8வது ஊதியக் குழு – அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு ஊதிய உயர்வு கிடைக்கும்??
மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த எதிர்பார்ப்புகளையும், 8வது ஊதியக் குழுவின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளையும் இந்த் கட்டுரை ஆராய்கிறது. குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுமா என்பது போன்ற முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன.

8வது ஊதியக்குழு ஏன் தாமதம்?
மத்திய அரசு 8வது ஊதியக் குழுவை அமைப்பதாக மோடி அரசு அறிவித்ததிலிருந்து, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? என்ற ஆர்வமும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளன. 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படாவிட்டால், ஜனவரி 1, 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்கள் திருத்தப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களில் தாமதத்தை சந்திக்க நேரிடும். ஜனவரி 16, 2025 அன்று 8வது சம்பளக் குழுவை உருவாக்குவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது, ஆனால் அந்த குழுவிற்கு இன்னும் தலைவரை நியமிக்கவில்லை. மேலும் அதன் பணிக்கால விதிமுறைகளும் இறுதி செய்யப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில், அதன் பரிந்துரைகள் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுமா என்பதுதான் எழும் கேள்வி எழுந்துள்ளன.
எப்போது அமல்?
ஊதியக்குழு ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒருமுறை செயல்படுத்தப்படுகிறது. இது மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தையும் ஓய்வூதியத்தையும் அதிகரிக்கிறது. முன்னதாக, 7வது சம்பளக் குழு ஜனவரி 1, 2016 அன்று அமல்படுத்தப்பட்டது. அதே நேரத்தில், 8வது சம்பளக் குழு ஜனவரி 1, 2026 முதல் அமல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊதிய உயர்வின் முக்கிய காரணி – Fitment Factor என்ன?
Fitment Factor என்பது, புதிய அடிப்படை ஊதியத்தை கணிக்க பயன்படுத்தப்படும் கணக்கு விகிதமாகும்.
6வது ஊதியக் குழு (2006) – 54% ஊதிய உயர்வு (Fitment Factor: 1.86)
7வது ஊதியக் குழு (2016) – சுமார் 14% ஊதிய உயர்வு (Fitment Factor: 2.57)
8வது ஊதிய உயர்வு – எவ்வளவு இருக்கும்?
தற்போதைய ஊதியத்திற்கான உயர்வு குறித்து ஊழியர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. இது 2.86 ஆகவோ 1.92 ஆகவோ இருக்கட்டும், உண்மையான உயர்வு எவ்வளவு? ஊடகத் தகவல்களின் படி, ஃபிட்மெண்ட் ஃபேக்டர் அடிப்படை ஊதியத்திற்கு பெருக்கி போடப்படும். உதாரணமாக, 1.92 ஃபிட்மெண்ட் ஃபேக்டர் பரிந்துரை செய்யப்படுமானால், குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ. 34,560 ஆகும். அதேபோல், 2.86 ஃபிட்மெண்ட் ஃபேக்டர் பயன்படுத்தப்பட்டால், குறைந்தபட்ச ஊதியம் ரூ. 51,480 ஆகும்.
தற்போதைய நிலைமை என்ன?
Terms of Reference (ToR) விரைவில் வெளியிடப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.40 பணியாளர்கள் 8வது ஊதியக் குழுவில் நியமிக்கப்பட உள்ளனர், பெரும்பாலானோர் மற்ற துறைகளிலிருந்து பிரதிநிதியாக வருகின்றனர். சபைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
யார் யார் பயனடைவார்கள்?
47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள்
65 லட்சம் ஓய்வூதியதாரர்கள்
அனைவரும் இந்த உயரும் ஊதியம் மற்றும் ஓய்வூதிய மாற்றங்களை 2026 ஜனவரி முதல் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில், 7வது ஊதியக் குழுவின் கால அவகாசம் 2025 டிசம்பர் 31ல் முடிவடைகிறது.
நிதிச் சுமை?
7வது ஊதியக் குழு அரசுக்கு ₹1.02 லட்சம் கோடி நிதிச் சுமையைக் கொடுத்தது. 8வது ஊதியக் குழுவின் பரிந்துரை, குறிப்பாக 2.86 போன்ற உயர்ந்த Fitment Factor ஏற்கப்பட்டால், இந்தச் சுமை இன்னும் அதிகமாகும். 8வது ஊதியக் குழுவின் பரிந்துரை 2026 ஜனவரி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Fitment Factor 1.92 என்றால், குறைந்தபட்ச ஊதியம் ₹34,560 ஆகும். 2.86 என்றால் ₹51,480 ஆகலாம். ஆனால் 2.86 பெற வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. 15%-22% வரை உயர்வு இருக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
அரசுக்கு நிதிச்சுமையா?
தற்போது, சுமார் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் ToR இறுதி செய்யப்படுவதை மற்றும் ஊதியக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதை எதிர்நோக்கிக் காத்துள்ளனர், இதன்மூலம் குழுவின் பரிந்துரைகள் சரியான நேரத்தில் அமல்படுத்தப்படலாம். சொல்ல வேண்டுமெனில், 8வது ஊதியக் குழுவின் காலாவதி ஜனவரி 2026 முதல் துவங்கும், ஏனெனில் 7வது ஊதியக் குழுவின் காலாவதி 31 டிசம்பர் 2025 அன்று முடிவடைகிறது. முந்தைய ஊதியக் குழு 2016 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது, அதனால் அரசின் மீதான கூடுதல் நிதிசுமை ரூ. 1.02 லட்சம் கோடி ஆக இருந்தது.
தாமதத்தால் பாதிப்பா?
8வது சம்பளக் குழு 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை திருத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 7வது சம்பளக் குழுவை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டாலும், காலக்கெடுவுக்குப் பிறகு ஓய்வு பெறும் ஊழியர்களும் நிலுவைத் தொகையைப் பெற உரிமையுடையவர்கள் என்பதைக் காட்டுகின்றன. 7வது சம்பளக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் அரசாங்கத்தால் ஒரு ஆண்டு தாமதம் ஏற்பட்டது, ஆனால் பின்னர் அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.