உங்கள் எலெக்ட்ரிக் வண்டி தீப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும்? தப்பிக்க சூப்பர் வழிகள்!
எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்தால், "தெர்மல் ரன்-அவே" மற்றும் விஷ வாயு காரணமாக அருகில் செல்வது மிகவும் ஆபத்தானது. தீயை அணைக்க முயற்சிப்பதும், தீ அணைந்த பிறகு அருகில் செல்வதும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

எலெக்ட்ரிக் வாகனங்கள்
பெட்ரோல், டீசல் உயர்வால் நாளுக்கு நாள் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோடைக்காலம் என்பதால் எலெக்ட்ரிக் வாகனங்கள் அவ்வப்போது தீப்படிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அப்படி தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தப்பிப்பது என்று பலருக்கும் இன்னும் தெரிவதில்லை. இந்த வண்டிகளால் ஏற்படும் ஆபத்துகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
எலெக்ட்ரிக் வண்டிக்கு எப்படி சார்ஜ் செய்ய வேண்டும் உங்களுக்கு தெரியுமா?
சார்ஜிங்கை 80% வந்ததும் நிறுத்தி வி வேண்டும். இந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா?
"தெர்மல் ரன்-அவே" (Thermal Runaway) என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கீங்களா?
"SCBA ஹஸ்மத் கியர்" (SCBA Hazmat gear) பற்றி தெரியுமா?
சரி, உங்களுக்குப் பக்கத்தில் ஒரு எலெக்ட்ரிக் வண்டி தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தால். அப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
எக்காரணம் கொண்டும் இதைச் செய்யாதீங்க:
தீப்பிடித்து எரியும் எலெக்ட்ரிக் வண்டியை அணைக்க பக்கத்தில் செல்லக்கூடாது. அப்படி சென்றால் நீங்கள் திரும்பி வருவது சந்தேகம்தான். அங்கே சுமார் 600 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும். அதைவிட மோசமாக HF விஷ வாயு மேகம் உங்களைக் கொன்றுவிடும். தண்ணீர் ஊற்றி வண்டியை அணைக்க முயற்சி செய்ய வேண்டும். நீங்க பக்கெட் மற்றும் குடத்தில் கொண்டு வரும் தண்ணீர் எதுவும் பத்தாது. அதுமட்டுமில்லாமல் அந்த தண்ணீர் அங்கிருக்கும் விஷ வாயுவை உங்கள் முகத்தில் திருப்பிவிடும். அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் மயங்கி விழுவது உறுதி. காருக்குள் இருக்கும் ஃபயர் எக்ஸ்டிங்குஷரை (Fire Extinguisher) பயன்படுத்த வேண்டாம். இது பேட்டரியின் "ரன்-அவே" பிரச்சனை. பவுடர் வகை தீயணைப்பான் இங்கே வேலைக்கு ஆகாது.
தீ அணைத்த பிறகும் ஆபத்து
தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்து விட்டு போன பிறகும், அந்த வண்டி மீண்டும் தீப்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. 24-லிருந்து 48 மணி நேரம் வரை இந்த ஆபத்து நீடிக்கும். அதனால, தீ அணைந்துவிட்டது என்று பக்கத்தில் செல்லக்கூடாது. ஒருமுறை பேட்டரி வெடித்தால் அது அடுத்த இரண்டு நாட்களுக்கு வெடிக்கத் தயாராக இருக்கின்ற ஒரு பாம் மாதிரி. காரணம், உள்ளே இருக்கும் செல்கள் (cells) அதிக வெப்பநிலையில ஒன்றோடு ஒன்று சேர்ந்து மறுபடியும் தீயை உண்டாக்கிடும். இதைத்தான் "ரன்-அவே"னு சொல்கிறோம். வெளியே தீ இல்லை என்றாலும் உள்ளே கடுமையான வெப்பம் இருக்கும். ஞாபகம் வைத்துக்கொண்டு இரண்டு நாளைக்கு அதன் பக்கத்தில் செல்லக்கூடாது.

