்.

Related Articles

Related image1
நவம்பர் 1 முதல் 1% கட்டணம்.. இந்த வங்கியில் அக்கவுண்ட் இருக்கா?
Related image2
நவம்பர் 1 முதல் புதிய கட்டணங்கள்.. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.!
34
3 நாள் ஜிஎஸ்டி திட்டம்
Image Credit : Asianet News

3 நாள் ஜிஎஸ்டி திட்டம்

இந்த புதிய முயற்சியை ஜிஎஸ்டி கவுன்சில் (மத்திய மற்றும் மாநில நிதி அமைச்சர்கள் குழு) கடந்த செப்டம்பர் 3ம் தேதி அங்கீகரித்தது. இதை குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நவம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த இந்த திட்டம் புதிய விண்ணப்பதாரர்களுக்கு 96% நன்மை தரும்” தெரிவித்துள்ளார். மேலும், ஜிஎஸ்டி சேவை மையங்களில் ஹெல்ப் டெஸ்க்கள் அமைக்குமாறு மத்திய வரித்துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

44
எளிமையான வரி பதிவு முறை
Image Credit : Getty

எளிமையான வரி பதிவு முறை

ஆனால், வரி நிபுணர்களும் சிறு தொழில் சங்கங்களும் கூறுவது வேறு. “இந்த திட்டம் நல்லது தான், ஆனால் உண்மையான சவால் அதன் நடைமுறைப்படுத்தல்தான்” என்கிறார்கள். முந்தைய முயற்சிகளில் பல முறை சிஸ்டம் கோளாறுகள், தரவு சரிபார்ப்பு தாமதம், மாறுபட்ட விதிமுறைகள் போன்றவை தொழில்களுக்கு சிரமம் ஏற்படுத்தியதாக அவர்கள் நினைவூட்டுகின்றனர். எனவே, முழுமையாக தானியக்க முறைமை மற்றும் பொறுப்புணர்வு ஏற்படுத்தப்படும்வரை “மூன்று நாளில் பதிவு” என்ற வாக்குறுதி நம்பிக்கையிலேயே தங்கிவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜி.எஸ்.டி
வரி
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved