MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • GST Reforms: அடித்தட்டு மக்களுக்கு தீபாவளி பம்பர் பரிசு.! 90% பொருட்களின் விலை குறையும்.! இனி எதை வேண்டுமானாலும் வாங்கலாம் மாமு.!

GST Reforms: அடித்தட்டு மக்களுக்கு தீபாவளி பம்பர் பரிசு.! 90% பொருட்களின் விலை குறையும்.! இனி எதை வேண்டுமானாலும் வாங்கலாம் மாமு.!

இந்திய அரசாங்கம் ஜிஎஸ்டி வரி அமைப்பை இரண்டு அடுக்குகளாக மாற்ற முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் 90% பொருட்களின் விலை குறையும், அடித்தட்டு மக்களுக்கு நேரடி நன்மைகள் கிடைக்கும்.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Aug 22 2025, 10:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
90 சதவீத பொருட்களின் விலை குறையும்
Image Credit : our own

90 சதவீத பொருட்களின் விலை குறையும்

இந்திய அரசாங்கம் ஜிஎஸ்டி ஆண்டுகளுக்குப் பிறகும் பல முறை சீர்திருத்தங்களை செய்து வந்தாலும், 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12% மற்றும் 28% வரி அடுக்குகளை முற்றிலும் நீக்கி, வரி அமைப்பை 2 அடுக்கு வரிகளாக மாற்ற முடிவெடுத்துள்ளது வர்த்தக வரலாற்றில் அசாதாரண முடிவாக கருதப்படுகிறது. இதன் மூலம் 5% மற்றும் 18% என்ற அடுக்குக்களில் மட்டும் வரி கட்டமைப்பு அமைக்கப்படுகிறது. இதனால் பயன்பாட்டுக்கு 90 சதவீத பொருட்களின் விலை குறையும் என்று கூறப்படுகிறது.

26
முக்கிய பொருட்களில் கிடைக்கும் விலை குறைவு
Image Credit : Pixabay

முக்கிய பொருட்களில் கிடைக்கும் விலை குறைவு

ஜிஎஸ்டி 12% அடுக்கிலிருந்து 5% வரிக்கு மாற்றப்படும் நிலையில். இதனால், மருந்துகள், உணவுப் பொருட்கள், துணிகள், காலணிகள் மற்றும் கூடுதலாக அன்றாட பயன்பாட்டு உபகரணங்கள் குறைந்த விலையில் கிடைக்கும்.ஜிஎஸ்டி 28%  அடுக்கிலிருந்து 18% வரிக்கு மாற்றப்படுவதால் கார், மாடல் மொபைல்ஸ், கட்டுமானப் பொருட்கள் போன்ற உயர்தரம் பொருட்களில் விலை சிறப்பாக வீழ்ச்சி ஏற்படும்.

12% ஜிஎஸ்டி வரி இருந்த பல அத்தியாவசியப் பொருட்கள் – மருந்துகள், குடும்ப உபயோகப் பொருட்கள், சில உணவுப் பொருட்கள் – இப்போது 5% அல்லது 18% வரி பிரிவுக்கு மாற்றப்படுகின்றன. அதேபோல் 28% வரி இருந்த ஏசி, ஃபிரிட்ஜ், விலாச வாகனங்கள் போன்ற பொருட்கள் பெரும்பாலும் 18% பிரிவுக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனால் தினசரி தேவைகளுக்கும், சில பெரிய விலையுயர்ந்த பொருட்களுக்கும் விலை குறைவு காணப்படும்.

Related Articles

Related image1
Trump Tax War: அமெரிக்க வரி போரில் இந்தியா சிக்கியதா.?! அதெல்லாம் சும்மாவா.!
Related image2
சைக்கிள் ஓட்டுவதற்கு Tax! இந்தியாவில் CYCLE கடந்து வந்த பாதை தெரியுமா?!
36
அடித்தட்டு மக்களுக்கு நேரடி நன்மைகள்
Image Credit : SOCIAL MEDIA

அடித்தட்டு மக்களுக்கு நேரடி நன்மைகள்

  • அன்றாட செலவுகள் குறையும்; குடும்பம் அதிக பொருட்களை வாங்கக்கூடிய நிலை உருவாகும்.
  • கட்டுமான செலவு குறைந்து வீடு கட்டும் கனவு எளிதாக்கப்படும்.
  • இயலும் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு, பொருளாதார விகிதங்கள் மேம்படும்.
  • குறைந்த வரி காரணியாக வளர்ச்சி மற்றும் விற்பனை அதிகரிக்கும்.

இந்த மாற்றத்தால் அடித்தட்டு மக்களுக்கு நேரடி நன்மை கிடைக்கிறது. குடும்பச் செலவுகளில் சேமிப்பு ஏற்படும். மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையதால் மாதாந்திர செலவின சுமை குறையும். உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வர்க்கத்துக்கு பெரும் சலுகை கிடைக்கும்.

46
பொருளாதார சூழலில் எதிரொலி
Image Credit : our own

பொருளாதார சூழலில் எதிரொலி

  • வருமான வரி அனுமானம் அதிகரிக்கும், ஏனெனில் அதிக பொருட்களின் விலை குறையும் போது வர்த்தகம் அதிகரிக்கும்.
  • சிறிய வியாபாரிகள், தொழிலாளர்கள் வாழ்க்கைத் தரம் உயரும்.
  • மோட்டார் வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட கட்டுமானத் துணைப்புப் பொருட்களின் விலை குறையும்.
56
இன்னும் கவனிக்க வேண்டியவை
Image Credit : our own

இன்னும் கவனிக்க வேண்டியவை

  1. புகையிலை, பான் மசாலா மற்றும் சில ஆடம்பர பொருட்களுக்கு கடுமையான 40% வரி தொடரும்.
  2. சில விலைகள் உயர்வும் இருக்கக்கூடும், ஆனால் பெரும்பான்மையிலான பொருட்களின் விலை இறங்கும்.
66
பொருளாதார வரலாற்றில் முக்கிய அடையாளம்
Image Credit : our own

பொருளாதார வரலாற்றில் முக்கிய அடையாளம்

இந்த வரி அடுக்கு சீர்திருத்தம் இந்திய பொருளாதார வரலாற்றில் முக்கிய அடையாளமாக உள்ளது. இது எளிமையான வரி அமைப்பை உருவாக்கி 90 சதவீத பொருட்களின் விலை குறைப்பதற்கான வழியைத் திறக்கிறது. அடித்தட்டு மக்களுக்கு மிகுதான பொருட்கள் மலிவாகி, வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பொருளாதார மாற்றம் இது.

இந்த மாற்றம் நாட்டு பொருளாதாரத்தை வேகமாக ஊக்குவிக்கும் மிகப்பெரிய முயற்சி ஆகும்!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜி.எஸ்.டி
சரக்கு மற்றும் சேவை வரி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved