8-வது ஊதியக் குழு: திறமை காட்டாவிட்டால் சம்பளம் உயராது!
8-வது ஊதியக் குழு (8th pay commission) மத்திய அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றும் ஒரு புதிய கண்ணோட்டத்துடன் வந்துள்ளது. 8-வது ஊதியக் குழுவில் அரசு ஊழியர்களுக்கு புதிய விதிமுறைகள் வரவுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பள அமைப்பு வரவுள்ளது. இப்போது பதவிக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயம் செய்யப்படாது. திறமை அடிப்படையில் கூடுதல் போனஸ் கிடைக்கும்.
அரசு ஊழியர்களின் செயல்திறன் அல்லது பணித்திறன் அடிப்படையில் சம்பள உயர்வு என்பது புதியதல்ல. நான்காவது ஊதியக் குழு முதல் முறையாக மாறுபடும் ஊதிய உயர்வை அறிமுகப்படுத்தியது.
ஐந்தாவது ஊதியக் குழு அரசு சம்பள கட்டமைப்பில் செயல்திறன் அடிப்படையிலான ஊதியத்தை அறிமுகப்படுத்தியது. ஆறாவது ஊதியக் குழுவின் முதல் பகுதியில் ஒரு கட்டமைப்பு முன்மொழிவு வழங்கப்பட்டது.
அனைத்து துறை ஊழியர்களுக்கும் செயல்திறன் சார்ந்த ஊதியம் வேண்டும் என ஏழாவது ஊதியக் குழு கூறியது. ஏழாவது ஊதியக் குழுவின் முடிவில், எட்டாவது ஊதியக் குழு PRP-க்கு வடிவம் கொடுக்கிறது.
இந்த புதிய முறை லஞ்சம் மற்றும் அரசியல் மூலம் வாங்கிய வேலைகளை ரத்து செய்யும். அரசு வேலை என்பது எதிர்காலத்திற்கான உத்தரவாதம் மட்டுமல்ல, பொறுப்பு மற்றும் திறமைக்கான பரிசு.
ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் - ஆர்பிஐ அதிரடி
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.