MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Govt Scheme: தனியார் துறை பணியாளர்களுக்கு அரசு தரும் ரூ.15000 உதவித்தொகை.! உடனே விண்ணப்பியுங்கள்.!

Govt Scheme: தனியார் துறை பணியாளர்களுக்கு அரசு தரும் ரூ.15000 உதவித்தொகை.! உடனே விண்ணப்பியுங்கள்.!

Govt Scheme: தனியார் துறையில் முதன்முறை வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு அரசு ரூ.15,000 உதவித்தொகையாக வழங்குகிறது. இந்த உதவித்தொகை யாருக்கு கிடைக்கும்? அதற்கான நிபந்தனைகள் என்ன? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

3 Min read
Author : Ramprasath S
Published : Jun 15 2026, 01:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
PMVBRY Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana
Image Credit : ChatGPT

PMVBRY - Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana

மத்திய அரசின் 2024-2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் 1, 2025 முதல் நடைமுறைக்கு வந்த ஒரு முக்கிய திட்டம் தான் ‘பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா' (PMVBRY). இந்தத் திட்டமானது நாட்டில் முதல்முறையாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் குறித்த முழு விவரங்கள், தகுதிகள், நிபந்தனைகள், விண்ணப்பிக்கும் முறை ஆகியவை குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:  Govt Scheme: வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 உதவித் தொகை.! இவர்களுக்கெல்லாம் கிடைக்காது? தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ன?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
Image Credit : X/Twitter

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

இந்தத் திட்டம் கொண்டு வந்ததற்கான முக்கிய நோக்கமே புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது தான். இந்த அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 3.5 கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. முதன்முறையாக வேலைக்கு சேரும் பணியாளர்கள் மற்றும் புதிய வேலைகளை உருவாக்கும் நிறுவனங்கள் என இரு தரப்பிற்கும் நிதியுதவி மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்குகிறது. இந்த திட்டம் 1 ஆகஸ்ட் 2025 முதல் 31 ஜூலை 2027 வரை உருவாக்கப்படும் புதிய வேலைவாய்ப்புகள் அனைத்திற்கும் பொருந்தும்.

இதையும் படியுங்கள்: Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் மெகா மோசடி.! 4.30 லட்சம் பயனாளர்கள் நீக்கம்.! அரசு எடுத்த அதிரடி முடிவு.!

Related Articles

Related image1
Govt Scheme: வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 உதவித் தொகை.! இவர்களுக்கெல்லாம் கிடைக்காது? தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ன?
Related image2
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் மெகா மோசடி.! 4.30 லட்சம் பயனாளர்கள் நீக்கம்.! அரசு எடுத்த அதிரடி முடிவு.!
37
தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்
Image Credit : our own

தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்

முதல்முறையாக வேலைவாய்ப்பில் இணையும் இளைஞர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தும். விண்ணப்பதாரர் இதற்கு முன்பு EPFO அல்லது அது சார்ந்த எந்தவித வருங்கால பைப்பு நிதி கணக்கிலும் பங்களிப்பு செய்யாத முதல் முறையாக வேலைக்கு சேரும் நபராக இருக்க வேண்டும். பணியாளரின் மாதாந்திர மொத்த சம்பளம் ஒரு லட்சம் மற்றும் அதற்கு குறைவாக இருக்க வேண்டும். பணியாளர் சேரும் நிறுவனம் EPFO நிறுவனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பணியாளரின் ஆதார் கார்டு, வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:  Train Ticket: வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகுமா? இனி முன்கூட்டியே தெரிஞ்சிக்கலாம்.!

47
வழங்கப்படும் சலுகைகள்
Image Credit : our own

வழங்கப்படும் சலுகைகள்

தகுதியுள்ள புதிய பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு இணையான தொகை (அதிகபட்சமாக 15 ஆயிரம் வரை) ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இந்த பணம் நேரடியாக பணியாளரின் வங்கி கணக்கிற்கு இரண்டு தவணைகளாக வழங்கப்படும். முதல் தவணை ஆறு மாத கால பணியை வெற்றிகரமாக முடித்தப் பின்னரும், இரண்டாவது தவணை 12 மாத கால பணியை முடித்தப் பின்னரும் வழங்கப்படும். இதற்கு EPFO வழங்கும் எளிய நிதிசார் அறிவுத்திறன் படிப்பை ஊழியர் முடித்திருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்: Property Law: தந்தை உயில் எழுதவில்லை என்றால் சொத்து யாருக்குப் போகும்? மகள்களின் சட்டப்பூர்வ உரிமை என்ன?

57
நிறுவனங்களுக்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்
Image Credit : our own

நிறுவனங்களுக்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளும் நிறுவனங்களுக்கும் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதற்கான தகுதிகள் - பதிவு செய்யப்பட்டு நடப்பில் உள்ள நிறுவனமாக இருக்க வேண்டும். ஆகஸ்ட் 1, 2025 முதல் ஜூலை 31, 2027க்குள் நிறுவனங்கள் கூடுதல் பணியாளர்களை வேலைக்கு எடுத்திருக்க வேண்டும். அதாவது ஏற்கனவே இருக்கும் பணியாளர்களின் எண்ணிக்கை விட கூடுதலாக புதிய வேலைவாய்ப்பை உருவாக்கி இருக்க வேண்டும். ஊழியர்களுக்கான மாதாந்திர PF பங்களிப்பு விவரங்களை நிறுவனம் முறையாக செலுத்தி இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்: Facts: அமெரிக்க வீடுகள்ல ஏன் மொட்டை மாடில தண்ணி டேங்க் இல்ல? என்ன காரணம் தெரியுமா?

67
நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்
Image Credit : our own

நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்

கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு தகுதி வாய்ந்த ஒவ்வொரு புதிய ஊழியருக்கும், மாதம் ரூ.3,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகை இரண்டு ஆண்டுகள் வரை நிறுவனங்களுக்கு வழங்கப்படும். உற்பத்தித் துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு இது கூடுதலாக இரண்டு ஆண்டுகள் அதாவது மொத்தம் நான்கு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும்.

இதையும் படியுங்கள்:  Facts: ரயில் தண்டவாளத்தின் நடுவில் ஜல்லிக்கற்கள் ஏன் கொட்டப்படுது? இதன் பின்னால் உள்ள அறிவியல் தெரியுமா?

77
விண்ணப்பிக்கும் முறை
Image Credit : Getty

விண்ணப்பிக்கும் முறை

பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த சலுகைகளை பெறுவதற்கு பெரிய அளவில் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை. இந்த நடைமுறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. ஒரு புதிய ஊழியர் நிறுவனத்தில் சேரும்பொழுது அவருக்கான புதிய UAN எண் உருவாக்கப்படும். அந்த எண் ஆதார் உடன் இணைக்கப்படும் பொழுது அவர் முதன்முறை பணியாளர் என்பது சிஸ்டம் மூலம் தாமாகவே சரிபார்க்கப்பட்டு தகுதி நிர்ணயிக்கப்படும். நிறுவனங்கள் இதற்கென பிரத்தியேகமாக தொடங்கப்பட்டுள்ள அரசு இணையதளமான அல்லது EPFO போர்ட்டல் மூலம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். புதிய ஊழியர்கள் UMANG ஆப்பில் உள்ள Face Authentication Technology (FAT) மூலமாக தங்களின் UAN எண்ணை எளிதாக உருவாக்கிக் கொள்ள முடியும்.

முக்கிய குறிப்பு

ஒரு பணியாளர் 12 மாதங்களுக்குள் அந்த வேலையை விட்டுவிட்டு தன்னிச்சையாக நின்றாலோ அல்லது நிறுவனம் மூடப்பட்டாலோ அந்த பணியாளர் அல்லது நிறுவனத்திற்கான ஊக்கத்தொகை நிறுத்தப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மிகச்சிறந்த தற்காலிகத் திட்டம் இதுவாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தொழில்
அரசு திட்டம்
வேலைவாய்ப்பு
உதவித்தொகை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Income Idea: சம்பளம் பத்தலையா? மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்க உதவும் 5 புதிய பிஸ்னஸ் ஐடியாக்கள்!
Recommended image2
Train: ரயில் பயணிகளுக்கு கிடைக்கும் 7 இலவச வசதிகள்! இனி காசு கொடுத்து ஏமாறாதீங்க!
Recommended image3
Petrol Price : முடிவுக்கு வந்த அமெரிக்க-ஈரான் போர்! பெட்ரோல்-டீசல் விலை குறையுமா?
Related Stories
Recommended image1
Govt Scheme: வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 உதவித் தொகை.! இவர்களுக்கெல்லாம் கிடைக்காது? தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ன?
Recommended image2
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் மெகா மோசடி.! 4.30 லட்சம் பயனாளர்கள் நீக்கம்.! அரசு எடுத்த அதிரடி முடிவு.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved