- Home
- Business
- பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே பொதுமக்களுக்கு வந்த குட்நியூஸ்! கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது!
பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே பொதுமக்களுக்கு வந்த குட்நியூஸ்! கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது!
பிப்ரவரி 1 முதல் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.6.50 குறைந்து ரூ.1,959.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பு பொதுமக்களுக்கு வந்த குட்நியூஸ்! கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா விலைக்கு ஏற்றார் போல இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், கிட்டத்தட்ட பல மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. அதே நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்கள்
ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை தொடந்து உயர்ந்து வந்தது. பின்னர் 6 மாதங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது.
இதையும் படிங்க: பழைய ஓய்வூதியத் திட்டம்! ஆசிரியர்கள் சாலையில் இறங்கி போராடுறாங்க மனம் இரங்கவில்லையா? சொல்வது யார் தெரியுமா?
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை
இந்நிலையில், பிப்ரவரி 1ம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் குறைத்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.6.50 காசுகள் குறைந்து ரூ.1,959.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலை
அதேநேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.818.50க்கு விற்பனையாகிறது. கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படத்தியுள்ளது.