MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • பைக், ஸ்கூட்டரில் மூன்று பேர் பயணம் செய்தால் எவ்வளவு அபராதம் தெரியுமா?

பைக், ஸ்கூட்டரில் மூன்று பேர் பயணம் செய்தால் எவ்வளவு அபராதம் தெரியுமா?

இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்வது மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றமாகும். அபராதத்தைத் தவிர்க்கவும், உயிரைப் பாதுகாக்கவும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவது அவசியம்.

1 Min read
Raghupati R
Published : Dec 30 2025, 09:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
இருசக்கர வாகன விதிகள்
Image Credit : Google

இருசக்கர வாகன விதிகள்

சாலையில் அடிக்கடி காணப்படும் ஒரு பொதுவான தவறு தான் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் அடிக்கடி பயணம் செய்வது. இதை பலர் சாதாரண விஷயமாக நினைத்தாலும், இது சட்டவிரோதம் மட்டுமல்ல, உயிருக்கு ஆபத்தான செயலாகவும் கருதப்படுகிறது. போக்குவரத்து விதிகளை மீறி டிரிபிள் ரைடிங் செய்தால், போலீசார் உடனடியாக அபராதம் விதிப்பார்கள்.

மோட்டார் வாகனச் சட்டம் விதிகளின்படி, இருசக்கர வாகனத்தில் ஓட்டுநர் உட்பட அதிகபட்சம் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி உள்ளது. இதை மீறி மூன்று பேர் சென்றால், அது சட்டபூர்வ குற்றமாகும். குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில், இந்த விதி கடுமையாக அமல்படுத்தப்படுகிறது.

டெல்லி போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, டிரிபிள் ரைடிங் குற்றத்திற்கு மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 194C-ன் கீழ் அபராதம் விதிக்கப்படுகிறது. முதல் முறையாக பிடிபட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். அதே தவறை மீண்டும் செய்தால், ஒவ்வொரு முறையும் ரூ.1,000 அபராதம் தொடர்ச்சியாக விதிக்கப்படும்.

22
போக்குவரத்து போலீஸ் அபராதம்
Image Credit : Google

போக்குவரத்து போலீஸ் அபராதம்

அபராதம் மட்டுமே இந்த தவறின் விளைவு அல்ல. இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்வதால் வாகனத்தின் சமநிலை குலையும். திடீர் பிரேக், குழி, திருப்பம் போன்ற நேரங்களில் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. இதில் வாகனத்தில் பயணிப்பவர்களும், சாலையில் செல்லும் பிறரும் ஆபத்தில் சிக்கலாம்.

எனவே, தேவையற்ற அபராதத்தையும், உயிர் அபாயத்தையும் தவிர்க்க போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். “சற்று தூரம்தானே” என்ற அலட்சிய மனப்பான்மை பெரும் விபத்துக்குக் காரணமாகலாம். உங்கள் பாதுகாப்பும், மற்றவர்களின் பாதுகாப்பும் முக்கியம் என்பதால், இருசக்கர வாகனத்தில் எப்போதும் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்யுங்கள்.

Related Articles

Related image1
க்ரூஸர் லுக்… சூப்பர் பைக் பவர்.. டுகாட்டி XDiavel V4 லாஞ்ச்.. விலை எவ்வளவு?
Related image2
27,000+ சார்ஜிங் நிலையங்கள்.. ஒட்டுமொத்த இந்தியாவே மாறுது.. EV ஓட்டுநர்களுக்கு சூப்பர் நியூஸ்

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
போக்குவரத்து விதிகள்
பைக்குகள்
உருளி வண்டிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
க்ரூஸர் லுக்… சூப்பர் பைக் பவர்.. டுகாட்டி XDiavel V4 லாஞ்ச்.. விலை எவ்வளவு?
Recommended image2
27,000+ சார்ஜிங் நிலையங்கள்.. ஒட்டுமொத்த இந்தியாவே மாறுது.. EV ஓட்டுநர்களுக்கு சூப்பர் நியூஸ்
Recommended image3
ரூ.1 லட்சம் சொளையா லாபம்.. ஸ்கோடாவின் No.1 SUV இப்போது இன்னும் மலிவு விலையில்
Related Stories
Recommended image1
க்ரூஸர் லுக்… சூப்பர் பைக் பவர்.. டுகாட்டி XDiavel V4 லாஞ்ச்.. விலை எவ்வளவு?
Recommended image2
27,000+ சார்ஜிங் நிலையங்கள்.. ஒட்டுமொத்த இந்தியாவே மாறுது.. EV ஓட்டுநர்களுக்கு சூப்பர் நியூஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved