MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gratuity Rules: 1 வருஷம் வேலை பார்த்தாலே 'கிராஜுவிட்டி'.. மத்திய அரசு சொன்ன குட்நியூஸ்... ஆனா ஒரு ட்விஸ்ட்!

Gratuity Rules: 1 வருஷம் வேலை பார்த்தாலே 'கிராஜுவிட்டி'.. மத்திய அரசு சொன்ன குட்நியூஸ்... ஆனா ஒரு ட்விஸ்ட்!

Gratuity Rules: மத்திய அரசு கிராவிட்டி விதிகளில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி, ஒப்பந்த ஊழியர்கள் இனி ஒரு வருடம் வேலை பார்த்தாலே கிராவிட்டி வாங்கலாம். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
| Updated : Sep 09 2026, 06:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
1 வருஷம் வேலை பார்த்தாலே 'கிராஜுவிட்டி'
Image Credit : Asianet News

1 வருஷம் வேலை பார்த்தாலே 'கிராஜுவிட்டி'

நிரந்தர ஊழியர்களுக்கு இந்த விதி பொருந்தாது. அவர்கள் கிராவிட்டி பெற, முன்பு போலவே ஒரு நிறுவனத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி இருக்க வேண்டும். அடிக்கடி வேலை மாறும் இளம் தலைமுறை ஊழியர்களுக்கு இது பெரிய நன்மை. முன்பு 5 வருடங்களுக்குள் வேலையை விட்டால் கிராவிட்டி கிடைக்காது. இனி, ஓராண்டு உழைப்புக்கும் பலன் கிடைக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
நிரந்தர ஊழியர்களுக்கு விதிமுறைகளில் மாற்றம் இல்லை
Image Credit : freepik AI

நிரந்தர ஊழியர்களுக்கு விதிமுறைகளில் மாற்றம் இல்லை

கிராவிட்டி செலுத்துதல் சட்டத்தின்படி, நேர்மையாகப் பணியாற்றும் ஊழியரின் கிராவிட்டி பணத்தை நிறுவனம் எந்தக் காரணமும் இல்லாமல் நிறுத்தி வைக்க முடியாது. உடல்ரீதியான தாக்குதல், தகாத வார்த்தைகள் பேசுவது, பாலியல் துன்புறுத்தல் போன்ற பெரிய தவறுகளில் ஈடுபட்டால், நிர்வாகம் ஊழியரின் கிராவிட்டி பணத்தை நிறுத்தி வைக்கலாம்.

Related Articles

Related image1
டிஏ உயர்வால் இந்த அரசு ஊழியர்கள் 25 லட்சம் கிராஜுவிட்டி பெறுவார்கள்!
Related image2
கிராஜுவிட்டி கணக்கிடுவது எப்படி? 5, 7, 10 ஆண்டு சர்வீஸுக்கு பணிக்கொடை எவ்வளவு?
35
இளம் தலைமுறைக்கு பெரிய லாபம்
Image Credit : social media

இளம் தலைமுறைக்கு பெரிய லாபம்

ஒரு ஊழியரின் கவனக்குறைவால் அல்லது வேண்டுமென்றே செய்த தவறால் நிறுவனத்திற்குப் பெரிய நிதி இழப்பு ஏற்பட்டால், அந்த இழப்பை ஈடுசெய்ய கிராவிட்டி தொகையிலிருந்து பிடித்தம் செய்ய நிறுவனத்திற்கு உரிமை உண்டு. மோசடி, லஞ்சம், ஆவணங்களைத் திருத்துதல், திருட்டு போன்றவற்றில் ஈடுபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஊழியரின் முழு கிராவிட்டி தொகையையும் நிறுவனம் பறிமுதல் செய்யலாம்.

45
நேர்மையான ஊழியரின் பணத்தை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை
Image Credit : google

நேர்மையான ஊழியரின் பணத்தை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை

ஊழியர் மீது குற்றச்சாட்டு இருந்தாலும், நிறுவனம் தன்னிச்சையாக பணத்தை நிறுத்த முடியாது. முதலில் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் (Show-cause notice) அனுப்ப வேண்டும். நிறுவனத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தைத் தாண்டி, கூடுதலாகப் பணத்தைப் பிடிக்க முடியாது. மீதமுள்ள கிராவிட்டி தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் ஊழியருக்குக் கொடுப்பது நிறுவனத்தின் சட்டப்பூர்வ கடமை.

55
மாதாந்திர சம்பள அமைப்பில் மாற்றம்
Image Credit : Getty

மாதாந்திர சம்பள அமைப்பில் மாற்றம்

புதிய தொழிலாளர் விதிகளின்படி, ஒரு ஊழியரின் மொத்தச் சம்பளத்தில் (Cost to Company - CTC) அடிப்படைச் சம்பளம் (Basic Pay) மற்றும் அகவிலைப்படி (DA) ஆகியவை குறைந்தபட்சம் 50 சதவீதமாக இருக்க வேண்டும்.

இதன் காரணமாக ஊழியர்களின் மாதாந்திர அடிப்படைச் சம்பளம் உயரும். அடிப்படைச் சம்பளத்தைக் கணக்கிட்டே கிராஜுவிட்டி வழங்கப்படுவதால், ஊழியர்கள் பணிநிறைவு பெறும்போது அவர்களுக்குக் கிடைக்கும் மொத்தக் கிராஜுவிட்டி தொகை கணிசமாக அதிகரிக்கும்.

வரி விலக்கு வரம்பு உயர்வு: தொழிலாளர்களின் நிதிப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அரசு சாரா ஊழியர்களுக்கான கிராஜுவிட்டி தொகையின் மீதான வருமான வரி விலக்கு வரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து உயர்த்தப்பட்டுள்ளது. கிராஜுவிட்டி கணக்கிடும் சூத்திரம்: கிராஜுவிட்டி தொகை என்பது ஊழியர் பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டிற்கும் 15 நாட்கள் சம்பளத்தைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

காலக்கெடு மற்றும் தாமதத்திற்கான வட்டி

ஒரு ஊழியர் நிறுவனத்திலிருந்து விலகிய அல்லது பணி ஓய்வு பெற்ற 30 நாட்களுக்குள் கிராஜுவிட்டி தொகையை நிறுவனம் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதற்குரிய வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்பது சட்டப்பூர்வ கடமையாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: 35 லட்சம் ஊழியர்களின் சம்பளம் உயருமா? 8வது ஊதியக் குழுவின் சென்னை மீட்டிங் லேட்டஸ்ட் அப்டேட்!
Recommended image2
Tomato: தக்காளியை எப்படி சேமிக்கலாம் தெரியுமா? கிலோ 1 ரூபாய்க்கு விற்றாலும் நஷ்டமே வராது.!
Recommended image3
Lower Berth Rules: கீழ் படுக்கை வேண்டுமா? இந்த பயணிகளுக்கு முன்னுரிமை உண்டு என தெரியுமா?
Related Stories
Recommended image1
டிஏ உயர்வால் இந்த அரசு ஊழியர்கள் 25 லட்சம் கிராஜுவிட்டி பெறுவார்கள்!
Recommended image2
கிராஜுவிட்டி கணக்கிடுவது எப்படி? 5, 7, 10 ஆண்டு சர்வீஸுக்கு பணிக்கொடை எவ்வளவு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved