MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • அப்பாடி ஒருவழியா விடிவுகாலம் வந்துடுச்சு! அக்கவுண்டல் செக் போட்டதும் உடனடி பணம் - RBI அதிரடி

அப்பாடி ஒருவழியா விடிவுகாலம் வந்துடுச்சு! அக்கவுண்டல் செக் போட்டதும் உடனடி பணம் - RBI அதிரடி

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பின்படி, அக்டோபர் 4, 2025 முதல் செக் கிளியரன்ஸ் சில மணி நேரங்களில் முடிவடையும். CTS முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, continuous clearing முறையில் இயங்கும்.

1 Min read
Vedarethinam Ramalingam
Published : Aug 14 2025, 11:16 AM IST| Updated : Aug 14 2025, 11:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
காத்திருந்தது கடந்த காலம்.!
Image Credit : Google

காத்திருந்தது கடந்த காலம்.!

வங்கிகளில் செக் செலுத்தினால் இரண்டு வேலை நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய அவசர நிலை இனி கடந்த காலமாகிறது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின் படி, அக்டோபர் 4, 2025 முதல் செக் கிளியரன்ஸ் சில மணி நேரங்களில் முடிவடையப் போகிறது. இதற்காக தற்போது பயன்படுத்தப்படும் Cheque Truncation System (CTS) முறையில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

24
Processing டைம் குறைகிறது.!
Image Credit : Google

Processing டைம் குறைகிறது.!

இப்போது வரை CTS ‘batch processing’ முறையில் இயங்கியது. அதனால் தான் T+1 அல்லது அதிகபட்சம் இரண்டு நாட்கள் ஆகி வந்தது. ஆனால் இனி அது continuous clearing முறையில், அதுவும் on-realisation-settlement அடிப்படையில் இயங்கும். இதன் மூலம் வங்கிகள் செக்கை ஸ்கேன் செய்து உடனடியாக பரிமாற்றம் செய்யும். சில மணி நேரங்களுக்குள் வாடிக்கையாளர் கணக்கில் பணம் சேர்க்கப்படும்.

Related Articles

Related image1
Gpay, Phonepeஇல் பணம் அனுப்ப கட்டணம்? எவ்வளவு நாள் தான் இலவசமா கொடுக்க முடியும்? RBI ஆளுநர்
Related image2
புதிதாக கடன் வாங்க போறீங்களா? முதலில் ஐடி வாங்கிக்கோங்க! RBI புதிய முயற்சி
34
கட்டம் கட்டமாக அமல்.!
Image Credit : Getty

கட்டம் கட்டமாக அமல்.!

இந்த மாற்றம் இரண்டு கட்டங்களாக அமல்படுத்தப்படுகிறது. முதல் கட்டம் அக்டோபர் 4 முதல் ஜனவரி 2, 2026 வரை. இதில் காலை 10 மணி முதல் 4 மணி வரை செக்குகள் அனுப்பப்படும். மாலை 7 மணிக்குள் வாங்கிய வங்கி (drawee bank) பதில் தர வேண்டும். பதில் தராதால் அது ‘deemed approved’ என கருதப்பட்டு செக் கிளியர் ஆகிவிடும். இரண்டாம் கட்டம் ஜனவரி 3, 2026 முதல். இதில் மூன்று மணி நேரத்துக்குள் செக் உறுதி செய்யப்பட வேண்டும். கிளியரிங் முடிந்ததும் ஒரு மணி நேரத்துக்குள் வாடிக்கையாளர் கணக்கில் தொகை சேர்க்கப்படும்.

44
பணம் உடனடியாக கணக்கில் வரும்
Image Credit : Getty

பணம் உடனடியாக கணக்கில் வரும்

இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் நன்மைகள் பல. முக்கியமாக, பணம் உடனடியாக கணக்கில் வரும். பிசினஸ் பரிவர்த்தனைகளில் தாமதம் குறையும். வங்கிகளுக்குள் ஏற்படும் settlement risk குறையும். வாடிக்கையாளர்களின் banking அனுபவமும் மேம்படும். செக் கிளியரன்ஸ் என்பது இனி இரண்டு நாட்கள் காத்திருக்கும் செயலாக இல்லாமல், சில மணி நேரங்களில் முடிந்துவிடும் ஒரு வேகமான முறையாக மாறுகிறது.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வங்கி
வங்கிக் கணக்கு
வங்கி விதிகள்
வங்கி விதிகள்
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்
இந்திய ரிசர்வ் வங்கி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved