MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • AI: எதையும் கண்ண மூடிட்டு நம்பாதீங்க.! "ஏஐ" குறித்து கடும் எச்சரிக்கை விடுத்த சுந்தர் பிச்சை.!

AI: எதையும் கண்ண மூடிட்டு நம்பாதீங்க.! "ஏஐ" குறித்து கடும் எச்சரிக்கை விடுத்த சுந்தர் பிச்சை.!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை முழுமையாக நம்புவது ஆபத்தானது என கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை எச்சரித்துள்ளார். AI வழங்கும் தகவல்களை இறுதி முடிவாக கருதாமல், அதனை ஒரு கருவியாக மட்டுமே பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Nov 20 2025, 06:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
AI ஆபத்தானது, எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்
Image Credit : wiki

AI ஆபத்தானது, எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உலகளவில் மிக வேகமான வளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தொழில்நுட்பத்தை முழுமையாக நம்பி செயல்படுவது ஆபத்தானது என கூகுள் நிறுவனம் சிஇஓ சுந்தர் பிச்சை எச்சரித்துள்ளார். ஏஐ மென்பொருட்கள் பல துறைகளில் உதவியாக இருந்தாலும், அவை இன்னும் முழுமையான துல்லியத்தை அடையவில்லை என்பதால், பயனர்கள் இதைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

23
 AI வழங்கும் தகவல்களை இறுதி முடிவாக கருதக்கூடாது
Image Credit : social media

AI வழங்கும் தகவல்களை இறுதி முடிவாக கருதக்கூடாது

சுந்தப் பிச்சை அளித்துள்ள பேட்டியில், செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் திறனை அதிகரிக்க உதவும் கருவி. ஆனால் மக்கள் AI வழங்கும் தகவல்களை இறுதி முடிவாக கருதக்கூடாது என தெரிவித்துள்ளார். அது ஒரு கூடுதல் ஆதாரமாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனவு்ம சுந்தர் பிச்சை கூறினார். கூகுள் உருவாக்கிய ஜெமினி போன்ற மேம்பட்ட மாடல்களுமே தவறுகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதை அவர் மறைக்கவில்லை.

Related Articles

Related image1
ஒட்டுமொத்த ஆந்திராவும் மாறப்போகுது.. சுந்தர் பிச்சையின் சிறுவயது கனவு.. AI-ல் மாறும் இந்தியா!
Related image2
கூகுள் பயனர்களுக்கு ஜாக்பாட்! விலையுயர்ந்த Gemini veo 3 AI வீடியோ கருவி அனைவருக்கும் இலவசம்.. சுந்தர் பிச்சை அறிவிப்பு!
33
பொறுப்புடன் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்
Image Credit : social media

பொறுப்புடன் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்

மேலும், AI துறையில் தற்போது உருவாகியிருக்கும் முதலீட்டு வெடிப்பு குறித்து அவர் கவலை தெரிவித்தார். சந்தையில் ஏஐ நிறுவனங்களின் மதிப்பு மிகையாக உயர்த்தப்படுவதால், இது "AI பப்பிள்" எனப் பெயரிடப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இது டாட்-காம் பப்பிள் உடைந்த காலத்துடன் ஒப்பிடத்தக்க நிலை என்றும், அந்த பப்பிள் உடைந்தால் உலகின் எந்த பெரிய நிறுவனமும் அதன் தாக்கத்திலிருந்து முற்றிலும் தப்ப முடியாது என்றும் பிச்சை எச்சரித்தார்.

கூகுள் போன்ற நிறுவனங்களும் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் சிலர் வலுவாக மீளலாம், ஆனால் முழுமையாக பாதிப்பு இல்லாமல் இருப்பது சாத்தியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏஐ துறையில் கூகுள் தொடர்ந்து பெரும் முதலீடுகளைச் செய்து வருகிறது. குறிப்பாக, பிரிட்டனில் ஏஐ ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக பல பில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனினும், ஏஐ வளர்ச்சிக்கு மிக அதிக மின்சார பயன்பாடு தேவைப்படும் என்பதால், கூகுளின் கார்பன் நெட்-சீரோ நோக்கு தாமதப்பட வாய்ப்புள்ளதாகவும் பிச்சை தெரிவித்தார்.

ஏஐ மனிதர்களை மாற்ற வரும் தொழில்நுட்பம் அல்ல என்றும் நம்மை மேலும் திறமையாக மாற்ற உதவும் கருவி மட்டுமே என குறிப்பிட்ட அவர், அதனை பொறுப்புடன் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். 

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்
தொழில்நுட்பச் செய்திகள்
வணிகம்
சுந்தர் பிச்சை
கூகிள்
செயற்கை நுண்ணறிவு
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரிசர்வ் வங்கியின் புதிய டொமைன் உத்தரவு! மொத்தமாக மாறிய வங்கி இணையதளங்கள்!
Recommended image2
தங்கத்தில் எப்போது முதலீடு செய்யலாம்.? நிபுணர்கள் கூறும் அட்வைஸ் இதுதான்.. நோட் பண்ணுங்க
Recommended image3
Business: ரூ.3 ஆயிரம் முதலீட்டில் மாதம் 30 ஆயிரம் வருமானம்! பெண்களுக்கு கைகொடுக்கும் அற்புத தொழில்.!
Related Stories
Recommended image1
ஒட்டுமொத்த ஆந்திராவும் மாறப்போகுது.. சுந்தர் பிச்சையின் சிறுவயது கனவு.. AI-ல் மாறும் இந்தியா!
Recommended image2
கூகுள் பயனர்களுக்கு ஜாக்பாட்! விலையுயர்ந்த Gemini veo 3 AI வீடியோ கருவி அனைவருக்கும் இலவசம்.. சுந்தர் பிச்சை அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved