- Home
- பொழுதுபோக்கு
- Bigg Boss
- Bigg Boss Tamil 10 : விமர்சகர் பிரசாந்தை விட அதிக ஓட்டு வாங்கி பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றவர் - யார் இந்த ஜாவித்?
Bigg Boss Tamil 10 : விமர்சகர் பிரசாந்தை விட அதிக ஓட்டு வாங்கி பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றவர் - யார் இந்த ஜாவித்?
Bigg Boss Contestant Javeed : பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் ஓப்பனிங் மேடையில் பிரபல விமர்சகர் பிரசாந்தை ஓட்டிங்கில் தோற்கடித்து பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார் ஜாவித். அவர் யார் என்பதை பார்க்கலாம்.
யார் இந்த ஜாவித்?
மாடலிங் துறையில் தனது பயணத்தைத் தொடங்கி, நடிப்பில் தடம் பதிக்க காத்திருக்கும் இளம் திறமைசாலியான ஜாவித் ஷெரீஃப், தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 10ல் போட்டியாளராக களமிறங்கி உள்ளார். கேமரா முன் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஜாவித், மாடலிங் மூலம் பொழுதுபோக்கு உலகில் தனது அடையாளத்தை உருவாக்கி வருகிறார். அதே நேரத்தில், நடிப்பின் மீதான ஆர்வத்தையும் தொடர்ந்து வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், சினிமா மற்றும் தொலைக்காட்சி ரசிகர்களிடம் தனது பெயரை கொண்டு செல்ல பிக் பாஸ் போன்ற மிகப்பெரிய மேடை அவருக்கு முக்கியமான வாய்ப்பாக அமையக்கூடும்.
Bigg Boss Tamil 10 : மாற்றம் தேடி பிக் பாஸ் வந்த மதுரைப் பொண்ணு... யார் இந்த முத்தழகி?
மாடலிங் டூ பிக் பாஸ்
மாடலிங் துறையில் கிடைத்த அனுபவம், கேமரா முன் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதற்கு அவருக்கு பலமாக இருக்கலாம். ஆனால், பிக் பாஸ் வீடு என்பது கேமரா முன் நிற்பதைத் தாண்டி, போட்டி, மன அழுத்தம், உறவுகள் மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டிய களம். எனவே, அந்த சூழலில் ஜாவித்தின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bigg Boss Tamil 10: யார் இந்த ஷாத்திகா? சினிமா முதல் சின்னத்திரை வரை கலக்கிய நடிகையின் முழு கதை
அடுத்த ஹரிஷ் கல்யாண்?
இளம் தலைமுறையைச் சேர்ந்த மாடல் மற்றும் வளரும் நடிகர் என்ற அடையாளத்துடன் பிக் பாஸ் தமிழ் 10 நிகழ்ச்சியில் அவர் நுழைந்துள்ளதால், அவரது ரசிகர் வட்டம் மேலும் விரிவடைய வாய்ப்புள்ளது. குறிப்பாக, நடிப்புத் துறையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் தயாராகி வரும் ஜாவித்துக்கு இந்த நிகழ்ச்சி ஒரு பெரிய அறிமுக மேடையாக அமையலாம். குறிப்பாக பிக் பாஸிற்கு வந்து தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் ஹரிஷ் கல்யாணைப் போல ஜாவித் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
வேலையை தூக்கி எறிந்த ஜாவித்
ஜாவித் சுமார் 10 ஆண்டுகளாக தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்திருக்கிறார். அவருக்கு பெரியளவில் அங்கீகாரம் எதுவும் கிடைக்காததால், தன் வேலையை தூக்கி எறிந்துவிட்டு, தனக்கான அங்கீகாரத்தை மக்கள் மத்தியில் பெற பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார் ஜாவித். இவர் தன்னுடைய இலக்கை நோக்கி பயணித்தால் நிச்சயம் இறுதிவரை முன்னேற வாய்ப்பு உள்ளது. இவருக்கு தற்போதே ரசிகைகள் கூட்டம் பெருக ஆரம்பித்துவிட்டது. இந்த சீசன் முடிவதற்குள் செலிபிரிட்டியாக மாறிவிடுவார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

