MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரூ.53000 கோடியை இழந்த அதானி குழுமத்தின் முதலீட்டாளர்கள்! மீள்வது எப்போது?

ரூ.53000 கோடியை இழந்த அதானி குழுமத்தின் முதலீட்டாளர்கள்! மீள்வது எப்போது?

அண்மையில் ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால், இன்றைய சந்தையின் தொடக்கத்திலிருந்தே அதானி குழுமத்தின் பங்களுகள் சரிவை சந்தித்து வருகின்றன. அதனால் 7 சதவீம் சரிந்து ரூ.53000 கோடி நடி்டம் ஏற்பட்டுள்ளது. 

2 Min read
Author : Dinesh TG
| Updated : Aug 12 2024, 01:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Gautam Adani

Gautam Adani

வாரத்தின் தொடக்க நாளான இன்று இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தையான BSE குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் (Sensex) 409 புள்ளிகள் சரிந்து 79,296 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை NSE குறியீட்டு எண்ணான நிப்டி (Nifty) 47 புள்ளிகள் குறைந்து 24,320 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

அண்மையில், ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழுமத்திற்கு சொந்தமான எல்லா நிறுவன பங்குகளும் சரிவடைந்துள்ளன. அதன்படி அதானி என்டர்பிரைசஸ்(adani enterprises), அதானி போர்ட்ஸ்(adani Ports), அதானி பவர்(adani Power), அதானி என்ர்ஜி(adani energy) உள்ளிட்ட பங்குகளின் விலைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.

24

53000 கோடி இழப்பு!

அதானி குழும பங்குகள் சுமார் 7% வரை வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது, அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சுமார் 53,000 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சரிந்த வேகத்திலேயே மீண்டும் பங்குகள் ஏற்றம் கண்டும் வருகின்றன. ஏனவே, உண்மையான இழப்பு எவ்வளவு என்பது பிற்பகலில் தான் தெரியவரும்.

34

உங்கள் பணம் பத்திரம்!

அதானி குழுக பங்குகளின் வீழ்ச்சி எதுவரை செல்கிறது என முதலீட்டாளர்கள் அவதானிக்க வேண்டும் என பங்குசந்தை நிபுனர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், புதிய வீழ்ச்சிக்கு பங்குசந்தை செல்கிறதா எனப்தை ஆராய்ந்து அடுத்த முதலீட்டை செய்ய வேண்டும் என்கின்றனர்.இன்றைய சந்தையின் தொடக்கமும், முடிவும் அடுத்தடுத்த நாட்களிலும் தொடரும் எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹிண்டன்பர்க் சர்ச்சைக்கு பிறகு முதல் முறையாக மௌனம் கலைத்த அதானி.. என்ன சொன்னார் தெரியுமா?
 

44

ஹிண்டன்பர்க் அறிக்கை

(SEBI)செபியின் தலைவர் மதாபி பூரி புச் (Madhabi Puri buch) மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் அதானியின் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்தது. இந்த அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தங்கள் எக்ஸ் கணக்கை SEBI லாக் செய்து வைத்துள்ளது. ஹிண்டன்பர்க்-ன் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது. செபியின் தலைவர் மாதபி புரி புச்சும் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டு செபியின் நம்பகத்தன்மை மீதான தாக்குதல்: மாதபி புரி புட்ச் கண்டனம்
 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

DT
Dinesh TG
சென்செக்ஸ்
பங்குச்சந்தை

Latest Videos
Recommended Stories
Recommended image1
பழைய தங்கத்தை விற்றால் லாபமா? மாற்றினால் லாபமா? உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும் ரகசியம் இதோ!
Recommended image2
வாங்கும் போது இனிக்கும், கட்டும் போது கசக்கும்.. தனிநபர் கடன் vs கிரெடிட் கார்டு EMI.. எது பெஸ்ட்..?
Recommended image3
கர்ப்பிணிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. ரூ.5000 அள்ளி கொடுக்கும் அரசு..! விண்ணப்பிப்பது எப்படி..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved