- Home
- Business
- கோவை–பெங்களூரு ரயிலில் முக்கிய மாற்றம்.. மார்ச் 15 முதல் அமல்.. வந்தே பாரத் பயணிகள் கவனத்திற்கு
கோவை–பெங்களூரு ரயிலில் முக்கிய மாற்றம்.. மார்ச் 15 முதல் அமல்.. வந்தே பாரத் பயணிகள் கவனத்திற்கு
கோவை – பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 15, 2026 முதல் மாற்றியமைக்கப்படுவதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மற்ற நிலையங்களின் நேரங்களில் எந்த மாற்றமும் இல்லை.

கோவை–பெங்களூரு வந்தே பாரத் ரயில்
இந்தியாவில் ரயில் போக்குவரத்து மிகவும் முக்கியமான பொதுப் போக்குவரத்து சேவையாக உள்ளது. தினமும் சுமார் 13,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் சராசரியாக 4 கோடி மக்கள் பயணம் செய்கிறார்கள். சாதாரண பயணிகள் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் என பல்வேறு வகை சேவைகள் மூலம் இந்திய ரயில்வே மக்களுக்கு பயண வசதி வழங்கப்படுகிறது.
ரயில்வே அறிவிப்பு
பேருந்து அல்லது கார் பயணத்துடன் ஒப்பிடும்போது, ரயில் பயணம் பலருக்கும் சௌகரியமானதாகக் கருதப்படுகிறது. பாதுகாப்பு, வசதி மற்றும் குறைந்த செலவு ஆகிய காரணங்களால் பெரும்பாலானோர் ரயில் சேவையைத் தேர்வு செய்கிறார்கள். அதனால் பயணிகளின் வசதியை அதிகரிக்கும் நோக்கில் இந்திய ரயில்வே தொடர்ந்து புதிய சேவைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ரயில்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
வந்தே பாரத் ரயில் பயணிகள் கவனம்
அந்த வகையில் கோவை – பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 20642/20641) முக்கிய சேவையாக இருந்து வருகிறது. 377 கிலோமீட்டர் தூரத்தை சுமார் 6 மணி 20 நிமிடங்களில் கடக்கும் இந்த அதிவேக ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் ஓசூர் ஆகிய ஐந்து நிலையங்களில் நின்று செல்கிறது. வியாழக்கிழமை தவிர வாரத்தின் மற்ற அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
கோவை – பெங்களூரு வழித்தடம்
கோவை – பெங்களூரு வழித்தடத்தில் இயங்கும் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரத்தில் சிறிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஓசூர் நிலையத்தில் ரயில் வரும் நேரம் மாற்றப்பட்டுள்ளது, அந்த பகுதி பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த புதிய நேர அட்டவணை மார்ச் 15, 2026 முதல் அமலுக்கு வருகிறது.
வந்தே பாரத் ரயில் கட்டணம்
கோவையிலிருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில், பெங்களூரு கேண்ட்டை மதியம் 1.45 மணிக்கு சென்றடைகிறது. தற்போது ஓசூர் நிலையத்தில் இந்த ரயில் வருகை நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை மதியம் 12.03 மணிக்கு வந்த இந்த ரயில், மார்ச் 15 முதல் மதியம் 12.13 மணிக்கு ஓசூர் சென்றடையும். புறப்படும் நேரமும் 12.05 மணியிலிருந்து 12.15 மணியாக மாற்றப்பட்டுள்ளது. மற்ற நிலையங்களின் நேரங்களில் எந்த மாற்றமும் இல்லை. கோவை - பெங்களூரு இடையே ஏசி சேர் கார் கட்டணம் ரூ.1,260 ஆகவும், எக்ஸிகியூட்டிவ் சேர் கார் கட்டணம் ரூ.2,190 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

