- Home
- Business
- Gold Rate Today : மீண்டும் உயர தொடங்கியது தங்கம் விலை.. எவ்வளவு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!
Gold Rate Today : மீண்டும் உயர தொடங்கியது தங்கம் விலை.. எவ்வளவு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகளின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்ஷய திருதி வருவதால் வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் நிலை குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் உயர தொடங்கியுள்ளது.
நேற்றைய நிலவரப்படி, சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.44,800க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5.600க்கு விற்பனையானது.
இன்றைய (ஏப்ரல் 11) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,040ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5.600ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,078ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 48,624ஆக விற்பனையாகிறது.
வெள்ளி ஒரு கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.80.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 80.400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.