MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Agriculture: அசால்ட்டா மாதம் ரூ.50,000 கிடைக்கும்.! லாபத்தை அள்ளித்தரும் சிப்பிக்காளான்.! பழைய தொழிலில் புதிய வழி இருக்கு தெரிஞ்சுக்கோங்க.!

Agriculture: அசால்ட்டா மாதம் ரூ.50,000 கிடைக்கும்.! லாபத்தை அள்ளித்தரும் சிப்பிக்காளான்.! பழைய தொழிலில் புதிய வழி இருக்கு தெரிஞ்சுக்கோங்க.!

சிப்பிக்காளான் வளர்ப்பு என்பது குறைந்த முதலீட்டில் மாதம் ரூ.50,000 வரை லாபம் ஈட்டக்கூடிய ஒரு சிறந்த சுயதொழில் ஆகும். நவீன தொழில்நுட்பங்கள், அரசின் மானிய உதவி மற்றும் மதிப்புக்கூட்டல் பொருட்கள் மூலம் இந்தத் தொழிலில் எளிதாக வெற்றி பெறலாம்.

3 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jan 02 2026, 12:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
கொட்டிக்கிடக்கும் லாபம் ஏராளம்
Image Credit : Asianet News

கொட்டிக்கிடக்கும் லாபம் ஏராளம்

இன்றைய காலகட்டத்தில் ஒரு வேலையை நம்பி இருப்பதை விட, கைநிறைய வருமானம் தரும் சுயதொழில் செய்வதுதான் புத்திசாலித்தனம். அந்த வகையில், மிகக் குறைந்த முதலீட்டில், மிகக் குறைந்த இடத்தில்,  அசால்ட்டாக மாதம் 50,000 ரூபாய் வரை லாபம் தரும் தொழிலாக உருவெடுத்துள்ளது சிப்பிக்காளான் வளர்ப்பு. பழைய தொழில் என்றாலும், இப்போதுள்ள நவீன தொழில்நுட்பங்களைச் சேர்த்தால் இதில் கொட்டிக்கிடக்கும் லாபம் ஏராளம்!

28
என்ன செய்ய வேண்டும்? புதிய வழிமுறைகள்
Image Credit : Asianet News

என்ன செய்ய வேண்டும்? புதிய வழிமுறைகள்

சிப்பிக்காளான் வளர்ப்பிற்குப் பெரிய நிலமோ, பலமான கட்டிடமோ தேவையில்லை. உங்கள் வீட்டின் ஒரு ஓரத்தில் 10-க்கு 10 அடி உள்ள ஒரு சிறிய குடில் இருந்தால் போதும்.

நவீன முறை

பழைய முறையில் வைக்கோலை வேகவைக்கப் பெரும் சிரமப்பட்டனர். ஆனால் இப்போது 'ஸ்பான்'  எனப்படும் தரமான காளான் வித்துக்கள் மற்றும் நவீன கிருமி நீக்க முறைகள் வந்துவிட்டன.

பராமரிப்பு

பாலித்தீன் பைகளில் வைக்கோலை அடுக்கி, இடையில் காளான் வித்துக்களைத் தூவி கட்டித் தொங்கவிட்டால் போதும். தினமும் ஒரு மணிநேரம் தண்ணீர் தெளிக்கும் பராமரிப்பு மட்டுமே இதற்குத் தேவை.

Related Articles

Related image1
Business: வீட்டில் இருந்தே தினமும் 3 ஆயிரம் சம்பாதிக்கலாம்.! சிப்ஸ் தயாரித்தால் இவ்ளோ லாபம் கிடைக்குமா?!
Related image2
Business: சம்பளம் போதலையா? அரசு மானியத்துடன் மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம்.! எப்படி தெரியுமா?
38
அரசு கொடுக்கும் அள்ள அள்ளக் குறையாத மானியம்!
Image Credit : Asianet News

அரசு கொடுக்கும் அள்ள அள்ளக் குறையாத மானியம்!

முதலீட்டிற்குப் பணம் இல்லையே என கவலைப்படத் தேவையில்லை. தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை காளான் வளர்ப்பை ஊக்குவிக்கப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சிறிய அளவிலான காளான் குடில் அமைக்க 40% முதல் 50% வரை அரசு மானியம் வழங்கப்படுகிறது. காளான் வித்து உற்பத்தி நிலையம் அமைக்க விரும்புவோருக்குச் சுமார் 1 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி மற்றும் மானியங்கள் கிடைக்கின்றன. வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மாவட்ட அறிவியல் நிலையங்கள் மூலம் குறைந்த கட்டணத்தில் முறையான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

48
வருமானக் கணக்கு
Image Credit : Asianet News

வருமானக் கணக்கு

மாதம் ரூ.50,000 எப்படி? இங்கேதான் சூட்சுமம் இருக்கிறது. ஒரு காளான் படுக்கை தயாரிக்க வெறும் ரூ.50 முதல் ரூ.60 மட்டுமே செலவாகும். ஆனால் ஒரு படுக்கையில் இருந்து குறைந்தது 1 முதல் 1.5 கிலோ காளான் கிடைக்கும்.நீங்கள் ஒரு நாளைக்கு 15 முதல் 20 படுக்கைகள் தயார் செய்து, சுழற்சி முறையில் பராமரித்தால், மாதம் 400 - 500 படுக்கைகளை நிர்வகிக்கலாம். ஒரு கிலோ காளான் சந்தையில் ரூ.200 முதல் ரூ.250 வரை விற்கப்படுகிறது. அனைத்துச் செலவுகளும் போக ஒரு படுக்கைக்கு ₹120 லாபம் என்று கணக்கிட்டாலும், 400 படுக்கைகள் மூலம் மாதம் ரூ.48,000 முதல் ரூ.50,000 வரை சுலபமாக வருமானம் ஈட்டலாம்.

58
சந்தை வாய்ப்பு மற்றும் மதிப்புக்கூட்டல்
Image Credit : Asianet News

சந்தை வாய்ப்பு மற்றும் மதிப்புக்கூட்டல்

உள்ளூர் உணவகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளே உங்களின் பெரிய சந்தை. அதுமட்டுமின்றி, விற்காத காளான்களை வீணாக்காமல் அவற்றை உலர வைத்து காளான் பொடி, சூப் மிக்ஸ் அல்லது காளான் ஊறுகாய் என மதிப்புக்கூட்டி விற்றால் லாபத்தை இன்னும் இரட்டிப்பாக்கலாம்.

68
என்னென்ன மதிப்புக்கூட்டுப் பொருட்கள் செய்யலாம்?
Image Credit : Asianet News

என்னென்ன மதிப்புக்கூட்டுப் பொருட்கள் செய்யலாம்?

காளான் ஊறுகாய் (Mushroom Pickle)

காளான்களைச் சிறிய துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் வதக்கி, மசாலாக்கள் சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. இது பல மாதங்கள் கெடாமல் இருக்கும்.

காளான் பொடி (Mushroom Powder)

அறுவடை செய்த காளான்களை நன்றாக உலர்த்தி, அரைத்துப் பொடியாக்குவது. இதைச் சூப், குழம்பு அல்லது சத்துமாவு தயாரிக்கப் பயன்படுத்தலாம்.

காளான் சூப் மிக்ஸ் (Instant Soup Mix)

காளான் பொடியுடன் மக்காச்சோள மாவு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து இன்ஸ்டண்ட் சூப் மிக்ஸாக விற்கலாம்.

காளான் அப்பளம்/வடகம்

காளான் விழுதை அப்பளம் அல்லது வடகம் தயாரிக்கும்போது சேர்த்துச் செய்யலாம். ஆரோக்கியமான தின்பண்டமாக இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

78
விற்பனை செய்வது எப்படி?
Image Credit : Asianet News

விற்பனை செய்வது எப்படி?

சூப்பர் மார்க்கெட்டுகள், இயற்கை அங்காடிகள் (Organic Stores) மற்றும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் உங்கள் பொருட்களை வைக்கலாம். Amazon, Flipkart போன்ற தளங்கள் அல்லது சொந்தமாகச் சமூக வலைதளப் பக்கங்கள் (Instagram/Facebook) தொடங்கி விற்பனை செய்யலாம். பெரிய உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களுக்குச் 'சூப் மிக்ஸ்' மற்றும் 'காளான் பொடி'யைத் மொத்தமாக (Bulk) வழங்கலாம்.

வருமானம் எவ்வளவு கிடைக்கும்? 

சாதாரணமாக ஒரு கிலோ காளானை ரூ.200-க்கு விற்கிறீர்கள் எனில், ஒரு கிலோ காளானை ஊறுகாயாக மாற்றினால், அதன் மூலம் சுமார் ரூ.500 முதல் ரூ.700 வரை வருவாய் ஈட்டலாம். சர்வதேசச் சந்தையில் உலர்ந்த காளான் பொடியின் விலை கிலோ ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை தரத்தை பொறுத்து விற்பனையாகிறது.

88
லாபம் நிச்சயம் உங்கள் கையில்!.
Image Credit : Asianet News

லாபம் நிச்சயம் உங்கள் கையில்!.

மதிப்புக்கூட்டுப் பொருட்கள் மூலம் நஷ்டமே இல்லாமல் தொழிலை நடத்தலாம். அறுவடை செய்யும் அன்றே காளான் விற்கவில்லை என்றாலும், கவலைப்படாமல் அதை உலர்த்தி மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றினால் லாபம் நிச்சயம் உங்கள் கையில்!.

"பழைய தொழில்தான்... ஆனால் லாபம் தரும் புதிய வழி இதில் உள்ளது!" முறையான பயிற்சி, அரசின் மானியம் மற்றும் சந்தைப்படுத்தும் நுணுக்கம் தெரிந்தால், சிப்பிக்காளான் வளர்ப்பு என்பது ஒரு பொன் முட்டையிடும் வாத்துதான். இன்றே உங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை அணுகி, இந்த லாபகரமான பயணத்தைத் தொடங்குங்கள்!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வணிகம்
வணிக யோசனை
வணிக உரிமையாளர்
விவசாயம்
விவசாயக் கடன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Rate Today (ஜனவரி 2) : மறுபடியும் முதல்ல இருந்தா? மீண்டும் தங்கம், வெள்ளி விலை உச்சம்.!
Recommended image2
இந்த 3 வகை வங்கி கணக்குகள் மூடப்படும்.. வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. உஷார்
Recommended image3
நிஜ 'சூரரைப் போற்று'.. டெம்போ டிரைவர் டூ ஏர்லைன் ஓனர்! இளைஞரின் அசாத்திய சாதனை!
Related Stories
Recommended image1
Business: வீட்டில் இருந்தே தினமும் 3 ஆயிரம் சம்பாதிக்கலாம்.! சிப்ஸ் தயாரித்தால் இவ்ளோ லாபம் கிடைக்குமா?!
Recommended image2
Business: சம்பளம் போதலையா? அரசு மானியத்துடன் மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம்.! எப்படி தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved