MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Loan: தங்கப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற முடியுமா? எங்கு வாங்கலாம் தெரியுமா?

Gold Loan: தங்கப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற முடியுமா? எங்கு வாங்கலாம் தெரியுமா?

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்கப் பத்திரம் வீட்டில் தங்கம் வைப்பதை விடப் பாதுகாப்பானது மட்டுமல்லாமல், தேவையானபோது அடமானம் வைத்து கடன் பெறவும் உதவுகிறது. பத்திரத்தின் சந்தை மதிப்பில் 60% வரை கடனாகப் பெறலாம்.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Jul 02 2025, 01:39 PM IST| Updated : Jul 02 2025, 01:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
உலோக தங்கத்தை விட பாதுகாப்பானது தெரியுமா?
Image Credit : our own

உலோக தங்கத்தை விட பாதுகாப்பானது தெரியுமா?

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிடும் தங்கப் பத்திரம் (Sovereign Gold Bond – SGB) என்பது, நமது வீட்டில் உலோகம் தங்கம் வைப்பதைவிட பாதுகாப்பானது, வருமானம் தருவதும், தேவையானபோது அடமானம் வைத்து கடன் பெறுவதற்கும் ஏற்றதாகும். பலரும் தங்கம் வாங்கி வைப்பதற்குப் பதிலாக தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்கிறார்கள்.

28
தங்கப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற முடியுமா?
Image Credit : iSTOCK

தங்கப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற முடியுமா?

ஆம், 100% நிச்சயமாக தங்கப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெறலாம். தங்கப் பத்திரம் என்பது பங்குச் சந்தையில் விற்பனை செய்யக்கூடிய திறன் கொண்ட பத்திரமாக இருக்கிறது. அதனால் இது வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் உயர்மட்ட மதிப்பு கொண்ட ஆவணமாகும். குறிப்பாக, பத்திரத்தின் அசல் நகலுடன், உங்கள் பெயரில் உள்ளது என்பதை நிரூபிக்கும் ஆவணங்களைச் சமர்ப்பித்தால் கடன் பெறுவது சுலபம்.

Related Articles

Related image1
Gold Loan : தங்கக் கடன்கள் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கிறதா? கடன் வாங்குபவர்கள் கவனத்திற்கு!
Related image2
Silver: கொஞ்சம் முதலீடு.! மிஞ்சும் வருமானம்.! கிராம்களில் வாங்கினாலே போதும்.!
38
யார் யார் கடன் வழங்குகிறார்கள்?
Image Credit : our own

யார் யார் கடன் வழங்குகிறார்கள்?

  1. பொதுத்துறை வங்கிகள் (SBI, பஞ்சாப் நேஷனல் வங்கி போன்றவை)
  2. தனியார் வங்கிகள் (HDFC, ICICI, Axis போன்றவை)
  3. நகர மற்றும் கிராம வங்கி கிளைகள்
  4. NBFC (Non-Banking Finance Companies) – மொத்த நிதி நிறுவனங்கள்

இதற்கான நடைமுறை மிக எளிமையானது. உங்கள் வங்கி கணக்கு இருக்கும் கிளையில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். சில வங்கிகள் ஆன்லைன் மூலமும் இந்த வசதியை வழங்குகின்றன.

48
எவ்வளவு கடன் கிடைக்கும்?
Image Credit : our own

எவ்வளவு கடன் கிடைக்கும்?

தங்கப் பத்திரத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் 60% வரை கடனாக பெற முடியும். உதாரணத்திற்கு, உங்கள் பத்திரத்தின் தற்போதைய மதிப்பு ரூ.5 லட்சம் என்றால், சுமார் ரூ.3 லட்சம் வரை கடன் கிடைக்கும்.சில வங்கிகள் குறைந்தபட்சம் ரூ.20,000 கடனாக வழங்கும். அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை பெற முடியும். இது வங்கி வங்கி மாறுபடும். கூடுதல் தொகை தேவைப்பட்டால், கூடுதல் பத்திரங்களின் அடிப்படையில் கடன் பெறலாம்.

58
கடனுக்கு வட்டி எவ்வளவு?
Image Credit : our own

கடனுக்கு வட்டி எவ்வளவு?

தங்கப் பத்திர அடிப்படையிலான கடனுக்கு, பொது வங்கிகள் சுமார் வருடம் ஒன்றுக்கு 10.5% வட்டி வசூலிக்கின்றன. சில வங்கிகள் 9.75% முதல் 12% வரை வட்டி நிர்ணயிக்கின்றன. NBFCகளில் வட்டி சற்று அதிகமாக இருக்கும். மேலும், வட்டி விகிதம் உங்கள் சிபில் ஸ்கோர், பத்திரத்தின் அளவு போன்ற காரணிகளைப் பொறுத்தும் மாறும்.கடன் தொகை, காலம் ஆகியவற்றின் அடிப்படையில் மாத தவணை (EMI) அல்லது கூட்டு அடங்கும் முறையில் (Bullet Repayment) திருப்பி செலுத்தலாம்.

68
இதற்கான முக்கிய ஆவணங்கள்
Image Credit : Getty

இதற்கான முக்கிய ஆவணங்கள்

  1. தங்கப் பத்திரத்தின் அசல் பத்திரம் அல்லது Demat ஸ்டேட்மென்ட்
  2. அடையாள அட்டை – ஆதார், பான், ஓட்டர் ஐடி
  3. முகவரி ஆதாரம்
  4. கடன் விண்ணப்பப் படிவம்
  5. உங்கள் வருமானத்தை நிரூபிக்கும் ஆவணங்கள் (சில வங்கிகள் கேட்கலாம்)
78
கடன் எடுக்கும்போது கவனிக்க வேண்டியவை
Image Credit : our own

கடன் எடுக்கும்போது கவனிக்க வேண்டியவை

  • பத்திரத்தின் சந்தை மதிப்பை பங்கு சந்தையில் சரிபார்க்கவும்.
  • வட்டி விகிதத்தை பல வங்கிகளுடன் ஒப்பிட்டு சிறந்ததைக் தேர்வு செய்யவும்.
  • கடன் தவணைகள், வழிகாட்டுதல் கட்டணங்கள் போன்ற விவரங்களை முழுமையாக அறிந்து ஒப்பந்தம் எழுதவும்.
  • கடன் தவணையில் தவறு நடந்தால் பத்திரம் வங்கிக்கு உரிமையாகும்.
88
ஆர்.பி.ஐ தங்க பத்திரம் அவசரத்திற்கு உதவும்
Image Credit : our own

ஆர்.பி.ஐ தங்க பத்திரம் அவசரத்திற்கு உதவும்

ஆர்.பி.ஐ தங்கப் பத்திரம், பாதுகாப்பான முதலீடு மட்டுமல்ல, நிதி அவசரக் காலங்களில் அடமானம் வைத்து எளிதில் கடனும் பெற இயலும். இதில் வட்டி விகிதமும் சாதாரண தங்க கடனைவிட சிறந்ததாக இருக்கிறது. எனவே, தங்கம் வாங்கி வைப்பதைவிட, தங்கப் பத்திரத்தைத் தேர்ந்தெடுத்து உங்கள் முதலீட்டை பாதுகாப்புடன் வைத்துக்கொண்டு, தேவைக்கு ஏற்ப கடன் வசதி பெறுவது நல்ல தேர்வாக அமையும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தங்க நகை கடன்
தங்க நகை
வணிகம்
முதலீடு
வங்கி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved